ஆதார் எண் வைத்திருந்தால் மட்டுமே சாலையில் வாகனம் ஓட்ட அனுமதி... தீவரமாகும் டிஜிட்டல் இந்தியா..!!
ஆதார் கார்டு வைத்திருந்தால் மட்டுமே சாலையில் வாகனம் ஓட்ட அனுமதி... தீவரமாகும் டிஜிட்டல் இந்தியா..!!
ஓட்டுநர் உரிமங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான ஆலோசனையில் மத்திய அரசு தீவரம் காட்டி வருகிறது.

நாட்டு மக்களின் பான் கார்டு மற்றும் மொபைல் எண்களை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஓட்டுநர் உரிமங்களையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் செயல்பாடுகள் விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் எண்ணுடன் ஓட்டுநர் உரிமம் இணைக்கப்படுவது பரிசீலனை நிலையில் தான் உள்ளது என்றாலும், இதற்கு காலவரை நிர்ணயம் செய்யப்படுமா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத் மற்றும் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இருவரும் ஆலோசனை நடத்தினர்.

அப்போது பேசிய அமைச்சர் ரவி ஷங்கர் பிரசாத், ஓட்டுநர் உரிமங்கள் பெறுவதில் இருக்கும் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகளை தடுக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

மொபைல் எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட வேண்டும் என செய்தி வெளியடப்பட்டு, அதற்கு டிசம்பர் மாதம் வரை காலவரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியான அடுத்த மாத்திரத்தில் ஓட்டுநர் உரிமங்களும் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட மத்திய அரசு தீவரம் காட்டி வருகிறது.
கடந்தாண்டு, மத்திய அரசு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்காக டிஜிலாக்கர் என்ற முறையை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் சான்றிதழ் தொடர்பான பரிசீலனை அனைத்தும் டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது.

பயனாளிகள் தங்களது அனைத்து விவரங்களையும் டிஜிலாக்கர் மூலமாகவே பரிசீலிக்கலாம். வீனாக ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் சான்றிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டிய தேவையில்லை.

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட சமயத்தில், இந்த டிஜிலாக்கர் முறை வாகன ஓட்டிகளிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








