Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 2 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 4 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அசத்தல்... இவர் செய்த காரியம் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க...
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இந்த நல்ல மனிதர் செய்த காரியத்தை பார்த்தால், நீங்க அசந்து போயிருவீங்க.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) கோர தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், பிரேசில் போன்ற நாடுகளை கோவிட்-19 ஒரு கை பார்த்துள்ளது. மனித இனத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள கோவிட்-19 வைரஸை சமாளிக்க முடியாமல், வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன.
மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வது மட்டும்தான், கோவிட்-19 வைரஸிடம் இருந்து காத்து கொள்வதற்கு நம்மிடம் தற்போதைக்கு இருக்கும் ஒரே வழி. எனவே உலகின் பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை அமலுக்கு கொண்டு வந்து விட்டன. இந்தியாவில் வரும் மே மாதம் 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால், மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என யூகங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இந்த தகவலை மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. அதேசமயம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படாமல் ஒரு சிலர் வாகனங்களில் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர். இப்படி தேவை இல்லாமல் சுற்றி திரிபவர்களின் வாகனங்களை காவல் துறை அதிரடியாக பறிமுதல் செய்து வருகிறது. நாடு முழுவதும் தற்போது வரை லட்சக்கணக்கான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
எனினும் தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை பெரிதாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக கொரோனாவின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளிலும் காவல் துறையினர் களமிறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக கொரோனா வைரஸ் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்ட ஹெல்மெட்டை போலீசார் அணிந்தது கவனம் பெற்றது.
சென்னை, பெங்களூர் மற்றும் ஐதராபாத் போலீசார் கொரோனா ஹெல்மெட் அணிந்து வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதன்பின்னர் கொரோனா வைரஸின் வடிவத்தில் டிசைன் செய்யப்பட்ட கார் மற்றும் ஆட்டோக்களையும் நம்மால் பார்க்க முடிந்தது. இதில், கொரோனா கார் ஐதராபாத்திலும், கொரோனா ஆட்டோ சென்னையிலும் வலம் வந்தன.
இந்த வரிசையில் பெங்களூரை சேர்ந்த கலைஞர் ஒருவர் தற்போது மற்றொரு வித்தியாசமான முயற்சியை கையில் எடுத்துள்ளார். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, கோவிட்-19 வைரஸின் 3டி படங்களை அவர் சாலையில் வரைந்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தனித்துவமான நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.
பெங்களூர் மாநகர சாலைகளில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ள இந்த 3டி ஓவியங்கள் காண்பவர்களை அசர வைக்கும் வகையில் உள்ளன. பாதல் நஞ்சுண்டசுவாமி (Baadal Nanjundaswamy) என்ற ஓவியர்தான் இந்த 3டி பெயிண்ட்டிங்கை செய்துள்ளார். கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை கலையின் மூலமாக ஏற்படுத்துவதே இந்த ஓவியங்களுக்கு பின்னால் இருக்கும் நோக்கம்.
இந்த ஓவியங்கள் மூலம், வீடுகளிலேயே இருக்கும்படி பொதுமக்களை பாதல் நஞ்சுண்டசுவாமி வலியுறுத்தி உள்ளார். கர்நாடக மாநிலத்திலும் கோவிட்-19 வைரஸால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கோவிட்-19 வைரஸின் தீவிரத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த விழிப்புணர்வு ஓவியங்களை பாதல் நஞ்சுண்டசுவாமி வரைந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மட்டுமின்றி இந்திய அளவில் பிரபலமான ஓவியர்களில் ஒருவராக பாதல் நஞ்சுண்டசுவாமி திகழ்ந்து வருகிறார். தனது ஸ்ட்ரீட் ஆர்ட் மற்றும் 3டி பெயிண்ட்டிங்குகள் மூலம் பாதல் நஞ்சுண்டசுவாமி புகழ் பெற்றுள்ளார். மைசூரில் பிறந்தவரான ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமி, தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார்.
சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளுக்கு தனது ஓவியங்கள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் பாதல் நஞ்சுண்டசுவாமி குரல் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பெங்களூர் நகர சாலையில், விண்வெளி வீரர் ஒருவர் நடப்பது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
பெங்களூர் மாநகரில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில் எடுக்கப்பட்ட இந்த வித்தியாசமான வீடியோ அனைவரையும் சிரிக்க வைத்த அதே நேரத்தில் பிரச்னையின் தீவிரத்தை உணரவும் வைத்தது. அனைவராலும் ரசித்து பார்க்கப்பட்ட இந்த வீடியோ ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமியின் ஐடியாதான்.
ஓவியர் பாதல் நஞ்சுண்டசுவாமியின் குரலுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும், பொதுமக்களுக்கு அவசியம் என்பதாலும், சில பிரச்னைகளுக்கு அரசு அதிகாரிகள் உடனடியாக உரிய நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
ரோபோ சங்கர் மகள் திருமணத்திற்கு சீதனமா இந்த காரை கொடுத்தாரா? இதோட விலை என்ன தெரியுமா?
-
குடிநீரில் கழுவினால் அபராதம்! பெங்களூர் கார் ஓனர்கள் கையில் எடுத்த புதிய ட்ரிக்! இது நமக்கு தெரியாம போச்சே!
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!