செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற தானியங்கி ஹெலிகாப்டர்ரின் முதல் சோதனை ஓட்டம் வெற்றி..!!
பிரபல ஏர்பஸ் நிறுவனம் தயாரித்துள்ள தானியங்கி ஹெலிகாப்டரின் முதல் சோதனை ஒட்டம் வெற்றி அடைந்துள்ளது
வான் வழிக்கான வாகனங்களை தயாரிக்கும் பிரபல ஏர்பஸ் நிறுவனம், தானாக இயங்கக்கூடிய ஹெலிகாப்டரை தயாரித்து அதற்கான சோதனையில் வெற்றி அடைந்துள்ளது.

வரும் காலங்களில் தானியங்கி வாகனங்கள் ஆட்டோமொபைல் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பலரது கணிப்பாக உள்ளது.

வான் ஊர்திகளை தயாரித்து வழங்குவதில் உலகின் பிரபலமான நிறுவனங்கள் ஏர்பஸ் ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிகாப்டர்ஸ் குயிம்பால்.

இந்த இரு நிறுவனங்களின் கூட்டணியில் தயாரான விஎஸ்ஆர் 700 என்ற தானியங்கி ஹெலிகாப்டர் வெற்றிக்கரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

சாதரணமாக ஹெலிகாப்டர்களில் உள்ள அனைத்து வசதியையும் கொண்ட இது 7 மாதங்களில் தயாரிக்கப்பட்டுள்ளதாக் ஏர்பஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

விஎஸ்ஆர் 700 ஹெலிகாப்டரால் மேலே எழும்புதல், தரையிறங்குவது, பறப்பது ஆகியவற்றை விமானி இல்லாமல் தானாகவே செய்து கொள்ள முடியும்.

கூடுதலாக தட்பவெட்ப சூழ்நிலை மற்றும் காற்றின் வேகத்தை தானாகவே ஆராய்ந்து அதற்கேற்றார் போல் இதனால் செயல்படவும் முடியும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.

விஎஸ் ஆர் 700 ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்ட போது, கூடுதலாக அதில் விமானி ஒருவர் இருந்து அதன் செயல்பாட்டை முழுவதும் கண்காணித்துள்ளார்.

விமானி கொண்டும் அல்லது தானாகவே இயங்கும் திறன் கொண்டும் இயங்கும் வகையில் இன்று ஆட்டோமொபைல் துறையை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள விஎஸ்ஆர் 700 ஹெலிகப்டர் 250 கிலோ வரை எடை தாங்கும்.

மேலும், இதனால் வானில் பறக்க தொடங்கி, பயன்பாட்டினை பொறுத்து அதிகப்பட்சமாக பத்து மணி நேரம் வரை இதனால் தொடர்ந்து பறக்க முடியும்.

தற்போது சோதனை வடிவமாக தயாரிக்கப்பட்டு வெற்றிப்பெற்றுள்ள விஎஸ்ஆர் 700 ஹெலிகாப்டரின் முழுமையான வடிவம் அடுத்த ஆண்டு மத்தியில் வெளியிடப்படும் என ஏர்பஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








