பீகாரில் அரசியல் மாற்றத்தை நிகழ்த்த போறவருக்கு இந்த கார் எல்லாம் சாதாரணம்! கட்சி கொடி பொனட்டில் பறக்குதா!
இந்திய அரசியல்வாதிகளின் வாழ்க்கை முறை பல ஆண்டுகளில் வெகுவாக மாறிவிட்டது. ஒரு காலத்தில், எளிமையாக வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்யும் தலைவர்கள் இருந்தனர். ஆனால், இன்று நிலைமை வேறு. பல அரசியல் தலைவர்கள் கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதிகளாக உள்ளனர். சிலர் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றனர்; சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களும் உண்டு.
இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள், தங்கள் செல்வாக்கைக் காட்ட, விலையுயர்ந்த கார்களில் அணிவகுத்துச் செல்லவே விரும்புகிறார்கள். இதற்காக, டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) மற்றும் இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) போன்ற ஆடம்பர கார்களில் பயணம் செய்யும் அரசியல்வாதிகளும் உள்ளனர். அப்படிப்பட்ட அரசியல்வாதிகளில், சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவும் ஒருவர்.

இந்த நிலையில், அண்மையில் அகிலேஷ் யாதவ் புதிய நிசான் பேட்ரோல் (Nissan Patrol) எஸ்யூவி காரை வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. 'ஆட்டோஜர்னல் இந்தியா' (Autojournal India) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பான ஒரு காணொளியைப் பகிர்ந்துள்ளது. இந்தக் காணொளியில், வெள்ளைத் நிற எஸ்யூவி கார்களின் அணிவகுப்பு அரசியல் பிரச்சாரம் நடக்கும் கூட்டத்திற்குள் செல்வது பதிவாகியுள்ளது.
இவர்கள் அனைவரும் சமாஜ்வாடி கட்சியின் தொண்டர்கள். அந்த அணிவகுப்பில், ஒரு இசுஸு எம்யூ-எக்ஸ் (Isuzu MU-X) காரும், அதற்குப் பின்னால் கட்சி கொடியுடன் நிசான் பேட்ரோல் எஸ்யூவி காரும் காணப்படுகின்றன. இந்த புதிய எஸ்யூவி, அகிலேஷ் யாதவின் கார் சேகரிப்பில் அண்மையில் இணைந்துள்ளது. நிசான் பேட்ரோல், மத்திய கிழக்குப் பகுதிகளில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார் ஆகும்.
ஜப்பானிய கார் நிறுவனமான நிசானின் பிரபலமான எஸ்யூவி இது என்றாலும், இந்தியாவில் இது அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்யப்படுவதில்லை. எனினும், பலர் இதை இந்தியாவில் இறக்குமதி செய்து பதிவு செய்து பயன்படுத்தி வருகின்றனர். காணொளியில் உள்ள நிசான் பேட்ரோல் காரும் அப்படி இறக்குமதி செய்யப்பட்ட ஒன்றே.

அகிலேஷ் யாதவிடம் உள்ள முதல் ஆடம்பர கார் இதுவல்ல. இதற்கு முன்னர் இவர் டொயோட்டா லேண்ட் க்ரூசர் எல்சி200 (Toyota Land Cruiser LC200) மற்றும் இசுஸு எம்யூ-எக்ஸ் எஸ்யூவி (Isuzu MU-X SUV) கார்களைப் பயன்படுத்தி வந்துள்ளார். இந்த புதிய நிசான் பேட்ரோல் எஸ்யூவி, உத்தரபிரதேச தலைநகரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இது சமாஜ்வாடி கட்சியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த எஸ்யூவி கார் வேறொரு அமைப்பால் அரசியல் தலைவருக்கு பரிசாக வழங்கப்பட்டது என்றும், அகிலேஷ் இதை வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ள லேட்டஸ்ட் தலைமுறை நிசான் பேட்ரோல் கார் ஆகும். தற்போதைய தலைமுறை நிசான் பேட்ரோல் காரை வைத்திருக்கும் ஒரே இந்தியர் அகிலேஷ் யாதவ் மட்டும் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அரசியல் தலைவர்களுக்கு பலரிடம் இருந்தும், பல அமைப்புகளில் இருந்தும் நன்கொடைகள் வழங்கப்படுவது வழக்கமான ஒன்றே. அவ்வாறே இந்த எஸ்யூவி காரையும் அகிலேஷ் யாதவ் பெற்றிருப்பார் என எதிர்பார்க்கிறோம். நிசான் பேட்ரோல் காரை இந்தியாவில் சிலர் வைத்திருந்தாலும், அத்தகையவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பதால், இந்த காரில் அகிலேஷ் யாதவ் செல்லும்போது கம்பீரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








