ஜிபிஎஸ் கொண்ட ஆட்டோ, டாக்ஸிகளுக்கே அனுமதி; விரைவில் அமலாகும் புதிய விதி..!!
ஜிபிஎஸ் கொண்ட ஆட்டோ, டாக்ஸிகளுக்கே அனுமதி; விரைவில் அமலாகும் புதிய விதி..!!
வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படும் என மஹாராஷ்ட்ரா அரசு தெரிவித்துள்ளது.

மஹாராஷ்ட்ரா சட்டப்பேரவையில் பயணிகளின் பாதுகாப்பை குறித்து எதிர்கட்சி தலைவர் ராதாகிருஷ்ணா விக்கே பாட்டீல் கேள்வி எழுப்பினார்.

தனியார் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் செல்லும் பயணிகளின் பாதுகாப்பிற்காக அரசின் முயற்சிகளை அறிய விரும்புவதாக பேசினார்.

அவருடைய கேள்விக்கு பதிலளித்து பேசிய மஹாராஷ்ட்ராவின் உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டீல், டாக்சி மற்றும் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் நடைமுறையாக்கப்படும் எனக் கூறினார்.
Recommended Video


ஓலா மற்றும் ஊபர் நிறுவனங்களால் கைப்பேசி செயலிக்கொண்டு கண்காணிக்கப்படும் விதத்தில் மஹாராஷ்ட்ராவில் மற்ற டாக்சி மற்றும் ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் என அவர் கூறினார்.

எதிர்கட்சி தலைவர் ராதாகிருஷ்ணா மட்டுமின்றி காங்கிரஸின் மற்ற முக்கிய நிர்வாகிகளான விஜய் வதேட்டீவர், அமிஷ் தேஷ்முக் போன்ற உறுப்பினர்களும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கருத்து தெரிவித்துவந்தார்கள்.

முதற்கட்டமாக மஹாராஷ்ட்ரா தலைநர் மும்பை உட்பட தானே, கல்யாண், டோம்பிவிலி போன்ற பகுதிகளில் ஓடும் டாக்சி மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களில் சோதனை முயற்சியாக ஜிபிஎஸ் பொருத்தும் பணி நடைமுறையாகலாம் என தெரிகிறது.

குறிப்பாக ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்சிக்களுக்கு மட்டுமே இனி பெர்மிட் வழங்கப்பட வேண்டும் எனவும்,
இதை கட்டாயமாக்க மாற்ற அரசு இதையும் தாண்டி பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அரசுக்கு எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.


Click it and Unblock the Notifications








