ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

மஹிந்திரா க்ரூப்பின் சேர்மன், ஆனந்த் மஹிந்திரா மும்பையில் இயங்கிவரும் புதிய படகு சவாரியை வெகுவாக பாராட்டி ட்விட் செய்துள்ளார். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

மும்பையில் மண்ட்வா பகுதி வரையில் இயங்கும் ரோரோ படகு சவாரியின் வீடியோவினை டைகூன் வணிகங்கள் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படகு சவாரியை பாராட்டியது மட்டுமில்லாமல் இந்த பயணத்தின்போது கார்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்த படங்களையும் ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்துள்ளார்.

ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

குறிப்பாக படகின் உட்புறத்தை வெகுவாக பாரட்டியுள்ள ஆனந்த் மஹிந்திரா இந்த படகு பயணம் நீண்ட வருடங்களுக்கு இருக்கும் என்றும் நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார். மேலும் தற்போதைய சூழல் சீரானவுடன் இந்த படகில் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தனது ஆசையையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மும்பையில் உள்ள இந்தியாவின் வாசல் மற்றும் மண்ட்வா பகுதிகளுக்கு இடைப்பட்ட படகு சவாரியின்போது எடுக்கப்பட்ட வீடியோ இது. நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், பார்ப்பதற்கு அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த படகு சவாரி நீண்ட வருடங்களுக்கு செயல்பாட்டில் இருக்கும்.

ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

கொரோனாவின் தாக்கம் தணிந்தவுடன் இந்த படகில் ஒரு முறையேனும் சவாரி செய்ய வேண்டும் என கூறியுள்ள அவர், அடுத்த படத்தில் இந்த ரோரோ படகு சவாரியில் கார்கள் பாதுக்காக்கப்படும் பிரிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதை வெளிக்காட்டியுள்ளார்.

ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

இதற்கு மரியாதை நிமித்தமாக எம்2எம் படகுகள் நிறுவனம் பகிர்ந்துள்ள பதிவில், உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி! எம்2எம் படகுகளில் நாங்கள் வழங்கும் வசதி, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டின் எளிமை ஆகியவற்றை நீங்கள் நேரில் அனுபவிக்க நாங்கள் காத்திருக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.

ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

ரோரோ படகுகள் என்ற வார்த்தைகளில் ரோ-ரோ என்பது ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை குறிக்கிறது. அதாவது மற்ற படகுகளில் செல்லும் பயணிகளின் கார்களை கடல் தாண்டி பத்திரமாக எடுத்து செல்ல உதவும் சேவை தான் ரோரோ படகுகள் என்பது இதற்கு அர்த்தம்.

ஒருமுறையேனும் பயணம் செய்ய வேண்டுமாம்... ஆனந்த் மஹிந்திராவை கவர்ந்த மும்பை படகு சவாரி...

கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதியில் இருந்து தனது படகு சவாரியை மீண்டும் துவங்கிய எம்2எம் படகுகள் நிறுவனம் செப்டம்பர் 4ஆம் தேதி வரையிலான படகு பயணங்களின் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதேபோல் பயண நேரத்தை 4 மணிநேரத்தில் இருந்து 1 மணிநேரமாக நிர்வகிக்கும் நிறுவனம் குறைத்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 27, 2020, 18:30 [IST]
English summary
Anand Mahindra shares video of luxury RoRo ferry service in Mumbai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+