Just In
- 1 hr ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- 3 hrs ago டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- 3 hrs ago மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- 4 hrs ago இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
Don't Miss!
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இனி இந்த தவறை செய்யும் வாகன ஓட்டிகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை.. மாநில அரசு அதிரடி..
அளவுக்கு அதிகமாக ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 லட்ச ரூபாய் அபராதமும் கட்ட நேரிடும்.
அளவுக்கு அதிகமாக ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1 லட்ச ரூபாய் அபராதமும் கட்ட நேரிடும். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில தலைநகர் மும்பை, இந்தியாவின் வர்த்தக தலைநகர் என வர்ணிக்கப்படுகிறது. அங்கு ஒரு சில வாகன ஓட்டிகள் தேவையில்லாமல் ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தி வருகின்றனர்.
எனவே மும்பை நகரில் உள்ள 110 பகுதிகளை சைலண்ட் ஜோன் (Silent Zone) என மகாராஷ்டிரா அரசு வரையறை செய்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் நீதிமன்றங்கள் உள்ள பகுதிகள், சைலண்ட் ஜோனில் சேர்க்கப்பட்டுள்ளன.
சைலண்ட் ஜோன் என குறிப்பிடப்பட்ட பகுதிகளில், ஹாரனை ஒலிக்க கூடாது. அதை மீறி ஹாரனை ஒலித்து, ஒலி மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் ரூ.1 லட்சம் அபராதம் கட்ட நேரிடும். அத்துடன் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையையும் அனுபவிக்க நேரிடும் என அம்மாநில அரசு எச்சரித்துள்ளது.
மும்பை மாநகரானது, தொழில், கமர்ஷியல், குடியிருப்பு, அமைதி (Silent Zone) என மொத்தம் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில், இவ்வளவு டெசிபல் ஒலி அளவுதான் இருக்க வேண்டும் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளது.
இதன்படி தொழில் பகுதிகளில், பகல் நேரங்களில் 75 டெசிபலும், இரவு நேரங்களில் 70 டெசிபலும் இருக்கலாம். அதே நேரத்தில் கமர்ஷியல் பகுதிகளில், பகல் நேரங்களில் 65 டெசிபலும், இரவு நேரங்களில் 60 டெசிபலும் மட்டுமே இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் குடியிருப்பு பகுதிகளில், பகல் நேரங்களில் 55 டெசிபலும், இரவு நேரங்களில் 45 டெசிபலும் மட்டுமே இருக்க வேண்டும். ஆனால் சைலண்ட் ஜோன்களில், பகல் நேரங்களில் 50 டெசிபலும், இரவு நேரங்களில் 40 டெசிபலும் மட்டுமே இருக்க வேண்டும்.
குறிப்பாக சைலண்ட் ஜோன்களில் அளவுக்கு அதிகமாக ஹாரனை ஒலிப்பவர்கள் குறித்த, 100 என்ற போலீஸ் ஹெல்ப்லைன் நம்பரில், புகார் அளிக்கலாம் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. இதுதவிர [email protected] என்ற இணையதளத்திலும் புகாரை பதிவு செய்யலாம்.
புகார் அளிப்பவர்களின் ரகசியம் காக்கப்படும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. எனவே ஒலி மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை லவுட் ஸ்பீக்கர்கள் பயன்படுத்தவும், பட்டாசுகள் வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தம் 13 ஸ்கூட்டர்களை மாற்று திறனாளி இளைஞர்களுக்கு பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்..
-
பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?