Just In
- 1 hr ago இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- 1 hr ago 7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா! விலை அதை விட ஆச்சரியம்! எவ்ளோனு தெரிஞ்சா அடுத்த நிமிஷமே வாங்கீருவீங்க
- 2 hrs ago இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- 2 hrs ago உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வங்கிகளில் 270 கோடி மோசடி.. இந்தியாவை விட்டு தப்ப முயன்ற ஆடி, போர்ஷே டீலர்கள் சினிமா பாணியில் கைது
வங்கிகள் கூட்டமைப்பிடம் 270 கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த, ஆடி மற்றும் போர்ஷே கார் நிறுவன டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வங்கிகள் கூட்டமைப்பிடம் 270 கோடி ரூபாய் கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த, ஆடி மற்றும் போர்ஷே கார் நிறுவன டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவை விட்டு தப்பி லண்டன் செல்ல முயன்ற அவர்களை, போலீசார் சினிமா பாணியில் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹரியானா மாநிலம் குர்கான் நகரில், ஆடி (Audi) மற்றும் போர்ஷே (Porsche) ஆகிய லக்ஸரி கார் நிறுவனங்களின் டீலர்ஷிப்களை நடத்தி வருபவர்கள் ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட். இவர்கள் இருவரும் சேர்ந்து, வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து, 270 கோடி ரூபாய் கடன் வாங்கினர்.
இதன்மூலம் ஆடி மற்றும் போர்ஷே நிறுவனங்களிடம் இருந்து கார்கள் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ்களை வாங்கி, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தனர். ஆனால் வங்கிகள் கூட்டமைப்பிடம் இருந்து பெற்ற 270 கோடி ரூபாய் கடனை மட்டும் திருப்பி செலுத்தவே இல்லை.
எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி, ஜம்மு மற்றும் காஷ்மீர் வங்கி ஆகிய வங்கிகள் அடங்கிய கூட்டமைப்பிடம் இருந்துதான், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் 270 கோடி ரூபாய் கடன் பெற்றனர். இதில், எச்டிஎப்சி வங்கி மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் கடனை வழங்கியுள்ளது.
ஆனால் கடனை திருப்பி செலுத்தாததால், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவர் மீதும் எச்டிஎப்சி வங்கி புகார் அளித்தது. இதன்பேரில் டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால், ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் இந்தியாவை விட்டு தப்பி லண்டன் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். ஆனால் அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறுவதற்காக முன்பாகவே, டெல்லி பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு விட்டனர்.
ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகியோர், ஜெனிகா கார்ஸ் இந்தியா (Zenica Cars India) மற்றும் ஜெனிகா பெர்ஃபார்மென்ஸ் கார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Zenica Performance Cars Private Ltd) என்ற நிறுவனங்களின் இயக்குனர்களாக உள்ளனர்.
இந்த ஜெனிகா குழுமம்தான், ஹரியானா மாநிலம் குர்கானில், ஆடி மற்றும் போர்ஷே லக்ஸரி கார் டீலர்ஷிப்களை நடத்தி வருகிறது. ஆடி டீலர்ஷிப் மூலமாக ஒரு மாதத்திற்கு 140 கார்களையும், போர்ஷே டீலர்ஷிப் மூலமாக ஒரு மாதத்திற்கு 20 கார்களையும், ஜெனிகா குழுமம் விற்பனை செய்து வருகிறது.
இந்த 2 டீலர்ஷிப்களில் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் மூலமாக, ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை, ஜெனிகா குழுமம் டர்ன்ஓவர் செய்து வருகிறது. ஜெனிகா குழுமம் ஒரு ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை டர்ன்ஓவர் செய்வதை ஆட்டோமொபைல் தொழில்துறை வட்டாரங்கள் உறுதிபடுத்தியுள்ளன.
ஆனால், ''கடந்த 4 ஆண்டுகளாக, நாங்கள் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். எனவே வாங்கிய கடனை எங்களால் திருப்பி செலுத்த முடியாது'' என ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் எச்டிஎப்சி வங்கிக்கு இ-மெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக எச்டிஎப்சி வங்கி அளித்த புகாரின்பேரில்தான், ரஷ்பால் சிங் டோட், மந்திர் சிங் டோட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் தற்போது கைதாகியுள்ளதால், குர்கானில் செயல்பட்டு வந்த ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களின் நிலை என்னவாகும்? என்பது தெரியவில்லை.
Recommended Video
இதுதொடர்பாக ஆடி மற்றும் போர்ஷே நிறுவனங்கள் இதுவரை எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஆனால் குர்கான் ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களிடம் இருந்து கார் டெலிவரிக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஆடி, போர்ஷே நிறுவனங்களை தொடர்பு கொள்வது சிறந்தது.
கைது செய்யப்பட்டுள்ள ரஷ்பால் சிங் டோட் மற்றும் மந்திர் சிங் டோட் ஆகியோர் மீது 420 (மோசடி) உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர குர்கான் ஆடி மற்றும் போர்ஷே டீலர்ஷிப்களுக்கு சென்று, ஆவணங்களை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
-
2019ல் வேணும்னே கடலில் மூழ்கடிக்கப்பட்ட விமானம்.. இப்ப அதோட நிலைமை என்ன? ஏன் அதை கடலில் தள்ளி விட்டாங்க?
-
கார் கப்பல் மாதிரி இருக்காம்! இவ்ளோ மைலேஜ் வேற தருதா! மொத்த கூட்டமும் மாருதி சுஸுகி ஷோரூம்லதான் இருக்கு!
-
ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு டிமாண்ட் அதிகமாகிட்டே போகுது!! இந்தியாவின் தேசிய பைக் என சொல்லலாம்!