Just In
- 1 hr ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 2 hrs ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Movies Actor Vijay Antony: பணத்திற்காக வாக்கை விற்காதீர்கள்.. தெளிவுபடுத்திய நடிகர் விஜய் ஆண்டனி!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
செம ட்ரிக்ஸ்! ஒரு சில பயணிகளை திடீர்னு விமானத்தில் ஏத்த மாட்டாங்க! இது விமான நிறுவனங்களின் வியாபார தந்திரம்!
டிக்கெட் வாங்கியிருந்தாலும், ஒரு சில பயணிகளுக்கு விமானத்தில் பறக்கும் வாய்ப்பு ஏன் திடீரென மறுக்கப்படுகிறது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
வாழ்க்கையில் ஒரு முறையாவது விமானத்தில் பயணம் செய்து பார்த்து விட வேண்டும் என்ற ஆசை நம் அனைவருக்கும் உள்ளது. ஆனால் உண்மை என்னவென்றால், விமானங்களில் பயணம் செய்வது என்பது மிகவும் சிரமமான விஷயங்களில் ஒன்றாகும். அடிக்கடி விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கு மட்டும்தான், அதன் கஷ்டங்களை பற்றி தெளிவாக தெரியும்.
விமானங்களில் பயணம் செய்ய வேண்டுமென்றால் நீங்கள் முன் கூட்டியே தயார் ஆக வேண்டும். அத்துடன் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையத்திற்கு சென்று விட வேண்டும். மேலும் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உங்களால் விமானத்தில் பொருட்களை கொண்டு செல்ல முடியும். இதுதவிர விமான நிலையங்களில் பாதுகாப்பு கெடுபிடிகளும் கடுமையாக இருக்கும்.
இத்தனை பிரச்னைகளையும் தாண்டி ஒரு வழியாக உள்ளே சென்றாலும் கூட, சில சமயங்களில் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படுவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. ஏதாவது தவறு செய்து விட்டால், விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு நமக்கு மறுக்கப்படலாம் என நீங்கள் தற்போது நினைக்கலாம்.
ஆனால் எந்த தவறும் செய்யாவிட்டாலும் கூட, நீங்கள் டிக்கெட் எடுத்த விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு உங்களுக்கு திடீரென மறுக்கப்படலாம். ''நான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் டிக்கெட் எடுத்துள்ளேன். மேலும் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும்போது நான் இல்லாமல் எப்படி விமானம் செல்ல முடியும்'' என நீங்கள் ஆதங்கப்படுவது புரிகிறது.
இங்கேதான் விமான நிறுவனங்களின் சூட்சமம் மறைந்திருக்கிறது. அதிக லாபம் சம்பாதிக்க வேண்டும் என்ற விமான நிறுவனங்களின் ஆசைதான், உங்களுக்கு விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு கடைசி நேரத்தில் மறுக்கப்படுவதற்கான காரணம். விமானத்தில் பயணம் செய்யும் ஒவ்வொருவரும் விமான நிறுவனங்களின் இந்த சூட்சமத்தை தெரிந்து வைத்து கொள்வது மிகவும் அவசியமானது.
விமான நிறுவனங்கள் சில சமயங்களில் விமானத்தில் உள்ள இருக்கைகளை காட்டிலும் அதிக டிக்கெட்களை விற்பனை செய்து விடும். உதாரணத்திற்கு ஒரு விமானத்தில் 100 இருக்கைகள் மட்டுமே உள்ளது என வைத்து கொள்வோம். ஆனால் விமான நிறுவனங்கள் 110 டிக்கெட்களை விற்பனை செய்து விடும். இது விமான நிறுவனங்களின் வியாபார தந்திரங்களில் ஒன்று.
ஒருவேளை பயணிகள் யாராவது டிக்கெட்களை திடீரென ரத்து செய்து விட்டால், சில இருக்கைகள் காலியாக இருக்கும். இது விமான நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை இவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டால், ஏற்கனவே கூடுதலாக விற்பனை செய்யப்பட்டிருக்கும் டிக்கெட்கள் மூலம் இந்த நஷ்டத்தை விமான நிறுவனங்கள் ஈடுகட்டி கொள்ளும்.
ஒருவேளை 110 பயணிகளும் வந்து விட்டால் சிக்கல்தான். கூடுதலாக டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்ட 10 பயணிகளுக்கு சீட்கள் இருக்காது என்பதால், அவர்களுக்கு விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு திடீரென மறுக்கப்பட்டு விடும். இந்த 10 பேரில் நீங்கள் ஒருவராக இருந்து விட்டால், நீங்கள் டிக்கெட் எடுத்த விமானத்திலேயே பயணம் செய்யும் வாய்ப்பை இழப்பீர்கள்.
ஆனால் உங்களுக்கான மாற்று ஏற்பாடுகளை விமான நிறுவனங்கள் செய்து கொடுக்கும் என்பது கொஞ்சம் ஆறுதலான விஷயம். அதாவது வேறு ஒரு விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்குவது போன்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும். எனினும் திடீரென விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டால், நாம் அசௌகரியங்களை சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாக விமான நிறுவனங்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டுதான் இருக்கைகளை விட அதிக டிக்கெட்களை விற்பனை செய்கின்றன. உதாரணத்திற்கு சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானங்களில் சராசரியாக 10 பயணிகள் டிக்கெட்களை ரத்து செய்து விடுகின்றனர் என்றால், விமான நிறுவனங்கள் 10 டிக்கெட்களை கூடுதலாக விற்பனை செய்யும்.
எவ்வளவு டிக்கெட்களை கூடுதலாக விற்பனை செய்யலாம் என்ற முடிவை விமான நிறுவனங்கள் எடுப்பதற்கு கடந்த கால தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன. எனினும் இந்த கணக்கீடுகள் அனைத்து நேரங்களிலும் சரியாக இருக்காது. ஒரு சில சமயங்களில், இருக்கைகள் இருப்பதை காட்டிலும் அதிக பயணிகள் வந்து விடுவார்கள். அப்போதுதான் விமானத்தில் பயணிக்கும் வாய்ப்பு சில பயணிகளுக்கு மறுக்கப்படும்.
-
என்னதான் பைக் காதலரா இருந்தாலும் இதெல்லாம் ஓவருங்க.. நடிகர் ஜான் ஆபிரகாம் வாங்கிய இந்த பைக்கின் விலை இவ்வளவா!!
-
ரிமோட் சாவியுடன் யமஹா ஸ்கூட்டர் அறிமுகம்.. வெறும் 3 ஆயிரம் ரூபாதான் அதிகமா!.. ஆக்டிவா பொழப்புல மண்ணை போடதான்!
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!