Just In
- 14 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Movies அச்சச்சோ.. என்ன ஆச்சு?.. ஐபிஎல் ஸ்ட்ரீமிங் மோசடி வழக்கில் சிக்கிய தமன்னா.. விசாரணைக்கு வர உத்தரவு!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சீன வெடிவிபத்தில் 5,800 ஜேஎல்ஆர் கார்களை இழந்துவிட்டோம்: டாடா மோட்டார்ஸ்
சீனாவின், தியாஜின் துறைமுகத்தில் சமீபத்தில் நடந்த வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்கள் சேதமடைந்துவிட்டது," என டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
கடந்த 11ந் தேதி சீன துறைமுகத்தில் நடந்த மிகப்பெரிய ரசாயன வெடிவிபத்தில், பெரும் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டிருக்கிறது. இந்த வெடிவிபத்தை தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில், ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்துவிட்டன.
ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான கார்கள் சேதமடைந்ததாக வெளியான தகவலைத் தொடர்ந்து, இந்த விபத்தில் ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான கார்கள் கருகி நாசமடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் தகவல்
இங்கிலாந்தை சேரந்த ஜாகுவார்- லேண்ட்ரோவர் நிறுவனத்தின் தாய் நிறுவனமான இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்திருக்கும் தகவலில், சீன துறைமுக வெடிவிபத்தில் 5,800 ஜாகுவார்- லேண்ட்ரோவர் கார்களை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளது.
இழப்பு
வெடிவிபத்து ஏற்பட்ட பகுதிகள் சீலிடப்பட்டிருப்பதால், இழப்பு குறித்து உடனடியாக ஆய்வு செய்ய இயலாத நிலை இருக்கிறது. எனவே, உண்மையான இழப்பு குறித்து உடனடியாக தகவல் அளிக்க இயலவில்லை என்றும் டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மிகப்பெரிய துறைமுகம்
சீனாவில், வாகனங்களை இறக்குமதி செய்யும் வசதியுடை மூன்று முக்கிய துறைமுகங்களில் தியாஜின் துறைமுகம் ஒன்று. குறிப்பாக, கார் தயாரிப்பாளர்கள் இந்த துறைமுகத்தின் வழியாகத்தான் அதிக அளவில் கார்களை இறக்குமதி செய்து, அங்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அந்தளவுக்கு, அங்கு மிகப்பெரிய ஸ்டாக்யார்டும் உள்ளது.
பெரும் நாசம்
இந்த வெடி விபத்தில் 10,000க்கும் அதிகமான கார்கள் இதுவரை நாசமடைந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த வெடிவிபத்தின் காரணமாக சீனாவில் வர்த்தகம் செய்து வரும் வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு பெரும் இழப்பும், கார்களை டெலிவிரி கொடுப்பதில் நடைமுறை சிக்கல்களும் எழுந்துள்ளன.
பாதிக்கப்பட்ட நிறுவனங்கள்
அந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 15,000க்கும் அதிகமான கார்கள் சேதமடைந்துவிட்டதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. ஃபோக்ஸ்வேகன், ஜாகுவார்- லேண்ட்ரோவர், ஹூண்டாய், ரெனோ மற்றும் கியா மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் இந்த தீவிபத்தில் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மதிப்பு
இந்த வெடிவிபத்தில் ஒரு பில்லியன் டாலர், இந்திய மதிப்பில் ரூ.6,500 கோடி மதிப்புடைய கார்கள் சேதமடைந்திருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கூட்டணி
சீனாவின் செர்ரி ஆட்டோமொபைல் நிறுவனத்துடன் இணைந்து, ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் அங்கு கார் விற்பனை செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
-
ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!