ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த இளைஞர்களை கண்மூடி தனமாக எட்டி உதைத்த காவலர்! உறைய வைக்கும் வீடியோ!
அசாம் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர்களை போலீஸார் ஒருவர் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு விதிகள் நாடு முழுவதும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இரண்டாம் அலை வைரஸ் பரவலின் தீவிரத் தன்மை இப்போதுதான் லேசாக ஓய்ந்திருக்கின்றது. இதற்குள்ளாக மூன்றாம் அலை பரவல்குறித்த எச்சரிக்கையை ஒன்றிய, மாநில அரசுகள் வெளியிட ஆரம்பித்துவிட்டன.

தொடர்ந்து, காவல்துறையினர் அதிக கவனத்துடன் செயல்பட ஆரம்பித்திருக்கின்றனர். குறிப்பாக, மக்களை மாஸ்க் அணி செய்வது, பொதுவெளியில் சமூக இடைவெளி கடைபிடிக்க செய்வது உள்ளிட்டவற்றை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்னும் பல அதிரடி நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த மாதிரியான சூழ்நிலையில் காவலர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த இளைஞர்களை காலால் எட்டி உதைத்த கொடூர சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

அசாம் மாநிலத்தின் கவுகாத்தி பகுதியிலேயே இந்த அதிர்ச்சியான சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இளைஞர்களை நிறுத்த வேண்டும் என்பதற்காக காவலர் இவ்வாறு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், காவலரின் கண்மூடித்தனமான இச்செயலால் இளைஞர்கள் இருவரும் மிக மோசமான நிலையில் சாலையில் சென்று விழுந்தனர்.

இதனால், அவர்கள் இருவருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. மேலும், அவர்கள் ஓட்டி வந்த ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டரும் கடுமையான சேதங்களைச் சந்தித்திருக்கின்றது. போலீஸாரின் இந்த ஆக்ரோஷமான செயல் பார்ப்போரை பதைபதைக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது.

தடுப்பு அமைத்து காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், ஸ்கூட்டரில் வந்த இளைஞர்கள் நிற்காமல் செல்ல முயற்சித்தனர். அப்போது அவர்களை தடுக்கும் நோக்கிலேயே காவலர் ஒருவர் கால்களால் எட்டி உதைத்து தள்ளினார். இளைஞர்கள்மீது தவறுகள் இருப்பினும் போலீஸாரின் செயல் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அமைந்துள்ளது.

இச்சம்பவம்குறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது. பலர் காவலரின் இந்த கொடிய செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னால் அமர்ந்திருந்த இளைஞர் தலைக் கவசம் அணிந்திருந்ததால் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. லேசான சிராய்ப்புகள் மட்டுமே ஏற்பட்டிருக்கின்றன.

பின்னால் அமர்ந்திருந்த இளைஞருக்கும் லேசான காயங்களே ஏற்பட்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அசாம் மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருவர் அமர்ந்து வந்த காரணத்தினால் அவர்களை போலீஸார் தடுக்க முயற்சிக்கலாம் என கூறப்படுகின்றது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இவ்விதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த விதியை அவ்வப்போது மீறிய வண்ணம் இருக்கின்றனர். இதுபோன்று விதிமீறல் வாதிகளுக்கு உச்சபட்ச அபராதம் போன்றவற்றை போலீஸார் வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது.

படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது
இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே மிகவும் அறுவறுக்கத்தக்க செயலை செயலை கவுகாத்தி போலீஸார் ஒருவர் செய்திருக்கின்றார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றங்களும், உயர் அதிகாரிகளும் அறிவுறுத்து வந்தும் பிற காவல்துறையினருக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் ஒரு சில போலீஸார் அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








