நீங்க நிச்சயம் இத கவனிச்சிருக்க மாட்டீங்க! விமானங்கள் எழுப்பும் 5 விநோதமான ஒலிகள்... இவை எதை குறிக்கின்றன?..
விமானங்கள் எழுப்பக்கூடிய 5 விநோத ஒலிகளும், அந்த ஒலிகள் எதைக்குறிக்கின்றன என்பது பற்றிய தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

விமான உலகம் சார்ந்து பல்வேறு ஆச்சரிய தகவல்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன. நாம், பல முறை இவற்றில் சென்று வந்திருந்தாலும், சில விஷயங்களைக் கண்டும் காணாமல் கடந்திருப்போம். அவற்றை ஏன்?, எதற்கு?, என நாம் ஆராய்ந்திருக்கவே மாட்டோம்.

இதுபோன்று, நாம் கவனிக்க தவறிய ஓர் தகவலையே இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். அதாவது, விமானத்தில் இருந்து எழும்பக் கூடிய ஐந்து விநோத ஒலிகளும், அவை எதைக் குறிக்கின்றன என்பதுகுறித்த தகவலையும் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம்.

நுழைவு வாயிலின் வழியே வரும் 'பூஃப்' சத்தம்
விமானம் தரையில் இருந்து வானை நோக்கி எழும்பும் எழக்கூடியதே இந்த 'பூஃப்' சத்தம். வெளிப்புறம் வாயிலாக கிடைத்து வந்த காற்றோட்டத்தை விமானத்திற்கு உள்ளே மாற்றும்போதே இந்த ஒலி எழும்புகின்றது. இந்த சமயத்தில் மின் விளக்குகள் கூட சில செகண்டுகள் அனைந்து எறியும். இந்த செயல்பாட்டை ஏபியூ (axillary power unit) என விமானத்துறை குறிப்பிடக்கின்றது.

குறைக்கும் ஒலி
விமானம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போதும், வந்து சேரும்போது இந்த ஒலியை எழுப்பும். ஹைட்ராலிக் சிஸ்டம், ஸ்டியரிங், பிரேக்கிங் மற்றும் ஏர் பிரஷ்ஷர் ஆகியவற்றை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும்போது இந்த ஒலி எழும்புகின்றது. இந்த செயல்பாட்டை பிடியூ (power transfer unit) என விமானத்துறை அழைக்கின்றது. இந்த 'குறைக்கும்' ஒலியை அழகிய ஒலி பலர் வர்ணிக்கின்றனர். மிக துள்ளியமாக ஓர் நாய் கத்துவதைப் போலவே இந்த ஒலி இருக்கும்.

இறக்கைகளில் இருந்து வரும் 'விர்' ஒலி
காற்றைக் கிழித்துக் கொண்ட செல்லும்போது இறக்கைகளில் இந்த ஒலி எழும்பும். குறிப்பாக, விமானம் காற்றில் ஏற ஆரம்பிக்கும்போது இந்த ஒலி சற்று கூடுதலாகவே எழும்பும். ஒரு முறை விமானம் வானத்தை எட்டியபின்னர் இந்த ஒலி குறைந்துவிடும்.

பேரொலி
விமானம் தனது பயணத்தில் இறுதி நிலையை அடையும்போது, அதாவது தரையிறங்கும் முன் சுமார் 2,000 அடி உயரத்தில் இருக்கும் போது இந்த ஒலியை எழுப்பும். இறக்கைகளில் செய்யப்படும் மாற்றத்தின் காரணமாக இந்த ஒலி எழும்புகின்றது. இதன் சத்தம் அதி-பயங்கராமானது என்கிற காரணத்தினாலேயே இதனை 'பேரொலி' என்கின்றனர்.

இது, விமானம் தரையிறங்கும்போது வீல்களுக்கு சரியான இயங்கும் அனுபவத்தை வழங்க உதவும். மிக வேகமாக தரையிறங்கும் விமானத்தின் சக்கரங்கள் பாதையை விட்டு விலாகமல் இருப்பதற்காகவே றெக்கையில் மாற்றம் செய்யப்பட்டுகின்றது. அவ்வாறு, செய்யும்போது இந்த பேரொலி ஏற்படும்.

கீச் சத்தம்
ஏரோபிளேன் தரையிறங்கும்போது மட்டுமே இந்த சத்தத்தை நம்மால் கேட்க முடியும். டயர்கள் தரையை தொடர்பு கொள்ளும் இச்சத்தம் ஏற்படும். குறிப்பாக, வேகத்தைக் கட்டுப்படுத்தும் இந்த சத்தம் அதிகளவில் எழும்பும். விமானம் ஓடு பாதையில் விமானங்கள் மணிக்கு 100 முதல் 150 மைல்கள் எனும் வேகத்தில் தரையிறங்கும்.

இந்த வேகத்தை உடனடியாக பிரேக் போட்டு நிறுத்த முடியாது. அப்படி நிறுத்தினால் அது பேராபத்தை ஏற்படுத்தும். எனவேதான் பிரேக்கினை விமானி பிடித்து பிடித்து விடுவார். அப்போதே இந்த 'கீச்' ஒலி எழும்புகின்றது.


Click it and Unblock the Notifications








