Just In
- 2 hrs ago உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- 4 hrs ago சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- 6 hrs ago எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- 9 hrs ago சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
Don't Miss!
- News கோவையில் திமுக, அதிமுக ரூ.1000 கோடி செலவு செய்துள்ளனர்.. ஓட்டு போட்ட பின் அண்ணாமலை பகீர் புகார்!
- Movies மாமியார் உதட்டில் முத்தம்.. ரோபோ சங்கர் மருமகன் விளக்கம்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க?
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வைரலாகும் மாட்டு சாணி கோட்டிங்: மஹிந்திரா காரை சாணியால் பூசி மெழுகிய கேன்சர் மருத்துவர்...!
அஹமதாபாத்தைத் தொடர்ந்து, புனே நகரத்தில் உள்ள ஒருவரும் தனது காருக்கு மாட்டு சாணத்தால் கோட்டிங் கொடுத்துள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.
தமிழகத்தில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த மே மாதம் 4ம் தேதி முதல் தொடங்கியது. இது கடந்த 29ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், தமிழகத்தின் பல்வேறு பகுதியில் அனல் காற்று வீசிக் கொண்டுதான் இருக்கின்றன. ஜன்னலைத் திறந்து காற்று வாங்கும் காலம் மாறி, தற்போது அனல் காற்று வீசுது ஜன்னலை அடையுங்கள் என்று கூறும் அளவிற்கு கடுமையான அனல் காற்று வீசி வருகின்றது.
இதற்கு, மழை பொய்த்துபோனதும், வளர்ச்சி என்ற பெயரில் மரங்களையும், காடுகளையும் நாம் அழித்துக் கொண்டு வருவதும்தான் முக்கிய காரணமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில், அண்மையில் தோன்றிய ஃபானி புயலும் தமிழகத்தை தாக்காமல், தாக்கிவிட்டுச் சென்றுள்ளது.
ஃபானி புயல் தாக்கியது என்னமோ, ஒடிசா மாநிலத்தைத் தான், ஆனால், அதன் தாக்கம் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் கடுமையான பின் விளைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடுமையான வெயிலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புயல் தமிழகத்தை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திசை மாறி, ஒடிசாவின் புரி பகுதி அருகே கரையைக் கடந்தது.
அப்போது, இந்த ஃபானி புயல் அதன் சுற்றுப்பகுதியில் இருந்த அனைத்து ஈரக் காற்றையும் தன்னோடு வாரி எடுத்துக்கொண்டு, மற்ற பகுதியில் அதிக வெப்பச் சூழ்நிலைக்கு தள்ளிவிட்டது. சாதரணமாகவே, தமிழகத்தில் வெயில் உக்கரமாக வீசிக் கொண்டிக்கும். இந்த நிலையில், ஃபானி புயலின் இந்த தீவிரத்தால் கடுமையான வறட்சிக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் தள்ளப்பட்டன.
இதுபோன்ற சில காரணங்கள் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெயில், நமது கிரிக்கெட் வீரர் சச்சினைப் போல் தினமும் சதமடித்து வருகின்றது. இதில், பெரும்பாலும் வாகன ஓட்டிகளே அதிகமாக சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஷேஜல் ஷா என்ற பெண்மணி, வெயில் கொடுமையில் இருந்து தன்னையும், தன் காரையும் காக்கும் வகையில், மாட்டுச் சாணத்தால் கோட்டிங் செய்திருந்தார். அவ்வாறு, சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்டிருந்த காரின் புகைப்படங்கள், சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ள அனைத்திலும் வைரலாக பரவ ஆரம்பித்தன.
காருக்கு இவ்வாறு மாட்டு சாணத்தால் கோட்டிங் கொடுத்ததால், காரின் உட்பக்க தட்பவெப்ப நிலை சீராக இருப்பதாக அவர் தெரிவத்திருந்தார். மேலும், இவ்வாறு கோட்டிங் செய்யப்பட்ட காரில் உச்சி வெயிலில் செல்லும்போதுகூட வெயிலின் தாக்கம் பெரிதாக காரின் உள்பகுதியில் தெரியவில்லை என அவர் ஏஎன்ஐ-க்கு தெரிவித்திருந்தார்.
அவ்வாறு, காரின் வெளிப்பகுதி 45 டிகிரி செல்சியஸ் இருந்தபோதும், காருக்குள்ளே ஏசியை ஆன் செய்யாமலே, 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக காணப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். ஷேஜலின் இந்த முயற்சியானது, சற்று முனுமுனைப்பை ஏற்படுத்தினாலும், இயற்கைக்கு எந்தவொரு தீங்கும் விளைவிக்காத இந்த நடவடிக்கை பலரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்தவகையில், தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் தனது மஹிந்திரா எஸ்யூவி காருக்கு மாட்டு சாண கோட்டிங்கைக் கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் தகவலை கார்டாக் என்ற ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.
புனே பகுதியில் வசித்து வரும் நவ்நத் தூதல் என்பவர்தான், தற்போது இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இவர் ஓர் தனியார் மருத்துவமனையில் மூத்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர், தனது புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரை வெயிலில் இருந்து காப்பதற்காக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஷேஜலைப் போன்று, மாட்டு சாண கோட்டிங்கைக் கொடுத்துள்ளார்.
அந்தவகையில், டாக்டர் நவ்நத் துதால், தனது காரின் கண்ணாடிப் பகுதிகளைத் தவிர, மற்ற அனைத்து பக்கங்களுக்கும் சாணத்தால் கோட்டிங் வழங்கியுள்ளார். அவ்வாறு, அவர் காருக்கு மூன்று கோட்டிங் வழங்கியுள்ளார். இதனால், காருக்கு வெளியிலிருக்கும் தட்பவெப்ப நிலையைக் காட்டிலும் 5 முதல் 6 டிகிரி செல்சியஸ் வரை குறைவாக, காரின் கேபினுக்குள் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பேசிய அவர், "மாட்டு சாணியை கோட்டிங்காக காருக்கு வழங்குவதால், பெயிண்டிற்கு எதாவது ஆகிவிடுமோ என அஞ்ச வேண்டும். அது ஒருபோதும் உங்கள் காரின் பெயிண்டை பாதிக்காது. இது காரில் ஏசியை ஆன் செய்யாமலே, குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும். அதோபன்று, சாணத்தைப் பூசுவதனால் காருக்குள்ளே துர்நாற்றமும் வீசவில்லை" என தெரிவித்தார்.
மும்பையில் செயல்பட்டு வரும் டாடா கேன்சர் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டர் நவ்நத் தூதல், மாட்டு சாணம் மற்றும் அதன் சிறுநீர் குறித்த படிப்பை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மாட்டின் கோமியம், கேன்சர் நோயாளிகளிகளுக்கு சிறந்த மருந்தாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இந்தியர்களின் பண்டைய கால வாழ்க்கையில் இருந்தே மாட்டு சாணம் பல்வேறு விதங்களில் பயன்பட்டு வருகின்றது. தற்போது, மாட்டு சாணம் வரட்டியாக சில கோவில்களில் பொங்கள் வைக்க பயன்படுகிறது. ஆனால், முந்தைய காலக்கட்டத்தில் வீட்டு வாசலை பூசி மொழுகவும், மண் சுவர்களில் கோட்டிங் கொடுக்கவும் இது பயன்படுத்தப்பட்டு வந்தது.
இவ்வாறு, மாட்டு சாணத்தை வீடுகளில் பயன்படுத்துவதனால், வீட்டில் இருக்கும் துர்தேவதை, நம்மை விட்டு விலகும் என நம்முடையை மூதாதையர்கள் நம்பிக்கையாக இருந்து வந்தது. காலப்போக்கில், அனைத்து மண் சுவர் வீடுகளும் செங்கற்கள் வீடுகளாக மாறியதை அடுத்து இந்த பழக்க வழக்கங்கள் தற்போது முற்றிலுமாக அழிந்துவிட்டது. ஆனால், இதனை மீண்டும் புதுப்பிக்கும் விதமாக கார்களுக்கு மாட்டுச் சாணத்தால் கோட்டிங் கொடுக்கும் பழக்கம் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளது.
-
நாசாவே அசந்து போகும் முக்கிய கருவியை உருவாக்கிய இஸ்ரோ! இனி உலகமே நம்ம கிட்ட தான் இந்த ஐடியாவை கேட்கும்!
-
வெறும் ரூ150க்கு விமான டிக்கெட் விற்பனையாகுது! இது ஆஃபர் எல்லாம் இல்லை உண்மையான கட்டணமே இவ்வளவு தான்!
-
கொடுக்கல், வாங்கலில் பிரச்னை.. காருக்கு தீ வைத்த கோவகார கும்பல்! கோடி ரூபா மதிப்புள்ள கார் பைசாவுக்கு தேரல!