Just In
- 18 min ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 1 hr ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- 2 hrs ago எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- 3 hrs ago உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
Don't Miss!
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Sports அஸ்வின் நீங்க செஞ்சது பெரிய தப்பு.. உங்க தவறை மறைக்க ஜெய்ஸ்வாலை திட்டுவதா? என்ன நடந்தது?
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
டயருக்கு இப்படி ஒரு சேலஞ்ஜா! 30 நாட்களுக்குள் நிரூபிச்சா பணம் மொத்தமும் வாபஸ்... அப்பல்லோ அதிரடி!
டயர் உற்பத்தி நிறுவனமான அப்பல்லோ அதன் புதிய டயருக்கு இதுவரை எந்தவொரு டயர் நிறுவனமும் அறிவிக்காத ஓர் சவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
வாகனங்களுக்கான டயர் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அப்பல்லோ நிறுவனம், அதன் தயாரிப்புகளின் பக்கம் மக்களைக் கவரும் விதமாக ஓர் தரமான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தனது தயாரிப்பின் மீது நம்பகத் தன்மையை ஏற்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பானது அதன் ஆல்ஃபா மாடல் டயர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆம், இந்த டயரையே மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் விதமாக 'ஆல்பா சவாலை சோதிக்கவும்' என்ற சிறப்பு திட்டத்தை அந்நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த சிறப்பு திட்டத்தின்கீழ், அப்பல்லோவின் ஆல்ஃபா டயரை வாங்கும் ஓர் நபர், அந்த டயரில் குறையிருப்பதைக் கண்டாலோ அல்லது அந்த டயரின் செயல்பாட்டில் திருப்தி இல்லையென்றாலோ செலுத்திய பணத்தை மொத்தமாக திருப்பிப் பெற்றுக் கொள்ளலாம் என கூறியிருக்கின்றது.
ஆல்ஃபா டயரை வாங்கிய 30 நாட்களுக்குள்ளாகவே இதை நிரூபிக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே அப்பல்லோவின் இந்த சலுகையைப் பெற முடியும் என்ற நிபந்தனையை அந்நிறுவனம் முன் வைத்திருக்கின்றது.
இந்த சிறப்பு திட்டம்குறித்து அப்பல்லோ டயர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், ஆசியா பசிபிக், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் ஆகிய நாடுகளுக்கான தலைவர் சதீஷ் ஷர்மா கூறியதாவது, "அப்பல்லோ ஆல்ஃபாவை நாங்கள் வெற்றிகரமான தயாரிப்பாக இருக்கும் என நம்புகின்றோம். பல சோதனையின் அடிப்படையில் இதை ஏற்றுக்கொண்டோம். இதற்கான ஆய்வை இந்தியா மட்டுமில்லாத ஐரோப்பா போன்ற நாடுகளிலும் மேற்கொண்டோம்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பல்வேறு பரிசோதனைகளின் அடிப்படையிலேயே அந்த டயர் மீதிருக்கும் அபரீதமான நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக 'ஆல்ஃபா சவாலை சோதிக்கவும்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றோம்" என தெரிவித்தார்.
வாடிக்கையாளர் யார் வேண்டுமானால் இந்த போட்டியில் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்போர் அப்பல்லோ ஆல்ஃபாவை விரும்பவில்லை என்றாலோ, அதன் பயன்பாட்டில் சிக்கல் இருந்தாலோ 30 நாட்களுக்குள் அவருடைய பணம் திரும்பி வழங்கப்பட இருக்கின்றது.
இதுமட்டுமின்றி, டயருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டியையும் அப்பல்லோ வழங்க இருக்கின்றது. புதிய டயரின் உற்பத்திக்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. இதனால், பிற டயர்களைக் காட்டிலும் அது அதிக கிரிப் மற்றும் பாதுகாப்பை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.
குறிப்பாக, வழு வழுப்பான சாலைகளில் அதிக பிடிமானத்தை அப்பல்லோ ஆல்ஃபா வழங்கும் என கூறப்படுகின்றது. இதற்கேற்ப டிசைன் மற்றும் சிறப்பம்சங்களுடனே ஆல்ஃபா உருவாக்கப்பட்டிருக்கின்றது. இது மட்டுமின்றி பல்வேறு சிறப்பு வசதிகளும் இந்த டயரில் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா எதிரொலியால் பல்வேறு சிக்கலில் சிக்கி தவித்து வரும் நிறுவனங்களில் அப்பல்லோ நிறுவனமும் ஒன்று. இந்த நிலையிலும் மக்களைக் கவரும் விதமாக புதிய திட்டத்தை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த திட்டத்தின்மூலமும், புதிய ஆல்ஃபாவில் இடம்பெற்றிருக்கும் வசதியும் அந்நிறுவனத்தை பழைய மீட்டுச் செல்லும் மிக உறுதியாக நம்பிக்கைத் தெரிவித்திருக்கின்றது.
-
யமஹா ஆர்.எக்ஸ் பைக்கை வைத்திருப்பவங்க கவனத்துக்கு!! என்ஜின் பவரை அதிகமாக்க சூப்பரான ஐடியா!
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி