தரமான சம்பவம்... ஒரு பைக்கின் மூலம் இந்தியா முழுக்க பிரபலமான ரியல் ஹீரோ... என்ன செய்தார் தெரியுமா?

இளைஞர் ஒருவர் தனது பைக்கின் மூலம் தரமான சம்பவத்தை செய்து இந்தியா முழுக்க பிரபலமாகியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

இந்தியாவை பொறுத்தவரை சாலைகளில் நடந்து செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சாலையில் நடந்து செல்பவர்களிடம் இருந்து, நகை, செல்போன், பணப்பை உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை பறித்து செல்லும் சம்பவங்கள் இங்கு மிக அதிகமாக நடந்து வருகின்றன. இதற்கு கொள்ளையர்கள் பெரும்பாலும் டூவீலர்களைதான் பயன்படுத்துகின்றனர்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

இந்த வரிசையில் கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில், செல்போன் பறிப்பு சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆனால் சம்பவ இடத்தில் இருந்த துணிச்சல் மிக்க இளைஞர் ஒருவர் தனது கேடிஎம் ட்யூக் 250 பைக்கில் கொள்ளையர்களை விரட்டி சென்று, பாதிக்கப்பட்ட நபருக்கு உதவி செய்துள்ளார். இதற்காக அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

பெங்களூர் நகரில் உள்ள ஹைனெஸ் சாலைக்கு அருகே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. கேடிம் ட்யூக் 250 ரைடரான ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் என்பவர்தான் பாதிக்கப்பட்ட நபருக்கு உதவியுள்ளார். சரியாக இரவு 9.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் கூறியுள்ளார். சம்பவத்தன்று அந்த இடத்தில் ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் இருந்துள்ளார்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

அப்போது அங்கு திடீரென சத்தம் கேட்டுள்ளது. இதனால் ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் திரும்பி பார்த்துள்ளார். அந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் சுஸுகி அக்ஸெஸ் ஸ்கூட்டர் ஒன்றுக்கு பின்னால் ஓடி கொண்டிருந்தார். இதனால் உடனடியாக பைக்கை ஸ்டார்ட் செய்த ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் ஸ்கூட்டருக்கு பின்னால் ஓடி கொண்டிருந்த இளைஞரிடம் சென்றார்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

அப்போது ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர் அந்த இளைஞரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு தப்பி சென்றது ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூசுக்கு தெரியவந்தது. இதன்பின் பாதிக்கப்பட்ட இளைஞரை ஏற்றிக்கொண்டு ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் அந்த ஸ்கூட்டரை விரட்டி சென்றார். நீண்ட தூரம் துரத்திய பிறகு, ட்ரீம் வேர்ல்டுக்கு அருகே உள்ள கனரா வங்கி அருகே கொள்ளையர்களை ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் மடக்கினார்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

இதனை கண்ட பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். அவர்கள் கொள்ளையர்களை சரமாரியதாக தாக்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் திருடப்பட்ட இளைஞரின் செல்போனையும் கொள்ளையர்களிடம் இருந்து மக்கள் வாங்கி விட்டனர். இதன்பின்னர் பொதுமக்கள் கூடி விட்டதால், சாலையின் நடுவே இருந்த தனது பைக்கை சாலையோரமாக பார்க்கிங் செய்ய ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் சென்றார்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

அந்த சமயத்தில் கொள்ளையர்கள் இருவரும் ஸ்கூட்டரை அங்கேயே விட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். எனவே அருகே இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு ஸ்கூட்டர் கொண்டு செல்லப்பட்டது. பின் இந்த சம்பவம் தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் அந்த ஸ்கூட்டரின் பதிவெண் போலியானது என்பதை போலீசார் கண்டறிந்தனர்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

அத்துடன் அது ஒரு பைக்குக்கு சொந்தமான பதிவு எண் என்பதும் தெரியவந்தது. மேலும் அந்த ஸ்கூட்டரின் சாவியும் பஜாஜ் பைக்கினுடையது என்பதும் கண்டறியப்பட்டது. இதன்பின் கொள்ளையர்களிடம் இருந்து மீட்கப்பட்ட செல்போன் அதன் உரிமையாளரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தப்பி சென்ற கொள்ளையர்களை போலீசார் பிடித்து விட்டார்களா? என்பது தெரியவில்லை.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

டூவீலரில் சென்று நகை, செல்போன் போன்றவற்றை கொள்ளையடிப்பது இதுபோன்ற கொள்ளையர்களுக்கு எளிதான காரியமாக உள்ளது. அத்துடன் இவற்றை அவர்களால் எளிதாக பணமாக மாற்றி விட முடிகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு திருடப்பட்ட டூவீலர்களைதான் கொள்ளையர்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

இதன் மூலம் அவர்களை கண்டறிவதும் கடினமாகி விடுகிறது. எனவே சாலைகளில் செல்லும்போது நாம்தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும். அத்துடன் உங்கள் வாகனங்களையும் பத்திரமாக பார்த்து கொள்வது நல்லது. ஏனெனில் உங்கள் வாகனத்தை திருடி இதுபோன்ற குற்ற செயல்களுக்கு கொள்ளையர்கள் பயன்படுத்த கூடும்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

இதனால் உங்களுக்கு தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படலாம். அதே சமயம் பெங்களூர் நகரில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸின் பணியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். பாதிக்கப்பட்ட நபருக்கு உதவுவதற்காக கொள்ளையர்களை விரட்டி சென்ற அவரது துணிச்சலை பாராட்ட வேண்டும். ஆனால் அவரோ தனது கேடிஎம் ட்யூக் 250 பைக்கிற்கு நன்றி கூறியுள்ளார்.

கொள்ளையர்களை பைக்கில் விரட்டி சென்று பிடித்த துணிச்சல் இளைஞர்... பாராட்டு குவிகிறது...

கேடிஎம் ட்யூக் 250 பைக் சுறுசுறுப்பானது. கையாள்வதற்கு எளிதானது. சக்தி வாய்ந்த இன்ஜினை கொண்டது. இதன் காரணமாகதான் அவரால் ஸ்கூட்டரில் தப்பி சென்ற கொள்ளையர்களை பிடிக்க முடிந்துள்ளது. சாலையில் யாரேனும் பாதிக்கப்பட்டால் நாமும் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரு முன் உதாரணத்தையும் இதன் மூலமாக ஃபெர்ட்ரிக் ஆண்ட்ரூஸ் ஏற்படுத்தியுள்ளார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Bangalore: KTM Duke 250 Rider Chases & Catches Thieves. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X