இரவு நேர அதிவேக கார் பயணத்திற்கு பலியான 4 மருத்துவ மாணவர் உயிர்கள்..!!
இரவு நேர அதிவேக கார் பயணத்திற்கு பலியான 4 மருத்துவ மாணவர் உயிர்கள்..!!
இந்திய சாலைகளில் நடைபெறும் விபத்துகளை தடுக்க அரசு பல்வேறு திட்டங்கள் மற்றும் கட்டுபாடுகளை கொண்டு வந்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே தான் செல்கிறது.

தினந்தோறும் நடைபெறும் சாலை விபத்துகளில் அதிகாரப்பூர்வமாக நமக்கு தெரிய வரும் எண்ணிக்கைகள் சொற்பமே.
காவல் துறை வரை செல்லாத வழக்குகள் பற்றிய விவரங்கள் வெளியானால், அந்த எண்ணிக்கை வானை முட்டும் என்பது தான் நிதர்சனம்.

கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற கோரமான சாலை விபத்தில், நான்கு மருத்துவ மாணவர்கள் பரிதாபமாக உயிரழந்தனர்.
இளம் மாணவர்களின் உயிரழப்பும், அதுக்குறித்த செய்தியும் அம்மாநில மக்களை சோகம் அடைய செய்துள்ளது.

பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில், அதிகாலையில் நான்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள், ஹூண்டாய் வெர்னா மாடல் காரில் சென்று கொண்டு இருந்தனர்.

அப்போது எதிரே வந்த டிரக்கு மீது கார் மோதியதில், காரின் உள்ளே இருந்த ஜோயல் ஜாக்கப், ஜீனா திவ்யா மற்றும் நிகித் ஆகிய மாணவர்கள் பலியாயினர்.

இந்த விபத்தில் நான்காவதாக பலியான நபர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை.

கேரளாவை சேர்ந்த இந்த நான்கு மாணவர்களும், கர்நாடகா மாநிலத்திற்கு காரிலேயே சுற்றுலா வந்துள்ளதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மருத்துவத் துறையை சேர்ந்த மாணவர்களாக இருந்தாலும், கேரளாவில் இயங்கும் வெவ்வேறு மருத்துவ கல்லூரிகளில் இவர்கள் படித்து வந்துள்ளனர்.

ஹூண்டாய் நிறுவனத்தின் முன்னாள் தலைமுறை காரில் பயணம் செய்து வந்த மாணவர்கள், அதிகாலை அளவில் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையில் செய்து கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது சாலையில் இருந்த தடுப்பில் கார் எதிர்பாராதவிதமாக மோதிவிட, எதிரே வந்துகொண்டு இருந்த லாரிக்கு கீழ் பகுதியை நோக்கி வெர்னா கார் சென்றுவிட்டது.

எதிரே கார் கட்டுபாடு இல்லாமல் வருவதை பார்த்த லாரி ஓட்டுரும் வாகனத்தை கட்டுபடுத்த முடியாமல் போது. இறுதியில் லாரி வெர்னா காரின் மீது ஏறி நின்றது.

லாரி ஏறியதால் காரின் மேற்கூரை திறந்துவிட லாரியின் சக்கரம் காருக்குள் சென்றுவிட்டது. இதனால் காரில் இருந்து நால்வரும் உடல் நசுங்கி உயிரழந்தனர்.

கார் அதிவேகத்தில் சாலையில் சென்றதால் தான் இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் தலைமறைவாகி விட்டார். அவரை கர்நாடக போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








