Just In
- 44 min ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- 1 hr ago விமானம் தரையிறங்கும் முன் எரிபொருளை விமானிகள் வேண்டுமென்றே திறந்துவிடுவார்கள்.. நாடுவானில் ஏன் இத செய்யுறாங்க?
- 1 hr ago லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- 4 hrs ago போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அதிகரித்து வரும் காற்று மாசு: கர்நாடக முதலமைச்சரின் அதிரடி முடிவு!
கர்நாடகவில் அதிகரித்து வரும் மாசுபாட்டைக் குறைக்கும் விதமாகவும், மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையினால், சுற்றுச்சூழல் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகின்றது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள், அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப நோய் தொற்றையும் பரப்பி வருகின்றது.
வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையை சுவாசிப்பதன் மூலம், நுரையீரலில் தொற்று ஏற்படுகிறது. இதைத்தவிர்த்து, தோல் அரிப்பு, தலைமுடி உதிர்தல் போன்ற பல்வேறு பிரச்னைகளையும், பின்விளைவுகளையும் அது உருவாக்குகின்றது.
இத்தகைய சூழலை தவிர்க்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறுகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு சமீபகாலமாக ஜீரோ எமிஸ்ஸன் வாகனப் பயன்பாட்டை மக்கள் மத்தியில் ஊக்கப்படுத்தும் விதமாக சில நடவடிக்கைகளையும் அது மேற்கொண்டு வருகின்றது.
மக்களிடம் மின்வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரி வாகனங்களுக்கு மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாட்டில் மின் வாகனங்களின் உற்பத்தியை அதிகரிக்க, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநில அரசு பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைத்து, பேட்டரியால் இயங்கும் கார் மற்றும் பைக்குகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக மாநிலத்தில் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன்களை நிறுவ முடிவு செய்துள்ளது.
அதன்படி, பெஸ்காம் நிறுவனம் பெங்களூருவில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கியமான இடங்களில் இ-சார்ஜ் நிலையங்களை அமைக்க உள்ளது. ஒரே நேரத்தில் நான்கு வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றும் வகையில் அமைக்கப்படும் அந்த நிலையங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மக்களுக்கு முன்னோடியாக, மின்வாகனங்களின் பயன்பாட்டை அரசு தொடங்க உள்ளது. அதன்படி, மக்களின் பயன்பாட்டுக்காக இயங்கி வரும் பொது போக்குவரத்துறைக்காக 3 ஆயிரம் பேட்டரி பஸ்கள் வாங்க உள்ளது. கர்நாடகவில் பேட்டரி பஸ்களின் எண்ணிக்கைக் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த மூன்றாண்டுகளில் மக்களுக்காக இயங்கும் வாகன போக்குவரத்தில் அதிகமாக பேட்டரி பஸ்களே இயக்கப்படும் என கூறப்படுகிறது.
மின்வாகன பயன்பாட்டில் முன்னோடியாக கர்நாடக அரசு செயல்படுவது சுற்றுச்சூழலியாளர்கள் இடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், மாநிலத்தில் பெட்ரோல், டீசல் வாகன பயன்பாட்டை குறைக்கும் விதமாக மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மற்ற மாநிலங்களும் கடைபிடிக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
ஒருத்தர், ரெண்டு பேர் இல்ல, ஒரு குடும்பத்தையே ஏற்றி செல்லலாம்!! ரூ.11.40 லட்சத்தில் கிடைக்கும் பொலேரோ கார்...
-
சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
-
மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..