Just In
- 3 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 3 hrs ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 6 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 6 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திடீர் அறிவிப்பை வெளியிட்ட போலீஸ்... இனி ஆகப்போற கலெக்ஷனுக்கு முன்னாடி தல, தளபதி படம்லாம் ஒன்னுமே இல்ல!
சாலை விதிமுறைகளை மீறி அபராதம் பாக்கி வைத்திருப்பவர்களுக்கு ஆஃபர். பிப்11ம் தேதி முன்னர் அபராதம் செலுத்தினால் 50 சதவீத கட்டணத்தைச் செலுத்தினால் போதும் என அறிவிப்பைக் கர்நாடக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
சாலையில் போலீசார் அவ்வப்போது வாகன தனிக்கையில் ஈடுபடுவது வழக்கம் இப்படியான சோதனையில் லைசென்ஸ், இன்சூரன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டு, அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவது, அதிக நபர்களை ஏற்றி வாகனம் ஓட்டுவது, இப்படியாக மோட்டார் வாகனத்திற்கு எதிரான சட்டங்களை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். இப்படியாகத் தினமும் லட்சக்கணக்கான வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இன்று பெரு நகரங்களில் இப்படியாக அபராதம் விதிக்க போலீசாரே தேவையில்லை அதற்காக பிரத்தியேகமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் சாலை விதிமுறை மீறல்களில் ஈடுபடுபவர்களைச் செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறிந்து அவர்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராதம் குறித்துக் குறிப்பிட்ட நபருக்கு ஆன்லைன் மூலம் நோட்டிஃபிகேஷன் செய்யப்படுகிறது.
இப்படியாக விதிக்கப்பட்ட ஏகப்பட்ட அபராதங்கள் வசூல் செய்யப்படாமல் இருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் மட்டும் மொத்தம் ரூ530 கோடி அபராதம் வசூல் செய்யப்படாமல் பாக்கியில் இருக்கிறது. இதில் பெங்களூருவில் மட்டும் ரூ500 கோடி அபராத கட்டண வசூல் பாக்கி உள்ளது. மீதம் உள்ள ரூ30 கோடி தான் மாநிலத்தில் மற்ற பகுதியில் பாக்கி உள்ளது.
இந்நிலையில் இப்படியாகப் பாக்கியுள்ள அபராதங்களை வசூலிக்கும் வகையில் கர்நாடக மாநில போக்குவரத்து போலீசார் ஒரு புதிய ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளனர். அதன்படி வரும் பிப் 11ம் தேதிக்குள் எந்த வாகனமாக இருந்தாலும் கர்நாடக பகுதியில் அபராதம் விதிக்கப்பட்டுக் கட்டாமல் இருந்தால் இருக்கும் அத்தனை அபராதத்திற்கும் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டு பாதியை மட்டும் கட்டினாலே அபராதத்திலிருந்து விடுபட முடியும் என அறிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த ஜனவரி 27ம் தேதி நீதிபதி வீரப்பா முன்னிலையில் ஒரு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறையின் இந்த கோரிக்கையை ஏற்று இதை விரைவாக அமல் படுத்த முடிவு செய்யப்பட்டது. இது தற்போது நடை முறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏகப்பட்ட பணம் வசூலாகி விடும் என நம்பப்படுகிறது. பாக்கியுள்ள 530 கோடியில் ரூ265 கோடி வசூலாகாவிட்டாலும் ரூ150 கோடி வரை வசூலாகும் என எதிர்பார்க்கலாம்.
இப்படியாகப் பெங்களூருவில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தங்கள் வாகனங்கள் மீதுள்ள அபராதத்தைச் செலுத்திச் சரி செய்ய நினைத்தால் பெங்களூருவில் உள்ள 48 டிராஃபிக் போலீஸ் ஸ்டேஷனில் எந்த ஸ்டேஷனிற்கு வேண்டுமானாலும் சென்று அபராத தொகையை 50 சதவீத தள்ளுபடியுடன் கட்டலாம். அல்லது நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளது டிராஃபிக் மேனேஜ்மென்ட் சென்டர்களிலும் கட்டாலாம்.
அல்லது ஆன்லைனில் செலுத்த வேண்டும் என்றால் https://bangaloretrafficpolice.gov.in என்ற தளத்தில் செலுத்தலாம். பெங்களூருவிற்கு வெளியில் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் அபராதம் செலுத்த விரும்பினால் கர்நாடகா ஒன் அல்லது காவல் நிலையங்களில் செலுத்தலாம்.
-
இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
இவரு நெனச்சா 10 ரோல்ஸ் ராய்ஸ் காரை ஒரே நேரத்துல இறக்க முடியும்! ஆட்டோவை ஓட்டிட்டு வந்தது அவ்ளோ பெரிய மனுசனா!!