மெர்சிடிஸ் பென்ஸ் கார் வரி ஏய்ப்பு புகாரில் அதிகாரிகளுக்கு மறைமுக பதிலடி கொடுத்த அமலா பால்..!!
மெர்சிடிஸ் பென்ஸ் கார் வரி ஏய்ப்பு புகாரில் அதிகாரிகளுக்கு மறைமுக பதிலடி கொடுத்த அமலா பால்..!!
புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து ஆடம்பர பென்ஸ் கார் மாடலை பதிவு செய்ததாக நடிகை அமலா பால் மீது புகார் எழுந்தது.

புதுவையில் வாழ்வதாக போலி முகவரி மூலம் கார்களுக்கு குறைந்த சாலை வரியை செலுத்தி பலர் மோசடி செய்துள்ளதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாயின.

இந்த விவகாரங்கள் தொடர்பாக விசாரணை நடத்த புதுச்சேரியின் ஆளுநர் கிரண் பேடி போக்குவரத்து செயலர் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த புதுவையின் போக்குவரத்து துறை அமைச்சர் எஃப். ஷாஜஹான்,
அமலா பால் வாங்கிய ரூ.1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காருக்கான சாலை வரியை செலுத்த, புதுச்சேரி திலாசுபேட்டையில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்று, எல்.ஐ.சி பாலிசி நகல் ஆகியவற்றை தனது கையெழுத்துடன் கூடிய பத்திரமுடன்அவர் தாக்கல் செய்துள்ளார்.

புதுவை அரசின் போக்குவரத்து விதிகளின் படி ஒருவர் வாகனத்தை பதிவு செய்ய, வாக்காளர் அடையாள அட்டை, பிரமாண பத்திரம் உள்ளிட்ட பல ஆவணங்களை ஆதாரங்களாக பதிவு செய்யலாம்.
Recommended Video


தற்போது தனது காரை பதிவு செய்ய அமலா பால் செலுத்தி இருக்கும் அனைத்து ஆவணங்களில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று புதுவை அமைச்சர் எஃப். ஷாஜஹான் கூறியுள்ளார்.

அமைச்சரின் கருத்து வெளியான உடன் அமலா பால் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் படகு சவாரி செய்யும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, தற்போதைக்கு படகு சவாரி செய்கிறேன், இதனால் சட்டத்தை மதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுமா?

இல்லை அதுகுறித்த ஏதேனும் கருத்துக்கள் உள்ளனவா என்பதை தகுந்த நபர்களுடன் சரிபார்க்க வேண்டுமா? என கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

டிரென்டிங்கில் இருக்கும் இந்த கருத்து, அமலா பாலின் பென்ஸ் கார் வரி ஏய்ப்பு தொடர்பான அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவரது மறைமுக பதிலடியாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








