Just In
- 44 min ago அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- 50 min ago ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் பைக் ரேஸர்கள்!! போட்டி தீயாய் இருந்துச்சு... முழு வீடியோ!
- 3 hrs ago மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- 3 hrs ago ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
Don't Miss!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பளுதூக்கும் சேம்பியன் மீராபாய் சானுவிற்கு டியூவி300 எஸ்யூவி கார் பரிசு: ஆனந்த் மஹிந்திரா..!!
பளுதூக்கும் சேம்பியன் மீராபாய் சானுவிற்கு டியூவி300 எஸ்யூவி கார் பரிசு: ஆனந்த் மஹிந்திரா..!!
உலக பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவிற்கு மஹிந்திரா கார் பரிசளிக்கப்படவுள்ளது.
இதற்கான அறிவிப்பை மஹிந்திரா குழுமத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவிற்காக மஹிந்திரா நிறுவனம், டியூவி 300 எஸ்யூவி காரை பிரத்யேகமாக வழங்கவுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா, வீராங்கனை சாய்கோம்மின் வெற்றி பாலின பாகுபாடுகளை தகர்த்துள்ளதாக கூறினார்.
இந்தியாவை உலக அரங்கிற்கு எடுத்து சென்ற வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானுவிற்கு டியூவி 300 எஸ்யூவி காரை பரிசளிப்பத்தில் மஹிந்திரா பெருமை அடைவதாகவும் ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் உலக பளுதூக்கும் போட்டி தொடங்கி நடைபெற்று வந்தது. இதில் 48 கிலோ எடை பிரிவினருக்காக நடைபெற்ற போட்டியில் மணிப்பூரை சேர்ந்த 23 வயதான வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கம் பதக்கம் வென்றார்.
உலக பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற இராண்டாவது பெண்ணாக சாய்கோம் மீராபாய் சானு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
|
இவருக்கு முன்னர், கர்ணம் மல்லேஸ்வரி 1994 மற்றும் 1995ம் ஆண்டுகளில் தொடர்ந்து உலக பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று தங்கம் பதக்கங்களை வென்றார்.
2016ம் ஆண்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சாய்கோம் மீராபாய் சானு 48 கிலோ எடைப்பிரிவிற்கான பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டார்.
ஆனால் அவரால் பதக்கம் வெல்ல முடியவில்லை. அப்போது ஏற்பட்ட தோல்வியை மனதில் வைத்து கடுமையாக உழைத்து உலக பளுதூக்கும் போட்டியில் கலந்துகொண்டு தங்கம் வென்றுள்ளார் அவர்.
விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வீரர்களுக்கு ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து தனது பங்களிப்பை செய்து வருகிறார்.
இதற்கு முன்னதாக பேட்மிட்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்திற்கு மஹிந்திராவின் புதிய கார் மாடலை பரிசாக அறிவித்தார் ஆனந்த மஹிந்திரா.
விளையாட்டு வீரர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வரும் ஆனந்த் மஹிந்திராவிற்கு பல தரப்பு மக்கள் ட்விட்டரில் பாராட்டுதலை தெரிவித்து வருகின்றனர்.