Just In
- 1 hr ago இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- 1 hr ago தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்! யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் டாடா நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு!
- 1 hr ago இந்த விஷயத்தில் மாருதி காரை நிறைய பேர் கண்டு கொள்வது இல்ல! ஹூண்டாய் காரை வாங்குவதற்கு காரணம் என்னவா இருக்கும்?
- 5 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
Don't Miss!
- Finance அமெரிக்க நிறுவனத்துடன் டீல்.. எகிறியது ராமகிருஷ்ணா ஃபோர்ஜிங்ஸ் பங்கு விலை..!
- News ஜனநாயக பெருவிழா.. அசத்திய ஆளுநர் ரவி! இப்படி எந்த ஆளுநரும் செஞ்சதே இல்லையே? தமிழும் கத்துக்கிட்டாரே!
- Movies கடமையை செஞ்சிட்டேன்.. எங்களை செய்யாம இருங்க.. வாக்களித்த பின் பிரதீப் ஆண்டனி அதிரடி ட்வீட்
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
500சிசி மோட்டார் சைக்கிளில் 58 இந்திய ராணுவர்கள் பயணித்து உலக சாதனை..!!
500சிசி மோட்டார் சைக்கிளில் 58 இந்திய ராணுவர்கள் பயணித்து உலக சாதனை..!!
58 ராணுவ வீரர்கள் ஒன்று சேர்ந்து ஒரே மோட்டார் சைக்கிளில் பயணித்த சாகச நிகழ்ச்சி பெங்களூருவில் நடைபெற்றது.
கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவில் இருக்கும் இந்திய ராணுவத்தின் ஏஎஸ்சி பயிற்சி மையத்தில் தான் இந்த சாகச நிகழ்ச்சி நடந்துள்ளது.
டர்னடோஸ் என்ற ராணுவ குழுவில் இருக்கும் 58 வீரர்கள் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று உலக சாதனை படைத்துள்ளனர்.
கின்னஸ் சாதனைக்காக நடத்தப்பட்ட இந்த சாகசத்தை செய்ய, டர்னடோஸ் ராணுவக் குழு சுமார் 6 மாத காலங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பெங்களூரு உள்ள ராணுவத்துக்கு சொந்தமான விமான தளத்தில் 58 பேர் ஒரே பைக்கில் பயணம் செய்யும் உலக சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக 500 சிசி கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக்கில் டர்னடோஸ் ராணுவக் குழுவினர் தங்களது சாகச பயணத்தை தொடங்கினர்.
Trending On Drivespark:
Recommended Video
வீரர்கள் பைக் மீது ஏறிய போது இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களை குறிக்கும் விதத்தில் ஹெல்மெட்டுகள் மற்றும் உடைகளை அணிந்திருந்தனர்.
ராணுவ வீரர் சுபீதார் ராம்பால் யாதவ் பைக்கை ஓட்டினார். சாகச நிகழ்ச்சி தொடங்கப்பட்ட போது முதற்கட்டமாக 30 வீரர்கள் பயணித்தனர்.
பிறகு பைக் தொடர்ந்து ஓடும்போது தலா 2 வீரர்கள் அடுத்தடுத்து ஏறினர். இதேபோல மொத்தம் 58 வீரர்களை அந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் தாங்கி சென்றது.
உலக சாதனை படைப்பதற்கான முதல் முயற்சியில், பைக் ஓட்டுநர் சுபீதார் ராம்பால் யாதவின் கட்டுப்பாட்டை இழந்தது.
வீரர்கள் ஒவ்வொரு பின் ஒன்றாக கீழே விழுந்தனர். மேலும் இதேபோல 2வது முறையாக வீரர்கள் முயற்சிக்க அதுவும் தோல்வியில் முடிந்தது.
முதல் இரண்டு முயற்சிகளால் தளராத வீர்கள் 3வது முறையாக சாகசத்தை படைக்க முயன்றனர்.
58 வீரர்களும் பைக்கில் ஒவ்வொருவராக ஏறிக்கொள்ள, ஓட்டுநர் ராம்பால் யாதவ் மனதில் உறுதியுடன் ஓட்டினார்.
இந்த 3வது முயற்சியால், 58 வீரகளும் கீழே விழாமல், ராயல் என்ஃபீல்டு பைக் சுமார் 1.20 கி.மீ தொலைவை 2 நிமிடங்கள் 14 விநாடிகளில் கடந்து புதிய உலக சாதனையாக அமைந்தது.
‘டர்னடோஸ்' குழுவின் இந்த மோட்டார் சைக்கிள் சாகசத்தில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலரும் இடம் பெற்றிருந்தனர்.
மேலும் இந்த சாதனை லிம்கா, யுனிக்யூ உட்பட கின்னஸ் சாதனை புத்தகங்களில் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
500சிசி ராயல் என்ஃபீல்டு பைக்கில், 58 ராணுவ வீரர்கள் பயணித்த இந்த உலக சாதனை முயற்சி குறித்து பேசிய உயர் ராணுவ அதிகாரி ஜெ.பி. வர்மா,
"இந்திய ராணுவ வீரகளின் இந்த சாதனை 3வது முயற்சியில் வெற்றி அடைந்ததில் மகிழ்ச்சி. அடுத்ததாக 15 மோட்டார் சைக்கிள்களில் 300 வீரர்கள் வரை கோபுரம் அமைத்து பயணம் செய்து சாதனை படைக்க தயாராகி வருகிறோம்" என்று கூறினார்.
2013ம் ஆண்டில் இந்திய ராணுவ வீரர்களில் 56 பேர் ஒரே பைக்கில் பயணித்து சாகசம் புரிந்தது தான் இதுவரை சாதனையாக இருந்து வந்தது.
தற்போது 2017ல் 58 ராணுவ வீரகள் பெங்களூரு ராணுவ தளத்தில், ஒரே பைக்கில் பயணித்து சாகசம் நிகழ்த்திருப்பது, 2013ம் ஆண்டு சாதனையை முறியடித்துள்ளது.