காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

சாலை பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு மஹிந்திரா தார் வாகனத்தை சகுதி மிகுந்த சாலையில் தானே இயக்கியது கவனத்தை ஈர்த்துள்ளது. இது தொடர்பான வீடியோவினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு வாகனங்களை இயக்கி பார்ப்பதை மிகவும் விரும்பக்கூடியவர். இதனால் இவர் தாமாக வாகனங்களை இயக்கி மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்றுள்ளதை பார்த்திருக்கிறோம்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

இந்த வகையில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சாங்லாங் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சாலை பணிகளை மஹிந்திரா தாரில் சென்று பார்வையிட்டுள்ளார். இது இந்தியா-மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள மாவட்டமாகும்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

மேலும் இந்த மாவட்டம் மாநிலத்தில் உள்ள எந்தவொரு நெடுஞ்சாலை உடனும் இணைப்பில் இல்லை. இதனால் சாங்லாங்கில் விஜயநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சாலை பணிகளை பார்வையிட காட்டுப்பாதையில் முதல்வர் பயணம் செய்துள்ளார்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

இதற்கு ஹெலிகாப்டர் மூலமாக கூட அவர் சென்றிருக்கலாம். ஆனால் ஆட்டோமொபைல் வாகனங்களின் மீதான அவரது ஆர்வமோ என்னமோ தெரியவில்லை, சாலை வழியாக சென்றுள்ளார்.

ஷாண்டோனில் நக் என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான வீடியோவில் பார்க்கும்போது, இதனை சாலை என்று கூட சொல்ல முடியாது. அவ்வளவு கரடுமுரடான, சகுதி மற்றும் சேறு மிகுந்த காட்டு வழி சாலையாக காட்சியளிக்கிறது.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

இதனால் தான் பெமோ காண்டு மஹிந்திரா தார் வாகனத்தை இயக்கி செல்ல தேர்வு செய்துள்ளார். மேலும் இத்தகைய ஆஃப்-ரோடு சாலையில் பயணம் மேற்கொண்டு பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட முதல் அருணாச்சல பிரதேச முதல்வர் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

இந்த பயணத்தின்போது பல இடங்களில் எந்தவொரு வாகனத்தையும் இயக்கி செல்ல முடியாத அளவிற்கு இருந்த பாதைகளை வாகனத்தில் இருந்து வெளியே வந்து ஆட்களுடன் இணைந்து தற்காலிகமாக சீரமைத்தும் உள்ள பெமோ காண்டு இதுகுறித்து டுவிட்டரில், "வாகனத்திலும், கால்நடையிலும் மியாவோவிலிருந்து விஜயநகரத்திற்கு மறக்க முடியாத பயணம்" என பதிவிட்டுள்ளார்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

மாநில அமைச்சர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகளுடன் அருணாச்சல பிரதேச முதல்வரின் இந்த அசாதாரண பயணம் சுமார் 157கிமீ தூரம் கொண்டதாக இருந்துள்ளது. இந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் சாலையினை பார்வையிடவே தான் இந்த காட்டு சாலை மார்க்கத்தை தேர்வு செய்துள்ளதாக பெமோ காண்டு தெரிவித்துள்ளார்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

மேலும் நடைபெற்றுவரும் சாலை பணிகள் அடுத்த 2022ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நிறைவு பெற்றுவிடும் எனவும், சாலை வசதி வந்துவிட்டால், இந்த பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகளவில் உருவாக வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

காட்டு வழி பாதையில் முதல்வரின் மிகவும் சவாலான பயணம்!! எதற்காகனு தெரிஞ்சா இன்னும் ஆச்சிரியப்படுவீங்க!

இந்த சாகச பயணத்திற்கு பெமோ காண்டு ஆஃப்-ரோடு பயணங்களுக்கு பிரபலமான மஹிந்திரா தாரை பயன்படுத்தி இருப்பது மிகவும் சரியான தேர்வே. கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தலைமுறை மஹிந்திரா தார் வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.14.15 லட்சம் வரையில் உள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Arunachal CM Pema Khandu Drives Mahindra Thar Off Road. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X