Just In
- 6 min ago தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- 31 min ago தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- 4 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 5 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
Don't Miss!
- News கர்நாடகா: குமாரசாமி, பிரஜ்வல், டிகே சுரேஷ்.. அதிகாரத்தை கைப்பற்ற முட்டி மோதும் 'கவுடா குடும்பங்கள்'!
- Movies விட்டா பத்திரிகையே வெச்சிடுவார்போல.. ரத்னம் படத்துக்காக ஹரி செஞ்சத பாருங்க.. அவருக்கா இந்த நிலைமை
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சாலையை செப்பனிடகோரி நூதன போராட்டம்... பெங்களூரில் பரபரப்பு
சாலைகளில் இருக்கும் குண்டு குழிகள், பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் மரண குழிகளாகவே உள்ளன. சில வேளைகளில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால், சாலைகள் செப்பனிடப்படாமல் அதிக விபத்துக்கள் நடக்க காரணமாக இருக்கின்றன. பொதுமக்களின் போராட்டங்கள் கூட வீணாகிவிடுவதுண்டு.
இந்தநிலையில், பெங்களூரை சேர்ந்த ஒரு சமூக நல அமைப்பு ஒன்று செப்பனிடாத சாலை குறித்து மாநகராட்சியின் கவனத்தை ஈர்க்க ஒரு நூதன போராட்டத்தை நடத்தி காட்டியுள்ளது.
வித்தியாசமான முயற்சி
பெங்களூரை சேர்ந்த நம்ம பெங்களூரை பவுண்டேசன் என்ற லாப நோக்கு இல்லாத சமூக சேவை அமைப்புதான் ஒரு நூதன போராட்டத்தை நடத்தியுள்ளது.
பாம்புக்கு பயப்படுமா மாநகராட்சி...
பெங்களூர், யஷ்வந்த்பூரில் நீண்ட நாட்களாக செப்பனிடாமல் இருந்த சாலை பள்ளத்தில் ராட்சத பாம்பு பொம்மையை வைத்துவிட்டனர்.
பரபரப்பான ஞாயிறு...
அந்த சாலையில் நேற்று வைக்கப்பட்ட அந்த பாம்பு பொம்மையை அவ்வழியே செல்வோர் பார்த்து மிரண்டு போனதுடன், அதுபற்றி ஆர்வமாக கேட்டு தெரிந்துகொண்டனர். அத்துடன், அந்த பாம்பு பொம்மையின் நோக்கம் குறித்து சமூக வலைதளங்களிலும் பரிமாறிக்கொண்டனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
நோக்கம்
இந்த நூதன போராட்டம் சிலருக்கு சிரிப்பாகவும், விளையாட்டாகவும், சிலருக்கு படைப்பாகவும் தோன்றலாம். ஆனால், இதன்மூலம், நாங்கள் ஒரு ஆழமான கருத்தை உணர்த்த முயற்சித்திருக்கிறோம்," என்று அந்த அமைப்பினர் தெரிவித்தனர்.
முதல்முறையல்ல...
பெங்களூருக்கு இது முதல்முறையல்ல. ஏற்கனவே, ஒரு இளைஞர் முதலை பொம்மையை வைத்து தனது எதிர்ப்பை பதிவு செய்தார். தற்போதைய போராட்டத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் செவி சாய்த்து, உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூர் மட்டுமல்ல, சென்னையிலும் இதுபோன்ற பள்ளங்கள் உடைய சாலைகளில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. அதற்கு போராட்டமும் நடத்தப்படுகிறது. இனி மாநகராட்சி செவி சாய்க்காவிடில், இதுபோன்ற பொம்மைகளை சென்னை சாலைகளிலும் பார்க்கலாம்.
Photo Source: The news minute
-
ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
-
கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!