Just In
- 54 min ago இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- 1 hr ago தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- 1 hr ago மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- 6 hrs ago ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
Don't Miss!
- Sports மச்சக்காரன்யா நீ.. ஒரு போட்டிக்கு 3 கோடி சம்பளம்! ஒரு விக்கெட்டுக்கு 2.4 கோடி.. தீபக் சாஹரின் யோகம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கடுமையான அபராதம் விதிக்க முடிவு... டூவீலர்களில் இனி இது ரெண்டும் இல்லாவிட்டால் அவ்ளோதான்... என்னனு தெரியுமா?
சாலை விபத்துக்களை குறைப்பதற்காக போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, இரு சக்கர வாகனங்களை தீவிர சோதனைக்கு உட்படுத்த பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த சோதனையில், ரியர் வியூ மிரர்கள் மற்றும் இன்டிகேட்டர்கள் இல்லாத இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ''ரியர் வியூ மிரர்களை பயன்படுத்த தவறுவதும், வளைவுகளில் திரும்புவதற்கு முன் இன்டிகேட்டர்களை சரியாக ஆன் செய்ய தவறுவதும் சாலை விபத்துக்களுக்கு முக்கியமான காரணங்களாக உள்ளன. எனவே ரியர் வியூ மிரர்கள் மற்றும் இன்டிகேட்டர்கள் இல்லாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம்'' என்றனர்.
எனவே இனி இரு சக்கர வாகனத்தில் ரியர் வியூ மிரர்கள் இல்லாவிட்டாலோ அல்லது இன்டிகேட்டர்கள் இல்லாவிட்டாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் இரு சக்கர வாகன உரிமையாளர்கள் ரியர் வியூ மிரர்கள் மற்றும் இன்டிகேட்டர்களை பயன்படுத்துவது அதிகரிக்கும் என்றும், சாலை விபத்துக்கள் குறையும் என்றும் காவல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் இரு சக்கர வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருபவர்கள் இந்த உத்தரவால் அச்சமடைந்துள்ளனர். ஏனெனில் தற்போது வாடகைக்கு கிடைக்கும் பெரும்பாலான இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ மிரர்கள் இல்லை என கூறப்படுகிறது. அத்தகைய இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தும்போது காவல் துறையினர் கண்டறிந்தால், பயனருக்கு சிக்கல்தான்.
ஏனெனில் அவர்தான் அபராதம் செலுத்த வேண்டிய சூழல் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ரியர் வியூ மிரர்கள் இல்லாவிட்டால் வாடகைக்கு எடுத்த நபருக்கு பதிலாக, இரு சக்கர வாகனத்தை வாடகைக்கு வழங்கிய நிறுவனங்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
போக்குவரத்து துறை தரவுகளின்படி பெங்களூரில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி 1 கோடிக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் உள்ளன. இதில், 64 லட்சத்திற்கும் மேற்பட்டவை இரு சக்கர வாகனங்கள் ஆகும். எனவே இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும், அவர்களால் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வரும் நாட்களில் காவல் துறையினர் சோதனையை தீவிரப்படுத்தவுள்ளனர்.
பொதுவாக இரு சக்கர வாகனங்களில் ரியர் வியூ மிரர்களை கழற்றி வைத்து விடுவதை வாகன ஓட்டிகள் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். ரியர் வியூ மிரர்கள் இல்லாவிட்டால் சாலை விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் இதனை உணராத பலர், ஸ்டைலுக்காக இரு சக்கர வாகனங்களில் இருந்து ரியர் வியூ மிரர்களை கழற்றி விடுகின்றனர்.
எனவேதான் ரியர் வியூ மிரர்கள் இல்லாத வாகனங்கள் மீது பெங்களூரில் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவுள்ளன. ஆனால் வாகனங்களை பார்க்கிங் செய்திருக்கும்போது ரியர் வியூ மிரர்களை மர்ம நபர்கள் திருடி கொள்வதாக சிலர் புகார் தெரிவித்துள்ளனர். எனவே இதனை தடுக்கவும் காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
-
ஸ்விஃப்ட் காரை வாங்க ஆள் இல்லனு நெனைக்கறவங்க வேடிக்கைய மட்டும் பாருங்க... சபதம் எடுத்த மாருதி சுஸுகி...
-
குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
-
தேர்தல் முடிந்ததும் முதல் வேலையா டோல்கேட்ல இருந்து இதை தூக்கி வீசுங்க!அடுத்த அதிரடிக்கு தயாரான அரசு