Just In
- 37 min ago இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- 2 hrs ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 7 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 7 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
Don't Miss!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Technology அடிச்சான் பாரு காப்பி.. அச்சு அசலா Samsung போனை வெளியிட்ட சீன கம்பெனி.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சிட்டி டிராப்கில் 60 கி.மீ. வேகத்தில் விரைந்த ஆம்புலன்ஸ்... பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள்
ஆம்புலன்ஸ் சைரன் போட்டு சென்றால் எல்லோரும் அந்த வாகனத்திற்காக வழி விட வேண்டும் தான். ஆனால் இந்தியாவில் உள்ள வாகன நெருக்கடியில் எல்லா இடங்களிலும் இது சாத்தியப்படாத ஒன்று.
ஆம்புலன்ஸ் சைரன் போட்டு சென்றால் எல்லோரும் அந்த வாகனத்திற்காக வழி விட வேண்டும் தான். ஆனால் இந்தியாவில் உள்ள வாகன நெருக்கடியில் எல்லா இடங்களிலும் இது சாத்தியப்படாத ஒன்று. இந்த வகையில் கேரளாவில் சிட்டி டிராபிக்கில் 60 கி.மீ. வேகத்தில் சென்ற ஆம்புலன்ஸிற்கு மக்கள் வழிவிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்திய ரோடுகள் பெரும்பாலும் வாகன நெருக்கடி நிறைந்த ரோடுகள் தான். இந்திய டிரைவர்கள் பெரும்பாலும் லேன் முறையை ஒழுங்காக கடைபிடிப்பதில்லை. இதனால் பல நேரங்களில் அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்களாக ஆம்புலன்ஸ், தீயனைப்பு வாகனம், போலீஸ் வாகனங்களும் அவ்வபோது டிராபிக்கில் சிக்குவதை பார்த்திருப்போம்.
இந்தியா போன்ற பெரும் ஜனத்தொகை கொண்ட நாட்டில் இவ்வாறான நெருக்கடியை சமாளிப்பதது மிகப்பெரிய கடினம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒழுக்கத்ததை கொண்டு வந்தால் மட்டும் இந்த பிரச்னையை ஒரளவிற்காகவாது சமாளிக்க முடியும். சமீபகாலமாக மீடியாக்களின் தாக்கத்தால் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்கு வழி விட வேண்டும் என்று மக்கள் மத்தியில் எண்ணம் வந்து விட்டது.
அதை நாம் உணரும் விதமாக கேரள மாநிலத்தில் ஆம்புலன்ஸிற்கு காரில் செல்பவர்கள் வழி விடும் வீடியோ காட்சி ஒன்று வெளியாகியிருந்தது. அது காண்பவர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது. இந்தியர்கள் மத்தியில் ஆம்புலன்ஸிற்கு வழிவிட வேண்டும் என இவ்வளவு தூரம் விழிப்புணர்வு வந்துவிட்டாத என்று தோன்றுகிறது. இது போன்ற காட்சியை இந்தியா போன்ற வேறு நாடுகளில் பார்ப்பது சிரமம்.
கேரளாவில் உள்ள ஒரு ஆம்புலன்ஸின் டேஸ் போர்டில் அமைக்கப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த காட்சி. இதில் ஆம்புலன்ஸ் சிங்கிள் லேன் உள்ள பிரிக்கப்படாத ரோட்டில் பயணம் செய்கிறது. சைரன் சத்தம் மற்றும் தொடர் ஹாரன் ஒலித்து கொண்டே வேகமாக ஆம்புலன்ஸ் செல்கிறது.
எவ்வளவு வேகம் என சொல்ல முடியாவிட்டாலும், சுமார் 60 கி.மீ. வேகத்தில் ஆம்புலன்ஸ் செல்கிறது என கணிக்க முடிகிறது. இந்த ஆம்புலன்ஸ் டிரைவர் சைரன் மற்றும் தொடர்ந்து ஹாரன் அடித்து கொண்டு முன்னே செல்லும்வாகன ஓட்டிகளை எச்சரித்து சென்றதால் ஆம்புலன்ஸிற்கு எல்லா வாகன ஓட்டிகளும் வழிவிட்டனர்.
இது போன்ற சம்பவத்தை இந்தியாவில் பார்ப்பது மிகவும் சிரமம், வாகன ஓட்டிகளே ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும் என நினைத்தாலும், இங்குள்ள வாகன நெருக்கடியில் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் குறைவு தான். ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு வாகனங்களும் டிராப்பிக்கில் சிக்கும் நிலையை தான் இங்கே பார்க்க முடியும்.
இந்நிலையில் கேரள மாநிலம் இந்த இரண்டு வாகனங்களும் விரைவாக செல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்ந்து அவசர வாகளுக்கான கிரீன் காரிடார் என்ற பாதையை உருவாக்கி வருகிறது. முக்கியமாக உடல் உறுப்புகள் தானம் செய்யும் போது வாகனங்கள் விரைவாக செல்ல இந்த பாதை உருவாக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு கேராளாவில் உடல் உறுப்பு தானத்திற்காக 516 கிலோ மீட்டரை வெறும் 7 மணி நேரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் கடந்துள்ளது. தற்போது கரீஸ் காரிடார் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இது மக்கள் மத்தியில் ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தான் அவர்கள் ஆம்புலன்ஸிற்கு ஆச்சரிப்படுத்தும் வகையில் வழிவிட்டுள்ளனர். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இது கேரளாவில் நடக்கும் ஒரு நிகழ்வு தான். ஆனால் இது போன்ற பல நிகழ்வுகள் கேரளாவில் நிகழ்ந்துள்ளது. இதற்கான வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
அவசர கால வாகனங்களுக்கு வழி விட வேண்டியது. ரோட்டில் வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரின் கடமை. நாம் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அங்கு ஒரு உயிர் துடித்து கொண்டிருக்கிறது என்ற எண்ணம் நமக்கு வரவேண்டும். ரோட்டில் உள்ள டிராப்பிக்கில் அவசர கால வாகனங்கள் சிக்கிய காரணத்தால் கூட உயிரிழப்புகள் ஏற்படலாம்.
இந்தியாவில் அவசர கால வாகனங்களாக ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், போலீஸ் வாகனம் ஆகிய வாகனங்கள் சைரன் போட்டு கொண்டு செல்லும் போது அந்த வாகனத்திற்க வழி விடாத வாகனங்களுக்கு ரூ 10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம் என சட்டம் உள்ளது.
ஆனால் இவ்வாறு யாருக்காவது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதா என்றால் அது கேள்வி குறி தான். ஆம்புலன்ஸிற்கு வழி விட வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வர வேண்டும். அதற்காக அரசும் களப்பணியாற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.