Just In
- 11 min ago இது கார் இல்ல மிதக்கும் கப்பல்!! புதுசா வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா?
- 25 min ago கார்ல போகும் போது அதிக சத்தமாக பாட்டு கேட்டா இப்படி ஒரு பிரச்சனைவருமா? இது பலருக்கும் தெரியாத விஷயமா இருக்கு
- 58 min ago இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- 1 hr ago வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Don't Miss!
- News "கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட்".. CSK போட்டியின்போது 12 பேரை கொக்கி போட்டு தூக்கிய போலீசார்!
- Movies இழுத்தடித்த த.செ.ஞானவேல்?.. உச்சக்கட்ட டென்ஷனான ரஜினிகாந்த்?.. வேட்டையன் நிலைமை இதுவா?
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பார்ச்சூனர் காரில் குப்பை அள்ளும் 'கெத்து' மாநகராட்சி.. ஆங்ரி பேர்டு கஸ்டமரால் டொயோட்டா அதிர்ச்சி
பார்ச்சூனர் காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராத காரணத்தால், அதனை கார்ப்பரேஷன் குப்பை அள்ளும் பணிக்கு, நன்கொடையாக வழங்குவதாக தொழிலதிபர் ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்ச்சூனர் காரை ஒழுங்காக சர்வீஸ் செய்து தராத காரணத்தால், அதனை கார்ப்பரேஷன் குப்பை அள்ளும் பணிக்கு, நன்கொடையாக வழங்குவதாக தொழிலதிபர் ஒருவர் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நிறுவனத்தின் நன்மதிப்பு பாதிக்கப்படும் என்பதால், டொயோட்டா அதிர்ச்சியடைந்துள்ளது. இதுபற்றிய விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
ஆங்ரி பேர்டு பிஸ்னஸ்மேன்
மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த தொழிலதிபர் ஹேம்ராஜ் சௌத்ரி. கடந்த மார்ச் மாதம், டொயோட்டா பார்ச்சூனர் கார் ஒன்றை வாங்கினார். இதற்காக 39 லட்ச ரூபாயை, ஹேம்ராஜ் சௌத்ரி செலவழித்துள்ளார்.
ஆனால் வாங்கியது முதலே, டொயோட்டா பார்ச்சூனர் காரில் பிரச்னைகள் ஏற்பட்டு கொண்டே வந்தன. எனவே ரிப்பேர் செய்வதற்காக, அந்த காரை சர்வீஸ் சென்டரில், ஹேம்ராஜ் சௌத்ரி விட்டுள்ளார்.
எனினும் காரில் ஏற்பட்ட பிரச்னை சரி செய்யப்படவில்லை. எனவே மீண்டும் மீண்டும் சர்வீஸ் சென்டரில் காரை, ஹேம்ராஜ் சவுத்ரி விட்டுள்ளார். ஆனால் ரிப்பேர் மட்டும் சரி செய்து தரப்படவே இல்லை.
பொதுவாக ஒரு சில நிறுவனங்கள் காரை விற்பனை செய்வதோடு சரி. அதன்பிறகு சர்வீஸில் பெரிய அளவில் அவர்கள் அக்கறை காட்ட மாட்டார்கள். ஆனால் டொயோட்டா அப்படி அல்ல. வாடிக்கையாளர் சேவையில் நன்மதிப்பை பெற்ற நிறுவனம்தான் டொயோட்டா.
அப்படிப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரிலேயே, ஒழுங்காக சர்வீஸ் செய்து தராத காரணத்தால், ஹேம்ராஜ் சௌத்ரி மிகுந்த ஆத்திரமடைந்தார். எனினும் அந்த டீலருக்கு நூதன முறையில் பாடம் புகட்ட அவர் எண்ணினார்.
குப்பை வண்டி ஆன பார்ச்சூனர்
பல லட்ச ரூபாய் செலவழித்து தான் வாங்கிய டொயோட்டா பார்ச்சூனர் எஸ்யூவி கார் முழுவதும், குப்பைகளை நிரப்பினார் ஹேம்ராஜ் சௌத்ரி. பின்னர் நேராக சர்வீஸ் சென்டருக்கு சென்ற அவர், காரை குப்பைகளுடன் அப்படியே விட்டு விட்டு வந்து விட்டார்.
இதைப்பார்த்ததும் சர்வீஸ் சென்டரில் இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சில மணி நேரங்களில், அந்த கார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஹேம்ராஜ் சௌத்ரிக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அந்த காரை போலீஸ் ஸ்டேஷனுக்கு யார் அனுப்பினார்கள்? என்பது குறித்த உறுதியான தகவல் தெரியவரவில்லை. ஆனால் சர்வீஸ் சென்டரில் உள்ளவர்கள்தான், போலீஸ் ஸ்டேஷனுக்கு காரை அனுப்பியிருக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை சற்று தாமதமாக அறிந்து கொண்ட ஹேம்ராஜ் சௌத்ரி, நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். ஆனால் மிகவும் கூல்-ஆக இருந்த ஹேம்ராஜ் செளத்ரி, அந்த காரை கார்ப்பரேஷனுக்கு நன்கொடையாக அளிப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அதாவது குப்பை அள்ளும் பணிகளுக்கு அந்த காரை அவர்கள் பயன்படுத்தி கொள்ளட்டுமாம். என்ன ஒரு பெருந்தன்மை பாருங்கள்...!!!
ஹேம்ராஜ் சௌத்ரி கோபத்தில் இப்படி சொன்னாரா? அல்லது உண்மையில் அப்படி கூறினாரா? என்பது தெரியவில்லை. அதேபோல் அந்த கார் தற்போது எங்கு உள்ளது? என்ற தகவலும் வெளியாகவில்லை. எனினும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொயோட்டா பார்ச்சூனர் காரில் குப்பை நிரம்பி காணப்படும் வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இதைவிட அசிங்கப்படுத்த முடியாது
டொயோட்டா பார்ச்சூனர், அதன் செக்மெண்டில் மிகவும் வெற்றிகரமாக விற்பனையாகி வரும் கார்களில் ஒன்று. இந்த லக்ஸரி எஸ்யூவி காரானது, ஒரு மாதத்திற்கு சராசரியாக 2,000 என்ற எண்ணிக்கையிலாவது விற்பனை செய்யப்பட்டு விடும். அதாவது அதன் நெருக்கமான போட்டியாக கருதப்படும் ஃபோர்டு என்டேவர் காரை விட 2 மடங்கு அதிகம் விற்பனையாகிறது.
இந்திய மார்க்கெட்டில், டொயோட்டா பார்ச்சூனர் கார், பெட்ரோல் மற்றும் டீசல் என 2 இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது. நம்பகத்தன்மை, சொகுசு, மிகவும் மலிவான பராமரிப்பு செலவு உள்ளிட்ட காரணங்களுக்காகவே, டொயோட்டா பார்ச்சூனர் கார் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது.
மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடனான டொயோட்டா பார்ச்சூனர் காரில், 2.8 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 175 பிஎச்பி பவரையும், 420 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இதன் ஆட்டோமெட்டிக் வேரியண்ட்கள் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியவை.
இதுதவிர 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன் கூடிய வேரியண்டையும் டொயோட்டா வழங்குகிறது. இது 164 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இப்படிப்பட்ட டொயோட்டா பார்ச்சூனர் காரை, ஹேம்ராஜ் சவுத்ரியை விடவும் வேறு யாராலும் அசிங்கப்படுத்த முடியுமா என்ன?
Video Source: LoksattaLive
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்
-
தல தோனிக்கு 7கோடி ரூபாயும் கொடுத்து, முக்கிய பொறுப்பையும் கொடுத்த பிரெஞ்சு கார் நிறுவனம்..
-
சென்னை- கொல்லம் வந்தே பாரத் ரயில் திட்டம் தாமதம்! கேரள அரசு செஞ்ச தப்பு தான் காரணம்!தமிழ்நாடு இதுல சூப்பர்!
-
40அடி நீள சொகுசு படகை வாங்கினாரா நடிகர் மாதவன்! ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்துல மூழ்க வச்சுட்டாரு!