Just In
- 1 hr ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 8 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 8 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 11 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ரகசியமாக போர்ஷே கேயென் காரை ஓட்டிவந்த குர்மீத் ராம் ரஹீம்... வெளிச்சத்திற்கு வந்த மர்மம்..!!
ரகசியமாக போர்ஷே கேயென் காரை ஓட்டிவந்த குர்மீத் ராம் ரஹீம்... வெளிச்சத்திற்கு வந்த மர்மம்..!!
பாலியல் வழக்கில் இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற போலி சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிறுது நாட்களுக்கு பிறகு மீண்டும் டிரென்டிங்காகி வருகிறார். அதற்கான காரணத்தை இனி பார்க்கலாம்.
ஆன்மீகவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வாழ்ந்த சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு வாகனங்கள் மீது ஒரு அலாதியான ப்ரிமயம் உண்டு.
சமீபத்தில் ஹரியானா உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், அம்மாநில போலீசார் குர்மீத் ராம் ரஹீமின் ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, ஆசிரமத்தின் கராஜில் பல சுவாரஸ்யமான வாகனங்கள் நிற்பதை கண்டு ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
குர்மீத் விருப்பங்களுக்கு ஏற்றவாறு வாகனங்களை புதிய வித மாடலில் உருவாக்கி, மிரட்சி தரும் தோன்றங்களுடன் அந்த கராஜில் நிற்கவைக்கப்பட்டுள்ளன.
ஒரு கட்டிட காடாக காட்சியளிக்கும் ஆசிரமத்தில், குரிமீத் ராம் ரஹீம் விருப்பங்களுக்கு ஏற்றவாறு கார்களை கட்டமைக்க பிரம்மாண்டமான ஒரு பட்டறையே உள்ளது.
போலீசார் விசிட்டின் போது அந்த ஆசிரமத்திற்குள் பல்வேறு செய்தியாளர்களும் அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
ஆசிரமத்தை ஆய்வு செய்ய வந்த அனைவரையும் வாயடைத்து போகவைத்தது குர்மீத்தின் போர்ஷே கேயென் ஜிடிஎஸ் கார்.
தங்க நிறத்தில் பூச்சு வேலை செய்யப்பட்டு இருந்த இந்த கார், அலுமினியமால் ஃபிரேம் செய்யப்பட்ட கிளாஸ் கண்ணாடிக்குள் நிறுத்தப்பட்டு இருந்தது.
இந்த விலையுயர்ந்த கார் குர்மீத் ராம் ரஹீமுடையது தானா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஆனால் இத்தனை செல்வாக்குடன் அந்த கார் நிறுத்தப்பட்டு இருப்பதை பார்த்த அதிகாரிகள் போர்ஷே கேயென் ஜிடிஎஸ் கார் குர்மீத்துடையதாக இருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
ஒருவேளை இந்த செல்வாக்கான கார் குர்மீத்துடையதாக இல்லை என்றால், அவர் குடும்பத்தை சேர்ந்த யாரோ ஒருவருடையதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுவரை குர்மீத் இப்படி ஒரு காரை பயன்படுத்தி வருகிறார் என்பதே யாருக்கும் தெரியாது. ஹரியானாவில் அவர் இந்த கார் மூலம் உலா வருவதை கூட யாரும் பார்த்ததில்லை.
இருந்தாலும் மிக கவனமாக இந்த கார் ஆசிரமத்தில் பாதுக்காக்கப்பட்டு வருகிறது. இந்த காருக்கு கிடைக்கும் மரியாதை கூட அங்கு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு கிடைப்பதில்லை.
குர்மீத் ராம் ரஹீம் ஆசிரமத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த கார் அவர் வசிக்கும் வீடு என்று சொல்லப்படும் பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்தது.
போர்ஷே நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிக செயல்திறன் மிக்க முதன்மை மாடலாக இந்தியாவில் வலம் வருவது போர்ஷே கேயென் ஜிடிஎஸ்.
3.6 லிட்டர் வி6 பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த கார் 434 பிஎச்பி பவர் மற்றும் 601 என்.எம் டார்க் திறனை வழங்கும்.
இந்த காரின் எஞ்சின் 8-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.
துவக்க நிலையில் இருந்து 100 கி.மீ வேகத்தை 5.2 விநாடிகளில் எட்டிப்பிடித்துவிடக்கூடிய ஆற்றல் பெற்ற இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 262 கி.மீ.
இந்தியாவில் ஜிஎஸ்டி-க்கு பிறகு போர்ஷே கேயென் ஜிடிஎஸ் பெட்ரோல் காரின் விலை ரூ.1.7 கோடி.
ஸ்பெஷலான நிறத்தில் உங்களுக்கு இந்த மாடல் வேண்டுமென்றால் அதற்கு கூடுதலாக ரூ.8 லட்சம் செலவாகும்.
இந்தியாவில் ரூ.1.7 கோடி மதிப்பில் கிடைத்தாலும், போர்ஷே கேயென் ஜிடிஎஸ் காரின் ஆன்-ரோடு விலை ரூ.2 கோடியை தொடும்.
ஹரியானா உயர்நீதிமன்றத்தின் உத்தரவு படி குர்மீத் ராம் ரஹீம் ஆசிரம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஏன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது என்பது தொடர்பான காரணங்கள் விரைவில் தெரியவரும் என்கிறது போலீஸ்.
மேலும் சோதனையின் போது சந்தேகம் எழுப்பும் வகையில் உள்ள பொருட்கள் பூட்டி சீல் வைக்கப்படுகிறது.
பாலியால் வழக்கில் கைதாகி இருபது ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற போலி சாமியார் குர்மீத் ராஹ் ரஹீம் சிங்கின் ஆசிரமத்தில் 41 பாராளுமன்ற நிறுவனங்கள்,
ராணுவங்கள், 4 மாவட்ட போலீசார்கள், 1 ஸ்வாட் அணி மற்றும் நாய் மூலம் சோதனை செய்யும் அணி என பல்வேறு துறை சார்ந்த நடவடிக்கைகள் இந்த சோதனை பணியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!