Just In
- 7 hrs ago
பெங்களூர்வாசிகள் கொடுத்த வெச்சவங்க!! புது புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடகைக்கு அறிமுகமாகுது!!
- 9 hrs ago
200சிசி-யில் இருந்து 500சிசி-க்குள் அதிகளவில் விற்பனையாகும் பைக் எது தெரியுமா? டாப்-10 பைக்குகள் இதோ...
- 12 hrs ago
பெட்ரோல், டீசல் விலை குறையப்போவது உறுதி... 5 மாநில தேர்தல் மட்டுமல்ல... இன்னொரு காரணமும் இருக்கு
- 13 hrs ago
ஃபேமிலியாக டூர் செல்ல ஏற்றவை... மிக விரைவில் நாட்டில் விற்பனைக்கு வரவிருக்கும் புதிய 7 இருக்கை கார்கள்...
Don't Miss!
- News
தமிழ் இந்திய மொழி இல்லையா? தமிழர்களின் வரலாறு இந்திய வரலாறு இல்லையா? ராகுல் காந்தி சரமாரி கேள்வி
- Sports
ரெண்டு பெரிய தலைங்க மோதும் 110வது போட்டி... சிறப்பான தருணங்களுக்கு உத்தரவாதம்!
- Movies
இப்படியா போடுவீங்க? பிரபல நடிகையின் மோசமான போட்டோவை அப்லோட் செய்த பிரபலத்தை சாடும் நெட்டிசன்ஸ்!
- Finance
எச்சரிக்கும் நிபுணர்கள்.. சந்தை இன்னும் சில தினங்களுக்கு சரிவை காணலாம்..!
- Lifestyle
கொரோனாவுக்கு முன் வார இறுதி நாட்களில் மேற்கொண்ட சில ஆரோக்கியமற்ற விஷயங்கள்!
- Education
12-வது தேர்ச்சியா? ரூ.24 ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இனி இதற்கெல்லாம் ஆதார் அட்டை கட்டாயம்... மத்திய அமைச்சர் தகவல்... எது எதுக்குனு தெரிஞ்சிக்கலாமா?
இனி ஆதார் அட்டை இதற்கெல்லாம் கட்டாயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம்.

ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இல்லை என்று கூறப்பட்டாலும், அரசின் சில குறிப்பிட்ட சலுகைகளைப் பெற இந்த கார்டு கட்டாயம் என்ற நிலையே நீடித்து வருகின்றது. குறிப்பாக, அரசின் மானியம் மற்றும் பிற சில சேவைகளைப் பெறுவதற்கு இந்த கார்டு கட்டாயம் என்ற நிலை இருந்த வண்ணம் இருக்கின்றது.

இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம், துறை சார்ந்திருக்கும் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என அறிவித்துள்ளது. நேரடி தொடர்பின்றி ஆன்லைன் வாயிலாக சேவையை நுகரும் நபர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

ஆகையால், ஆர்டிஓ போன்ற இத்துறைசார்ந்து இயங்கும் ஆன்லைன் சேவைகளுக்கு ஆதார் கட்டாயமாகியுள்ளது. 16 விதமான சேவைகளை நேரடி தொடர்பில்லாமல் ஆன்லைன் தளத்தின் வாயிலாக மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சகம் வழங்கி வருகின்றது.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பித்தல், முகவரி மாற்றுதல், பதிவு சான்று மற்றும் கற்போர் உரிமம் (learner's licence) பெறுதல் என பல்வேறு சேவைகளை நேரடி தொடர்பில்லாமல் ஆன்லைன் வாயிலாகவே, பரிசீலித்து வழங்கி வருகின்றது மத்திய போக்குவரத்துத்துறை.

இந்த சேவைகளுக்கே அமைச்சகம் ஆதார் கட்டாயம் என்ற அறிவிப்பை தற்போது வெளியிட்டிருக்கின்றது. முறைகேடுகளைத் தவிர்க்கும் நோக்கில் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. இதுதவிர, ஆன்லைன் சேவையை துரிதப்படுத்தும் நோக்கிலும் இதனைக் கட்டாயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், ஆதார் அட்டை இல்லாதோர், ஆதார் அட்டையைச் சமர்பிக்க வேண்டாம் என நினைப்போர், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று சேவையைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு ஆதார் கட்டாயம் என கேட்கப்படாது.

ஆன்லைன் வாயிலாக அரசின் இணைய வழி சேவையைப் பயன்படுத்துவோர் பலர் முறைகேடான மற்றும் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. இதனைத் தொடர்ந்தே அமைச்சகம் ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியிருக்கின்றது.