சாலையில் திடீரென செயலிழந்த பேருந்தால் 3 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரழிந்த சோகம்...!! (வீடியோ)
சாலையில் திடீரென செயலிழந்த பேருந்தால் 3 இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரழிந்த சோகம்...!! (வீடியோ)
எதிர்பார்க்காத நேரத்தில் எது வேண்டாலும் நடக்கலாம் என்பது தான் நமது வாழ்க்கையில் நிதர்சனம்.
சமீபத்தில் அதை உணர்த்தும் விதமாக ஆந்திராவில் ஒரு சாலை விபத்து நடந்தேறியுள்ளது. அதுபற்றிய தகவல்களை பார்க்கலாம்.

ஆந்திராவின் விஜயவாடாவில் சாலையில் சென்று கொண்டு இருந்த பேருந்தில் திடீரென பிரேக் அமைப்பு செயலிழந்தது.
அப்போது பேருந்து இயக்கத்தில் இருந்ததால், உடனே நிறுத்த முடியாமல் செல்ல, அதனால் பெரிய விபத்து நடந்தேறியது.

பிரேக் செயலிழந்த பேருந்தை ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியாமல் போக, அது சாலையில் சென்று கொண்டு இருந்த மூன்று இருசக்கர வாகன ஓட்டிகள் மீது ஏறியது.
Recommended Video


அதிகாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில், பல வாகன ஓட்டிகள் படுகாயமடைந்தனர். இந்த விபத்தின் மொத்த காட்சிகளும் அருகிலிருந்தே சிசிடிவி கேமராவில் பதிவாயின.

கட்டுபாட்டை இழந்த பேருந்து, டிப்பர் மீது மோதி ஒருவழியாக நின்றாலும், பிரேக் செயலிழந்து பிறகு ஓடிய மாத்திரத்தில் பல வாகன ஓட்டிகள் மீது மோதியும் சிலரை காவு வாங்கி விட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடனே பேருந்தை ஓட்டிவந்த ஓட்டுநரை கைது செய்தனர்.
மேலும், ஆந்திராவின் போக்குவரத்து அதிகாரிகள் பேருந்தின் பிரேக் செயலிழந்ததை முற்றிலுமாக மறுத்துள்ளனர்.

ஆனால் போலீசார்கள் இதற்கு மறுத்துள்ளனர். பிரேக்கை ஆராய்ந்த அவர்கள் அது செயலிழந்திருப்பதை உறுதி செய்துள்ளனர்.

போலீசார் தரப்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஆந்திரா போக்குவரத்து துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

ஆந்திராவின் எல்லா பேருந்துகளிலும், சர்வீஸ் மற்றும் ஹேண்டு பிரேக்குகள் உள்ளன. இது இரண்டுமே செயலிழந்ததாக ஓட்டுநர் கூறியிருப்பது ஏற்க முடியாது.

பேருந்து பணிமனைக்கு கொண்டு வரப்பட்ட பின்பு, பிரேக்குகளில் தரம் பரிசோதித்து, அதன் வழியே முடிவுகள் வெளியிடப்படும் என ஆந்திர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கிடையில், விபத்தால் பாதிப்படைந்தவர்கள் பேருந்திற்கு தீ வைத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களில் பிரெக்குகள் செயலிழாமல் போவது, சாதரணமாக நடப்பது தான். அதனால் ஏற்படும் விபத்துகளையும் நாம் கடந்து வருகிறோம்.

ஆனால் ஆபத்து காலத்தில் வாகனத்தை இயக்கும் நாம் அப்போது எப்படி செயல்பட வேண்டும் என்பதில் தான் நாம் அறியாமையை கடைபிடிக்கிறோம்.

கனரக வாகனங்கள் என்றில்லை, எந்த ரக ஊர்திகளிலும் பிரேக் செயலிழந்தால், உடனே எஞ்சினை அணைத்துவிட வேண்டும். இதுதான் முதலாய கடமை.

இதுபோன்று வாகனங்களை பராமரிக்கும் முறையை உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர்கள் தெரிந்து வைத்திருக்கமால் இருக்கும் போது இதுபோன்ற உயிரழப்புகள் நடக்கின்றன.


Click it and Unblock the Notifications








