Just In
- 12 min ago
டாடா வயிற்றில் புளியை கரைக்கும் புதிய எலெக்ட்ரிக் கார்... அஞ்சு நாளில் இவ்ளோ பேர் புக்கிங் பண்ணீட்டாங்களா!
- 4 hrs ago
ஐஆர்சிடிசில பஸ் டிக்கெட் புக் பண்ணா இவ்வளவு லாபமா? எப்படி பண்ணணும் தெரியுமா?
- 5 hrs ago
டாடாவிற்கு சரியான போட்டி தயார்... இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை போட்டி போட்டு புக் பண்றாங்க!!
- 7 hrs ago
எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!
Don't Miss!
- News
என்னது எடிட்டா? நிரூபித்தால் அரசியலை விட்டே விலக தயார்.. அமைச்சர் எ.வ.வேலுவுக்கு அண்ணாமலை சவால்!
- Finance
LIC மட்டும் அல்ல, PNB-யும் அதானி குழுமத்தில் மிகப்பெரிய அளவில் முதலீடு.. அச்சத்தில் முதலீட்டாளர்கள்!
- Sports
சுப்மன் கில் டி20 போட்டியில் வேண்டாம்..தயவு செய்து U19 கேப்டனுக்கு வாய்ப்பு தாங்க..பாக் வீரர் பேட்டி
- Movies
பேயாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.. கருங்காப்பியம் டிரைலர்.. மிரண்டு போன விஜய்சேதுபதி!
- Lifestyle
February Horoscope 2023: பிப்ரவரி மாசம் இந்த ராசிக்காரங்க ரொம்ப கஷ்டப்பட போறாங்க.. உங்க ராசி இதுல இருக்கா?
- Technology
Oppo: வெயிட்டான கேமரா செட்டப்.. கதகளி ஆடப்போகும் புதிய ஒப்போ போன்.. பிப்.3-ல் அறிமுகம்!
- Travel
ரயில் பயணிகளின் கவனத்திற்கு – சுவையான உணவுகளுடன் திருத்தப்பட்ட IRCTCயின் மெனு!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
செக்மேட்... இனி போலீஸ் இல்லேனு யாரும் ரூல்ஸை மீற முடியாது... அதிநவீன தொழில்நுட்பத்தை களமிறக்க போறாங்க!
இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்டறிந்து, தண்டனை வழங்கும் பணிகளை காவல் துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பணிகளில் நவீன தொழில்நுட்ப வசதிகளும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வரிசையில் கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில், வெகு விரைவில் 250 கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இவை அதிக 'க்ளாரிட்டி'-யில் காட்சிகளை பதிவு செய்யும். மொத்தம் 50 இடங்களில் இந்த கேமராக்களை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அதிநவீன கேமராக்களின் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து, தண்டனை வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோரின் எண்ணிக்கையை குறைப்பதில் இந்த கேமராக்கள் முக்கிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image used for representation purpose only
அத்துடன் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கும் இந்த கேமராக்கள் உதவி செய்யலாம். ஐடிஎம்எஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் இன்டலிஜென்ட் டிரான்ஸ்போர்ட் மேனேஜ்மெண்ட் சிஸ்டத்தின் (ITMS - Intelligent Transport Management System) ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதன் மூலம் போக்குவரத்து விதிமுறை மீறல்களை நிகழ் நேரத்தில் டிராக் செய்ய முடியும். அத்துடன் சாலைகளில் போக்குவரத்து காவலர்கள் பணியில் ஈடுபட வேண்டிய தேவையையும் இது குறைக்கும்.
அதாவது கேமராக்களே கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதால், போக்குவரத்து காவலர்கள் களத்தில் இறங்க வேண்டிய தேவை இருக்காது. சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும்போது, அதனை மீறி சென்றால், இந்த அதிநவீன தொழில்நுட்பம் கண்டறிந்து விடும். அதேபோல் அதிவேகத்தில் சென்றாலும், வாகனங்களை ஓட்டி கொண்டிருக்கும்போது செல்போனில் பேசினாலும், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் சென்றாலும், கண்டுபிடித்து விடக்கூடிய திறனை இந்த அதிநவீன தொழில்நுட்பம் பெற்றுள்ளது.
அத்துடன் சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் லேன் விதிமுறைகளை மீறுபவர்களையும் இந்த தொழில்நுட்பம் கண்டுபிடித்து விடும். இந்த தொழில்நுட்பம், போக்குவரத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கும். யாராவது விதிமுறைகளை மீறுவதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு எஸ்எம்எஸ் மூலம் அபராத ரசீதை அனுப்பி விடும். எனவே போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை திருத்துவது மற்றும் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைப்பது ஆகியவை மட்டுமே இந்த திட்டத்தின் தலையாய நோக்கம் என பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே வாகன ஓட்டிகள் எந்த நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறினாலும், சட்டப்படி தண்டனைக்கு ஆளாக நேரிடும்.
இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெங்களூர், போக்குவரத்து நெரிசல்களுக்கு பெயர் பெற்றது. இதன் காரணமாக பெங்களூர் நகரை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர். அதேபோல் பெங்களூர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இது தொடர்பான குற்றச்சாட்டுக்களை சமூக வலை தளங்களில் அவ்வப்போது காணப்படுகிறது. எனவே அனைத்து வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், இந்த திட்டம் வெகு விரைவில் அமலுக்கு வருகிறது.
எப்படியோ போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களின் எண்ணிக்கை குறைந்தால் மகிழ்ச்சிதான். பெங்களூர் மட்டுமல்லாது, மற்ற பகுதிகளை சேர்ந்தவர்களும் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றினால் நல்லது. போக்குவரத்து காவலர்கள் இல்லையே என அலட்சியமாக இருக்க வேண்டாம். அவர்கள் இல்லாவிட்டாலும், கேமராக்கள் கண்காணித்து கொண்டிருக்கும் என்பதை மறந்து விட கூடாது. தற்போது தொழில்நுட்பம் வெகுவாக வளர்ந்து விட்டது என்பதை வாகன ஓட்டிகள் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.
-
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
-
ஷோரூம்களுக்கு வர தொடங்கிய மாருதியின் விலை குறைவான கார்! திருவிழா மாதிரி பொதுமக்கள் கூட்டம் கூடுதாம்!
-
“தாலாட்டும் காற்றே வா...” நடிகர் அஜித் பயன்படுத்திய ஜீப் மாறி இருக்கே!! ஆனால் உண்மையில் எந்த வாகனம் தெரியுமா?