Just In
- 15 min ago ஓலா ஷோரூம் இல்லாத ஊரே இல்ல போல!! இன்னும் சில வருஷத்தில் தெருவுக்கு ஒண்ணும் வந்துவிடும்!
- 56 min ago அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- 1 hr ago ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- 5 hrs ago 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
Don't Miss!
- Finance வாரம் 2 நாள் லீவு கதையெல்லாம் மலையேறிவிட்டது.. இனி 6 நாள் வேலை.. சாம்சங் அறிவிப்பால் ஷாக்..!!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
கவன சிதைவால் ஏற்படும் விபத்துகளை தடுக்க ஆப்பிள் சொல்லும் தீர்வு
சாலைகளில் கவனத்துடன் கார் ஓட்ட வேண்டி உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பத்திற்கு பிரபல ஆப்பிள் நிறுவனம் காப்புரிமையை பெற்றுள்ளது.
கைப்பேசி சாதனம் நமது தொலைத்தொடர்பு தேவைகளை எளிதாக பூர்த்தி செய்கிறது தான், ஆனால் சில சமயங்களில் அலைப்பேசிகள் நமது கவனத்தையும் சிதறடிக்கிறது.
முக்கியமாக கார் ஓட்டும்போது கையடக்கத்தில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோன்களால் ஏற்படும் தொந்தரவு அதிகம். சாலையில் இருக்கவேண்டிய கவனம் சிதறி, அது ஆபத்தை உருவாக்கும் வகையில் நம்மை இட்டுசென்று விடுகிறது.
தொழில்நுட்பம் சார்ந்து நடக்கும் நிகழ்ச்சிகளில் ரோட்ஷோ என்ற நிகழ்வு பிரபலமானது, இதில் பங்கேற்ற ஆண்ட்ரூ கிராக் என்பவர் கார் பயணத்தில் இருக்கும்போது ஓட்டுநரின் அனைத்து டிஜிட்டல் கருவிகளும் அணைத்து விடக்கூடிய தொழில்நுட்பத்தை நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தினார்.
ஆண்ட்ரூ கிராக்கின் இந்த கண்டுபிடிப்பை பார்த்து வியந்த ஆப்பிள் நிறுவனம், இந்த தொழில்நுட்பத்தை அவரிடமிருந்து வாங்கி தற்போது காப்புரிமை பெற்றுள்ளது.
ஆண்ட்ரூ கிராக் இந்த தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த போது, அவை ஸ்மார்ட் வாட்ச்களில் இயங்குவது போல வடிவமைத்திருந்தார். பிறகே அது தொலைப்பேசி பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
கார் ஓட்டும் போது ஓட்டுநர் ஸ்டீயரிங்கை அசைப்பது போன்ற உணர்வை ஃபோன் உணர்ந்தால், அது தானாகவே அணைந்து விடும். அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் ஃபோனில் இடம்பெற்றிருக்கும்.
இதற்கான மென்பொருளை பெற்றிருக்கும் ஃபோன், கார்களில் மட்டுமல்லாது பேருந்து, இரயில், விமானம் என எல்லாவற்றிலும் செயல்படும். சமூகவலைதள பதிவுகள், மின்னஞ்சல், ஃபோன் அழைப்புகள் என எந்த தொடர்பையும் நாம் பயணத்தின் போது ஏற்படுத்திக்கொள்ள முடியாது.
தற்போது ஆப்பிள் சொந்தமாகிக்கொண்டுள்ள இந்த தொழில்நுட்பத்தை, எப்போது அது வெளியிடவுள்ளது என தெரியவில்லை. இனி ஆப்பிள் தயாரிக்கவுள்ள பொருட்களில் இந்த தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்குமா, இல்லை ஆப்பிளிற்கான அப்டேஷன் மென்பொருள் வெளியிடப்படும் போது, இந்த தொழில்நுட்பமும் சேர்ந்து வருமா என்பது குறித்த தகவல்களும் இல்லை.
அமெரிக்காவில், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் படி, சாலைகளில் கவனச் சிதைவால் நடைபெறும் விபத்துக்களால் ஆண்டிற்கு 3179 பேர் மரணமடைகின்றனர். 4,31,000 பேர் படுகாயமடைகின்றனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் எதிர்கால தயாரிப்புகளில் இந்த தொழில்நுட்பம் இடம்பெற்றிருக்குமானால், அமெரிக்க மட்டும்மல்லாமல், உலகளவில் கவனமின்றி நடைபெறும் சாலை விபத்துகள் தடுத்து நிறுதப்படும்.
-
100 சதவீதம் வாக்குப்பதிவு கேட்கும் அரசு இதையெல்லாம் கவனிக்க மாட்டாங்களா? விமானங்களின் டிக்கெட் விலை உயர்வு!
-
நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
-
ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?