ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் அதிர்ச்சி அடைந்தது இவர்கள்தான்

ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில், தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல், சிலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில், தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய தகவல், சிலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு, ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (Hindustan Aeronautics Limited-HAL) செயல்பட்டு வருகிறது. சுருக்கமாக எச்ஏஎல் என அழைக்கப்படும் இது, மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாகும்.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ், எச்ஏஎல் நிறுவனம் செயல்பட்டு கொண்டுள்ளது. நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு துறைகளின் வளர்ச்சியில், எச்ஏஎல் நிறுவனம் மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருகிறது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

தற்போதைய நிலையில், இந்தியாவின் முப்படைகளின் போக்குவரத்திற்கு பயன்படும் விமானங்கள், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவற்றை எச்ஏஎல் தயாரித்து கொண்டுள்ளது. இதுதவிர ஜெட் இன்ஜின்கள் மற்றும் அவற்றின் ஸ்பேர் பார்ட்ஸ்களையும் எச்ஏஎல் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

மிகவும் புகழ்பெற்ற தேஜஸ் போர் விமானம், துருவ் (அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர்) மற்றும் ருத்ரா (அட்டாக் ஹெலிகாப்டர்) ஆகிய ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை எச்ஏஎல் நிறுவனத்தினுடைய தயாரிப்புகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

ரஷ்யாவை சேர்ந்த சுகோய் கார்ப்பரேஷனின் 5ம் தலைமுறை போர் விமானங்கள், போயிங் விமானங்களின் உதிரி பாகங்கள், மிக் 29-கே விமானத்தின் ‘டர்போஃபேன்' இன்ஜின் ஆகியவற்றின் தயாரிப்புகளிலும் எச்ஏஎல் நிறுவனத்தின் பங்களிப்பு மிகப்பெரியது என்பது கவனிக்கத்தக்கது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

இவை எல்லாம் தவிர பயணிகள் விமானங்கள், கிளைடர்கள், ஆளில்லா ஏரியல் வாகனங்களையும் எச்ஏஎல் நிறுவனம் தயாரித்து வருகிறது. தெற்காசியாவின் முதல் போர் விமானத்தை தயாரித்த பெருமை எச்ஏஎல் நிறுவனத்தையே சாரும்.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

தற்போதைய நிலையில், சீனா, ஜப்பான் போன்ற நாடுகளை எல்லாம் உள்ளடக்கிய ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய வாண்வெளி தொழில் துறை நிறுவனங்களில் ஒன்றாக எச்ஏஎல் திகழ்ந்து வருகிறது. இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த எச்ஏஎல் நிறுவனம் கடந்த 1940ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

அப்போது இதற்கு ஹிந்துஸ்தான் ஏர்கிராஃப்ட் (Hindustan Aircraft) என்றே பெயர் சூட்டப்பட்டிருந்தது. ஆனால் இந்தியா விடுதலை அடைந்ததற்கு பின்பாக, அதாவது கடந்த 1964ம் ஆண்டில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

சமீப காலமாக எச்ஏஎல் நிறுவனம் தலைப்பு செய்திகளில் தவறாமல் இடம் பிடித்து கொண்டுள்ளது. ''ரபேல்'' போர் விமான ஒப்பந்த சர்ச்சைதான் இதற்கு மிக முக்கியமான காரணம். இதன்மூலம் அனைவராலும் கவனிக்க கூடிய நிறுவனங்களில் ஒன்றாக இன்று எச்ஏஎல் உள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் என்ற நிறுவனத்திடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால் இதில் மத்திய பாஜக அரசு, பல கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

அதுமட்டுமல்லாமல் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் இருந்து, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கியது ஏன்? எனவும் எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

அதாவது குறிப்பிட்ட அளவிலான ரபேல் போர் விமானங்களை, இந்தியாவின் எச்ஏஎல் நிறுவனத்துடன் இணைந்து, டசால்ட் நிறுவனம் உற்பத்தி செய்து தர வேண்டும் என்றுதான் முதலில் உடன்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

இதனால் ரபேல் போர் விமானத்தின் தொழில்நுட்பங்கள் இந்தியாவின் கைகளுக்கு வரவிருந்தன. டசால்ட் நிறுவனத்தின் உதவி இல்லாமல், ரபேல் போர் விமானங்களை இந்தியாவே தயாரித்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் ஆட்சியில் இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, இந்த ஒப்பந்தத்தில் இருந்து, எச்ஏஎல் நிறுவனத்தை நீக்கி விட்டு, போர் விமானங்களை தயாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ரிலையன்ஸ் டிபென்ஸ் என்ற நிறுவனத்தை சேர்த்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

சமீபத்தில்தான் தொடங்கப்பட்டதாக கூறப்படும் ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனமானது, இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற தொழில் அதிபர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டுள்ள அனில் அம்பானிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம்.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்ஏஎல் நிறுவனத்திற்கு கிடைக்கவிருந்த ரபேல் போர் விமான தொழில்நுட்பத்தை, மத்திய பாஜக அரசு தனியாருக்கு தாரை வார்த்து விட்டதாகவும், இதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும்தான் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

அதுமட்டுமல்லாமல் பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே எச்ஏஎல் நிறுவனத்தின் அழிவு காலம் தொடங்கி விட்டதாகவும் எதிர்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. ஆனால் இதையெல்லாம் ஒட்டுமொத்தமாக மறுத்துள்ள மத்திய அரசு, எச்ஏஎல் நிறுவனம் லாபம் ஈட்டியுள்ளது தொடர்பான தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

கடந்த 2015-16ம் நிதியாண்டு முதல் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வரை எச்ஏஎல் நிறுவனம் மொத்தம் 58,651 கோடி ரூபாயை நிகர வருவாயாக ஈட்டியுள்ளது. இதில், எச்ஏஎல் நிறுவனத்தின் லாபம் 7,334 கோடி ரூபாய் ஆகும். அதாவது கடந்த 4 ஆண்டுகளில் எச்ஏஎல் நிறுவனம் 7,334 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

நாடாளுமன்றத்தின் மக்களையில், கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ப்ரே இந்த தகவல்களை வெளியிட்டார். எதிர்கட்சிகளின் வாயை அடைப்பதற்காக மத்திய அரசு மேற்கண்ட தகவல்களை வெளியிட்டுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட இந்த புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

இதனிடையே நிதியாண்டு வாரியாக எச்ஏஎல் நிறுவனம் ஈட்டிய நிகர வருவாய் மற்றும் லாபம் உள்ளிட்ட தகவல்களையும் மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2015-16ம் ஆண்டில், எச்ஏஎல் நிறுவனம் ஈட்டிய நிகர வருவாய் 16,758 கோடி ரூபாய்.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

இது 2016-17ம் ஆண்டில் 17,950 கோடி ரூபாயாகவும், 2017-18ம் ஆண்டில் 18,519 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. இதனிடையே நடப்பு நிதியாண்டில் (கடந்த செப்டம்பர் மாதம் வரை), எச்ஏஎல் நிறுவனமானது, 5,424 கோடி ரூபாயை, நிகர வருவாயாக ஈட்டியுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

ஆக மொத்தம் கடந்த 4 ஆண்டுகளில், எச்ஏஎல் நிறுவனமானது, 58,651 கோடி ரூபாயை நிகர வருவாயாக ஈட்டியுள்ளது. அதேபோல் எச்ஏஎல் நிறுவனமானது, கடந்த 2015-16ம் ஆண்டில் 1,998 கோடி ரூபாய் லாபத்தையும், 2016-17ம் ஆண்டில் 2,616 கோடி ரூபாய் லாபத்தையும் ஈட்டியுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

2017-18ம் ஆண்டில் எச்ஏஎல் நிறுவனத்தின் லாபம் 2,070 கோடி ரூபாய். நடப்பு நிதியாண்டில் (கடந்த செப்டம்பர் மாதம் வரை), எச்ஏஎல் நிறுவனம், 650 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆக மொத்தத்தில் கடந்த 4 ஆண்டுகளில் எச்ஏஎல் நிறுவனம் 7,334 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.

ரபேல் போர் விமான ஊழல்... மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவலால் எதிர்கட்சிகள் அதிர்ச்சி...

பாஜக அரசு பொறுப்பேற்றது முதலே எச்ஏஎல் நிறுவனம் அழிவை சந்தித்து வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த சூழலில் அந்நிறுவனம் கடந்த 4 ஆண்டுகளில் கணிசமான லாபத்தை ஈட்டியிருப்பது எதிர்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை மறுப்பது போல் உள்ளது. இதனால் எதிர்கட்சிகள் அதிர்ச்சியடைந்துள்ளன.

Image Courtesy: HAL

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Aerospace Major HAL Made Rs.7,334 Crore Profit In Last Four Years. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X