Just In
- 1 hr ago அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- 1 hr ago மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- 3 hrs ago சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- 3 hrs ago 5கதவுகள் வெர்ஷனிலும் வருகிறது மஹிந்திரா தார்.. இந்தியர்களோட ரொம்ப நாள் எதிர்பார்ப்பு..
Don't Miss!
- News சிக்கலில் மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் வக்கீல் சுதா-ஹைகோர்ட்டில் வழக்கு போடும் நாம் தமிழர் கட்சி!
- Movies Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
8 வயது சிறுவன் பைக் ஓட்டும் வீடியோ வைரல்... தந்தைக்கு கிடைத்த கடும் தண்டனை என்னவென்று தெரியுமா?
8 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் பைக் ஓட்டும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் உரிய வயதை எட்டுவதற்கு முன்பே பெரும்பாலான சிறார்கள் இரு சக்கர வாகனங்களை ஓட்டி வருகின்றனர். இங்கு சாலை விபத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சிறார்களை இரு சக்கர வாகனங்களை ஓட்டியதால் கடந்த காலங்களில் பல்வேறு சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இதில், உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.
எனவே சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இதற்கான அபராதம் 50 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது 500 ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களை 3 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கவும் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் அப்படி இருந்தும் கூட சிறார்கள் எவ்வித பயமும் இன்றி இரு சக்கர வாகனங்களில் வலம் வருவதை அடிக்கடி காண முடிகிறது. டூவீலர்கள் மட்டுமல்லாது கார் போன்ற வாகனங்களையும் கூட சில சிறார்கள் ஓட்டி வருகின்றனர். இந்த சூழலில் 8 வயது மட்டுமே நிரம்பிய சிறுவன் ஒருவன் டூவீலரை ஓட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்காக அந்த சிறுவனின் தந்தைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவனின் தந்தைதான் பைக்கின் உரிமையாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. லக்னோ நகரில் உள்ள ககோரி போலீஸ் ஸ்டேஷன் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உரிய வயதை எட்டும் முன்பே பைக் ஓட்டிய அந்த சிறுவனின் உயரம் மிக குறைவாக உள்ளது. எனவே அவரது கால்கள் தரையை தொடவில்லை. அந்த சிறுவன் ஹெல்மெட் அணிந்திருந்தார். ஆனால் அவரது தலையுடன் ஒப்பிடும்போது அந்த ஹெல்மெட் மிகப்பெரியதாக இருந்தது. அத்துடன் ஹெல்மெட் சரியாகவும் அணியப்படவில்லை.
அந்த சிறுவன் ஓட்டிய பைக்கில், பால் கேன்கள் இருந்தன. எனவே அந்த சிறுவன் பாலை டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இப்பணியை அந்த சிறுவன் வழக்கமாக செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரிகிறது. ஏனெனில் அந்த சிறுவன் மிகவும் நம்பிக்கையுடன் மோட்டார்சைக்கிளை ஓட்டுகிறார்.
எனினும் இதுபோன்று சிறார்கள் வாகனங்களை ஓட்டுவது மிக அபாயகரமானது. சிறுவன் டூவீலரை ஓட்டும் நிகழ்வை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பரவ விட்டுள்ளனர். இதன் பின் அந்த வீடியோ வைரலாக பரவ தொடங்கி விட்டது. அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த வீடியோ வைரலாக பரவியதையடுத்து, அதன் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். இதில், அந்த பைக்கின் உரிமையாளர் கண்டறியப்பட்டார். அதன்பின்புதான் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பைக்கின் உரிமையாளர் மீது புதிய சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
லக்னோ டிராபிக் போலீஸ் எஸ்பி புனேந்திரா சிங் இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலே குறிப்பிட்டதை போல், உரிய வயதை எட்டாமல் வாகனங்களை இயக்குவதற்கான அபராதம் 500 ரூபாயில் இருந்து 25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்த பிறகு இதற்கான அபராத தொகை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அத்துடன் தங்கள் குழந்தையை வாகனம் ஓட்ட அனுமதித்ததற்காக பெற்றோர்களுக்கு கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். எனவேதான் இந்த சிறுவனின் தந்தைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குற்றத்திற்காக பெற்றோர்களுக்கு நீதிமன்றத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த சிறுவனின் தந்தைக்கு கோர்ட் சலானைதான் போலீசார் வழங்கியுள்ளனர். எனவே முறையான விசாரணை நடைபெறும். அதன்பின் இறுதி அபராத தொகை மற்றும் சிறை தண்டனை குறித்து நீதிமன்றம் முடிவு எடுக்கும். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.
-
லூனாவிற்கு போட்டியா ஹீரோ தயார் செய்திருக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்! முன்-பின் 2பக்கத்திலும் லோடு ஏத்திக்ககலாம்
-
பைக்கைவிட ஸ்கூட்டர் கம்மியாதான் மைலேஜ் கொடுக்கும் ஏன் தெரியுமா?
-
இவ்ளோ முரட்டு தனமான காருக்கா டொயோட்டா உரிமம் வாங்கியிருக்கு! பக்கத்து வீட்டுகாரர்களையும் சேத்து கூட்டி போகலாம்