Just In
- 4 hrs ago டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- 4 hrs ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 5 hrs ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 6 hrs ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
முதல் முறை... பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையில் புதிய சாதனை... என்னனு தெரியுமா?
பிரதமர் மோடி திறந்து வைத்த அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் புதிய சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள அடல் சுரங்கப்பாதையை (Atal Tunnel), நேற்று (டிசம்பர் 27) ஒட்டுமொத்தமாக 5,450 வாகனங்கள் கடந்ததாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்திய வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது ஒரு சாதனையாகும்.
மணாலி பக்கத்தில் இருந்து வந்து அடல் சுரங்கப்பாதையில் நுழைந்த வாகனங்களின் எண்ணிக்கை 2,800 ஆகும். அதே சமயம் லஹால் பக்கத்தில் இருந்து 2,650 வாகனங்கள் வந்துள்ளன. ஒட்டுமொத்தமாக நேற்று ஒரே நாளில் 5,450 வாகனங்கள் அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்தியுள்ளன. அடல் சுரங்கப்பாதை கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது.
அப்போதில் இருந்து ஒரே நாளில் இவ்வளவு அதிகமான வாகனங்கள் அடல் சுரங்கப்பாதையை பயன்படுத்தியிருப்பது இதுவே முதல் முறையாகும். காவல் துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர். அடல் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடிதான் திறந்து வைத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
ஆனால் போக்குவரத்து முக்கியத்துவம் மிகுந்த அடல் சுரங்கப்பாதையில் ஒரு சில விரும்பத்தகாத நிகழ்வுகள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன. அடல் சுரங்கப்பாதை பிரபலமாக இருந்து வரும் நிலையில், அங்கு போட்டோ மற்றும் வீடியோக்களை எடுக்க சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக அடல் சுரங்கப்பாதையின் உள்ளே வாகனங்களை நிறுத்தி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.
இந்த வகையில் அடல் சுரங்கப்பாதையின் உள்ளே போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக நேற்று மொத்தம் 15 சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில், டெல்லியை சேர்ந்த 7 பேரும் அடங்குவர். சுற்றுலா பயணிகளிடம் இருந்து 2 வாகனங்களையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்திய சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் கைது செய்வது இது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த டிசம்பர் 24ம் தேதியன்று, டெல்லியில் இருந்து வந்திருந்த 10 சுற்றுலா பயணிகளை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் இருந்து மூன்று கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 24ம் தேதி கைது செய்யப்பட்ட சுற்றுலா பயணிகள், அடல் சுரங்கப்பாதையின் உள்ளே வாகனங்களை நிறுத்தி நடனம் ஆடி கொண்டிருந்தனர். இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவேதான் காவல் துறையினர் அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், அடல் சுரங்கப்பாதைக்கு வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என காவல் துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். வாகன ஓட்டிகள் விதிமுறைகளை பின்பற்றுகின்றனரா? என்பதை கண்காணிக்க, அடல் சுரங்கப்பாதையில் காவல் துறையினர் ரோந்து சென்று வருகின்றனர்.
Note: Images used are for representational purpose only.
-
இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
-
வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?