Just In
- 1 hr ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- 1 hr ago உத்தர பிரதேசத்தை இந்த விஷயத்தில் தமிழ்நாடு முந்த இன்னும் பல காலம் ஆகும்!! மாநில அரசு கொஞ்சம் வேகமா செயல்படனும்
- 4 hrs ago ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- 4 hrs ago இவ்வளவு சின்ன வயதில் எவ்வளவு பெரிய ஞானம்!! சிறுவனின் செயலால் சற்று நேரத்தில் பரபரப்பாகிய ஏர் இந்தியா விமானம்!
Don't Miss!
- Sports புதிய விதியால் எல்லா டீம்க்கும் தலைவலி தான்.. கடைசி 2 ஓவரில் சொதப்பிவிட்டோம்.. குஜராம் கேப்டன் கில்
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
காரை ஈஸியா பார்க்கிங் செய்ய செம ஐடியா... தொழில் அதிபர்களையே வாய் பிளக்க வைத்த சாமானிய இந்தியர்
காரை எளிதாக பார்க்கிங் செய்ய வழி கண்டுபிடித்துள்ள இந்தியருக்கு தொழில் அதிபர்கள் உள்பட பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவில் இட நெருக்கடி பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. பொது சாலைகள் ஆகட்டும் அல்லது வீடாகட்டும், இட நெருக்கடி என்பது தற்போது தவிர்க்க முடியாத பிரச்னையாக மாறி விட்டது. இட நெருக்கடி காரணமாக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலை விரித்தாடி வருகிறது. குறிப்பாக பெங்களூர், சென்னை போன்ற பெரு நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
வாகனங்கள் செல்லவே சாலைகளில் இடம் இல்லாத போது, பார்க்கிங் செய்வதற்கு மட்டும் இடம் இருக்குமா என்ன? ஷாப்பிங் போன்ற ஏதேனும் ஒரு விஷயத்திற்காக தற்போது வெளியில் சென்றால், வாகனங்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்வதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. இதற்கு பயந்து கொண்டே வாகனங்களில் செல்வதை பலர் தவிர்க்கின்றனர்.
வீடுகளிலும் நிலைமை அப்படித்தான் உள்ளது. வாகனங்களை பார்க்கிங் செய்ய பெரும்பாலான வீடுகளில் இடம் கிடையாது. எனவே வீடுகளுக்கு வெளியில் பாதுகாப்பற்ற முறையில்தான் வாகனங்களை பலர் பார்க்கிங் செய்கின்றனர். இதனால் வாகனங்கள் திருடப்படும் சம்பவங்களும் கூட அதிகமாக நடைபெறுகின்றன.
பெரு நகரங்களை எடுத்து கொண்டால், வீடுகளுக்கு வெளியே நிறுத்தப்படும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில், தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதில், கார் உரிமையாளர் ஒருவர் நெருக்கடியான இடத்தில் சமயோசிதமாக செயல்பட்டு காரை லாவகமாக பார்க்கிங் செய்கிறார்.
இந்தியர்களின் புத்தி கூர்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். 1 நிமிடம் மற்றும் 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ, போதிய இடவசதி இல்லாத இடத்தில், கார் பாதுகாப்பாக பார்க்கிங் செய்யப்படுவதை நமக்கு காட்டுகிறது. கருப்பு வண்ண கார் ஒன்று குடியிருப்புக்குள் நுழைவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.
அப்போது ஒருவர் முன்னால் சென்று, ட்ராக் ஒன்றை வெளியே இழுத்து வருகிறார். இதன்பின்பு டிரைவர் அந்த காரை டிராக்கின் மீது ஏற்றி விட்டு கீழே இறங்கி கொள்கிறார். பின்னர் அந்த டிராக்கை அவர்கள் மீண்டும் பின்னால் தள்ளி விடுகின்றனர். இதன்மூலம் கார் பாதுகாப்பாக பார்க்கிங் செய்யப்பட்டு விட்டது. வைரல் ஆகி வரும் அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
டிவிட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பலர் லைக் மற்றும் ரீ-டிவிட் செய்துள்ளனர். இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவும், இந்த பதிவை ரீ-டிவிட் செய்துள்ளார் என்பதுதான். தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா இந்தியா மட்டுமல்லாது, உலக ஆட்டோமொபைல் துறையிலேயே மிக முக்கியமான நபர்களில் ஒருவராக உள்ளார்.
அவர் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்க கூடியவர். சாமானியர்களின் கேள்விகளுக்கு கூட ஆனந்த் மஹிந்திராவிடம் இருந்து நேரடியாக பதில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்த வீடியோவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர். வாழ்க்கையில் உள்ள பிரச்னைகளுக்கு எளிதாக தீர்வு கண்டுபிடிப்பதில் இந்தியர்கள் புத்திசாலிகள்.
டூத் பேஸ்ட்டில் கடைசி துளி வரை பிழிந்து எடுப்பதாகட்டும் அல்லது தண்ணீர் பாட்டிலை பாத்ரூமில் ஷவராக பயன்படுத்துவதாகட்டும், இந்தியர்களுக்கு நிகர் இந்தியர்கள்தான். இந்த வகையில் காரை பார்க்கிங் செய்த இந்த நுட்பமும் சமூக வலை தளங்களில் தற்போது நெட்டிசன்களிடம் இருந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது.
-
இந்தியால ஒரு ஃபோக்ஸ்வேகன் கார் இந்தளவிற்கு சேல்ஸ் ஆகுதா! மாருதிக்குலாம் இந்நேரம் குளிர் காச்சலே வந்திருக்கும்!
-
ஆக்டிவா எந்த அவதாரம் எடுத்தாலும் இவங்க விட மாட்டாங்க போலையே! விடாது கருப்புபோல விடாது விரட்டும் சுஸுகி!
-
ஃபார்ச்சூனரில் தலைவன் பதிப்பை அறிமுகம் செய்த டொயோட்டா.. பேருல மட்டுமல்ல மத்ததுலையும் இது தலைவன்தான்!