Just In
- 31 min ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 2 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 5 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- 7 hrs ago படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
Don't Miss!
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Movies Actress Sujitha: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி.. சூப்பர்ல!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நாட்டையே உலுக்கிய சம்பவம்... பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்ற ரிக்ஸா டிரைவர்... ஏன் தெரியுமா?
ரிக்ஸா டிரைவர் ஒருவர் பினாயில் குடித்து தற்கொலை முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மோட்டார் வாகன சட்டம் வாகன ஓட்டிகளை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டம் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது. இதில் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் கெடுபிடி காட்டி வருகின்றனர். அபராத தொகைகள் மிகவும் கடுமையாக உள்ளதால், அதனை செலுத்த பயந்து கொண்டு வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பார்கள் என மத்திய அரசு நம்புகிறது. எனவே இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை குறையும் என்பது மத்திய அரசின் திட்டம்.
ஆனால் கடுமையான அபராத தொகைகளால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவார்கள் என ஒரு சில மாநில அரசுகள் கூறியுள்ளன. எனவே அந்த மாநிலங்களில் எல்லாம் போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் குறைக்கப்பட்டுள்ளன. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் வாகன ஓட்டிகளுக்கு போலீசார் தொடர்ந்து கடுமையான அபராதங்களை விதித்து வருகின்றனர்.
சில சமயங்களில் அபராத தொகை லட்சக்கணக்கில் செல்கிறது. இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டே இருக்கின்றன. இந்த சூழலில் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ரிக்ஸா டிரைவர் ஒருவருக்கு போலீசார் கடுமையான அபராதத்தை விதித்தனர். அவருக்கு 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
ராஜூ சோலங்கி என்ற ரிக்ஸா டிரைவருக்குதான் போலீசார் இந்த கடுமையான அபராதத்தை விதித்தனர். ராஜூ சோலங்கி பி.காம் படித்துள்ளார். ஆனால் சரியான வேலை கிடைக்காத காரணத்தால், அவர் ரிக்ஸா ஓட்ட தொடங்கினார். இப்படிப்பட்ட சூழலில்தான் அவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர். ஆனால் அவரது குடும்ப சூழலோ வறுமையில் வாடி வருகிறது.
எனவே 18 ஆயிரம் ரூபாய் அபராதம் என்றதும் ராஜூ சோலங்கி அதிர்ச்சியடைந்து விட்டார். போதாக்குறைக்கு அபராத தொகையை செலுத்த தவறியதால், ராஜூ சோலங்கியின் ரிக்ஸா பறிமுதலும் செய்யப்பட்டு விட்டது. எனவே தனது வாழ்க்கையை முடித்து கொள்ளும் விபரீத முடிவை ராஜூ சோலங்கி எடுத்து விட்டார்.
அவர் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர். ''எனது ரிக்ஸா பறிமுதல் செய்யப்பட்டு விட்டதால் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை'' என ராஜூ சோலங்கி தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக ஏற்பட்ட விரக்தியால்தான் அவர் தற்கொலை முயற்சியை கையில் எடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக கடும் அபராத தொகைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வாகன ஓட்டி ஒருவர் தனது பைக்கை நடுரோட்டிலேயே தீ வைத்து கொளுத்தியது குறிப்பிடத்தக்கது.