Just In
- 4 min ago மாருதி, டாடா, ஹூண்டாய் நிறுவனங்களை ஒரு கை பார்க்க வரும் நிஸான் கார்... போட்டி அனல் பறக்க போகுது...
- 52 min ago இந்த காரை எல்லாம் நாம கண்ணால நேர்ல பார்த்தாலே அது நம்ம செஞ்ச புண்ணியம் தான்! காரோட ரேட் அப்படி!
- 1 hr ago 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- 3 hrs ago டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
Don't Miss!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- News சிறையில் கணவர்.. இடைத்தேர்தலில் களமிறங்கும் ஜார்கண்ட் Ex முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தாறுமாறு... உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவம் செய்த பொதுமக்கள்... எதற்காக தெரியுமா?
உதவி ஆர்டிஓ-வின் காரை சுற்றி வளைத்து தரமான சம்பவத்தை பொதுமக்கள் செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு பல லட்சக்கணக்கான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. இதில், ஏராளமானோர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இந்தியாவில் பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வருவதே சாலை விபத்துக்கள் நடைபெற மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் இதற்கு ஒரு உதாரணம். இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன.
புதிய அபராத தொகைகளை போலீசார் தீவிரமாக அமல்படுத்தி வருகின்றனர். அதே சமயம் இதனை முறையாக அமல்படுத்த வேண்டிய காவல் துறையினரும், போக்குவரத்து துறை அதிகாரிகளுமே கூட சில சமயங்களில் விதிமுறைகளை அப்பட்டமாக மீறி வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த சூழலில் சீட் பெல்ட் அணியாத உதவி ஆர்டிஓ ஒருவரின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அமிதாப் ராய் எனும் உதவி ஆர்டிஓ தனது அதிகாரப்பூர்வ மஹிந்திரா பொலிரோ காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்துள்ளார். அப்போது பொதுமக்களை அவரது காரை சுற்றி வளைத்துள்ளனர்.
அத்துடன் ஏன் சீட் பெல்ட் அணியவில்லை? என சரமாரியாக கேள்வி எழுப்பினர். காரில் பயணம் செய்யும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் உதவி ஆர்டிஓ ஒருவரே சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியும், கோபமும் அடைந்தனர். எனவேதான் அவரது காரை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
இதன் காரணமாக அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் உதவி ஆர்டிஓவிற்கு அபராதம் விதித்து ரசீது வழங்கினார். ஆனால் எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது? என்பது தெரியவில்லை. புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி, ஒரு குற்றத்திற்காக சாதாரண வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை காட்டிலும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினருக்கு 2 மடங்கு அதிக அபராதம் விதிக்க முடியும்.
அதாவது ஒரு போக்குவரத்து விதிமுறை மீறலுக்கு 500 ரூபாய் அபராதம் என வைத்து கொள்வோம். சாதாரண வாகன ஓட்டிகள் அந்த விதிமுறையை மீறினால் 500 ரூபாய் மட்டும் அபராதம் செலுத்தினால் போதுமானது. ஆனால் அரசு அதிகாரிகளோ அல்லது காவல் துறையினரோ அந்த விதிமுறையை மீறினால் 1,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே புதிய மோட்டார் வாகன சட்டத்தில் இவ்வாறான ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட அதிகாரிகள் சிலர் தொடர்ந்து விதிமுறையை மீறி கொண்டேதான் உள்ளனர். சீட் பெல்ட் அணியாத உதவி ஆர்டிஓ-வின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்ட வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த சம்பவம் காரணமாக பிலிபிட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அபராத தொகைகள் உயர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெரும்பாலான வாகன ஓட்டிகள் தற்போது போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க தொடங்கி விட்டனர். தற்போது வெளியாகியுள்ள புள்ளி விபரங்கள் இதனை உறுதி செய்கின்றன.
தலைநகர் டெல்லியில் கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமீறல்களின் எண்ணிக்கை 66 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் அரசு அதிகாரிகளும், காவல் துறையினரும் உடனடியாக மாற வேண்டிய தருணம் இது. இல்லாவிட்டால் இது வாகன ஓட்டிகள் மத்தியில் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி விடும்.
-
21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
20கிலோ அரிசி மூட்டையை 4ஏத்திகிட்டு நீங்களும் அமர்ந்து போகலாம்! டெலிவரி சேவைக்கான சூப்பரான இ-சைக்கிள் அறிமுகம்!