ராங் சைடில் வரும் வாகனங்களின் டயரை கிழிக்கும் வேகத்தடையை அகற்ற உத்தரவு
இணையத்தில் வைலராக பரவிய ராங் சைடில் வருபவர்களின் கார் டயரை கிழிக்கும் ஆணி முள் வேகத்தடையை அகற்ற போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
இணையத்தில் வைலராக பரவிய ராங் சைடில் வருபவர்களின் கார் டயரை கிழிக்கும் ஆணி முள் வேகத்தடையை அகற்ற போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

புனேயில் உள்ள அமனோரா டவுண்ஷிப்பில் உள்ள பள்ளி அருகே உள்ள ரோட்டில் பைக், கார்களில் வருபவர்கள் அடிக்கடி ராங் சைடில் பயணம் செய்தனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துக்களும் நடந்து வந்தது.

இதை தடுக்க அமனோரா டவுண்ஷிப் நிறுவனம் ராங் சைடில் வாகனம் சென்றால் டயரை கிழிக்கும் வகையில் ஆணி முட்களுடன் கூடிய வேகத்தடை ஒன்றை அமைத்திருந்தது.

இந்த வேகத்தடை வழியாக வாகனங்கள் செல்லும் வீடியோவும் இணையதளங்களில் இது புனேவில் போலீஸ் அமைத்த வேகத்தடை என்று வைரலா பரவியது. பலர் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு அளித்தனர்.

இது குறித்து புனே போலீசார் விசாரித்த போது இது அமனோரா டவுண்ஷிப்பில் இருப்பது தெரியவந்து அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஆய்வில் முடிவை கடிதம் வழியாக அமனோரா டவுண்ஷிப் நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது.

அதில் உடனடியாக அந்த டயரை கிழிக்கும் வகையில் உள்ள வேகத்தடையை அகற்ற வேண்டும். அதில் அதிக ஆபத்துக்கள் நிறைந்தள்ளதாக கூறிப்பட்டிருந்தது.

இது குறித்து அமனோரா டவுண்ஷிப் துணை தலைவர் கூறியிருப்பதாவது : "பள்ளி அருகே உள்ள வாகன போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்கவே சுமார் ரூ1.5 லட்சம் செலவு செய்து அதை அமைத்தோம். இதை பொதுமக்கள், உட்பட பலர் வரவேற்றனர்.

பலர் இதை மற்ற இடங்களில் அமைக்க கோரிக்கை விடுத்தனர். ஆனால் தற்போது போலீசார் இதை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். இதனால் இதை அகற்றவிருக்கிறோம். வாகன நெருக்கடி பிரச்னைக்கு மற்றொரு நிரந்தர தீர்வை யோசிப்போம்." என கூறினார்.

இது குறித்து டிராபிக் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது : "அவர்கள் அமைத்த ஆணி முட்கள் மிகவும் கூர்மையாக இருக்கின்றன. அப்பகுதியில் யாரும் கீழே விழுந்தால் மரணம் ஏற்படும் அளவிற்கு கூட அடிபடும். இது பள்ளிக்கு அருகே அமைக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:


Click it and Unblock the Notifications








