Just In
- 3 hrs ago அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- 4 hrs ago இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- 6 hrs ago இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- 12 hrs ago பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Movies மொத்தத்துக்கும் வேட்டு வைத்த டாப் நடிகர்.. தலைகாட்ட முடியாமல் தவிக்கும் டைரக்டர்.. ரொம்ப பாவம்!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாணியைக் கையாண்ட ஆட்டோ டிரைவர்... குவியும் பாராட்டு...
சூப்பர் ஸ்டார் ரஜினி தனது பாடலில் கூறியதைப்போல, கர்நாடகாவில் உள்ள ஆட்டோ டிரைவர் தனது நிஜ வாழ்க்கையில் செய்துள்ளார். இதற்காக தற்போது அவர் பாராட்டு மழையில் மூழ்கியுள்ளார்.
ஒரு பெண் தன் வாழ்நாளின் பிறவி பலனாக கருதுவது கருவுற்றல். இதற்காக பல இன்னல்களைச் சந்தித்து தான் அவள் அந்த பாக்கியத்தைப் பெறுகிறாள். அதேப்போல பிரசவம் என்பது ஒவ்வொரு பெண்ணின் மறு ஜென்மம் என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால், பிரசவத்தின்போது அவள் இறப்பின் நுழைவாயில் வரைச் சென்று மறுபிறவியைப் பெறுகிறாள். உண்மையைக் கூற வேண்டுமானால், பிரசவ வலியை எந்தவொரு ஆணாலும் தாங்கவே முடியாது. இதுமறுக்க முடியாத உண்மை. ஏனென்றால், பிரசவ வலியானது, உடலில் உள்ள அனைத்து எலும்புகளையும் உடைப்பதற்கு ஈடான வலியை ஏற்படுத்தும்.
ஆனால், அதைப்பொருத்து தனது இல்லற வாழ்க்கையை இனிதே நடத்து வருகிறாள். இதுபோன்ற உண்ணத படைப்பான பெண், நம் சமூகத்தில் பல இன்னல்களையும், துயரங்களையும் சந்தித்து வருகிறாள். மேலும், சமீபலகாலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
சமீபத்தில், சென்னை பெருங்குடியில் உள்ள குப்பை சேகரிக்கும் பகுதியில், ஒரு பெண்ணின் கை, கால்கள் துண்டிக்கப்பட்டு வீசப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை அந்த பெண்ணின் மற்ற உடல் பாகங்கள் கண்டுபிடிக்கவில்லை.
இதைப்போலவே சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த சிறுமியை, அங்கு பணி புரியும் வேலைக்காரர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதைப்போன்று பெண்களுக்கு எதிரான சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். மேலும், இதுபோன்ற ஆண்கள் உள்ள இந்த சமுதாயத்தில் பெண்களை தங்களது கண்களாகப் பேற்றும் சில நபர்களும் உள்ளனர். இதனை நிரூபிக்கும் விதமாக, பிரசவத்துக்கு இலவசாக ஆட்டோவை இயக்கி வருகிறார் கர்நாடகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜீனா.
பிரசவத்துக்கு இலவசம், முதியவர்களுக்கு இலவசம் என்ற விஷயங்களை திரைப்படங்கள் மற்றும் நாட்டின் ஏதே ஒரு மூலையில் கேட்டிருப்போம். மேலும், கண்டும் இருப்போம். ஆனால், நமது அண்டை மாநிலமான, கர்நாடகத்தில் உள்ள கல்புரகி நகரத்தில் வசித்து வரும் ஆட்டோ டிரைவர் தன் நிஜ வாழ்க்கையில் செய்து வருகிறார். இதற்காக அவர் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.
மல்லிகார்ஜீனா, தனக்குச் சொந்தமான ஐந்து ஆட்டோக்களில், பிரசவத்துக்கு இலவசம் என எழுதியுள்ளார். மேலும், அதில் அவருடைய கைப்பேசி எண்ணை இணைத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவசர உதவி தேவை என்றால் 24*7 மணி நேரமும் தன்னை அழைக்கலாம் என வாசகத்தையும் அவர் எழுதியுள்ளார்.
இந்த உண்ணதமான சேவையை அவர் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக செய்து வருதாகக் கூறப்படுகிறது. இதுவரை அவர் 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு இந்த உதவி செய்துள்ளார்.
இதுகுறித்து ஆட்டோ டிரைவர் மல்லிகார்ஜுன் கூறுகையில், "என்னுடைய தங்கை கர்ப்பமுற்று இருந்தபோது, அவளை பிரசவத்துக்காக மருத்துவமனை அழைத்துச் செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு யாரும் உதவ முன்வரவில்லை. ஆம்புலன்ஸும் குறிப்பிட்ட நேரத்துக்கு வரவில்லை.
இதனால் அவள் மிகுந்த துன்பத்தை அனுபவித்தாள். அப்போது அவள் வலியால் துடித்த கதறிய நிகழ்வு இன்றும் என் கண்கள் முன் நடப்பது போலவே உள்ளது. அப்போது தான் என் தங்கை அனுபவித்த இந்த துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என நினைத்து இந்த சேவையை செய்ய தொடங்கினேன்" என்றார்.
ஆட்டோ டிரைவர் மல்லிகார்ஜீனாவின் இந்த மகத்தான சேவையைப் பார்த்து அப்பகுதியில் உள்ள அவரை வாழ்த்தி வருகின்றனர். உலகில் மனிதநேயம் அழியவில்லை என்பதுக்கு சான்றாக இவர் இருப்பதாக சிலர் தெரிவித்தனர்.