Just In
- 1 hr ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 2 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 2 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 3 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Movies Gnanavel Raja: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி.. என்ன காரணம்?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
2 மணி நேரத்தில் 30 லட்சம் வசூல்! வாகன ஓட்டிகளை பிடிக்க போலீஸ் செய்த ட்ரிக்! என்னனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க
போக்குவரத்து காவல் துறையினர் வித்தியாசமான ஒரு நடவடிக்கையின் மூலம், வெறும் 2 மணி நேரத்தில், 29.50 லட்ச ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடிப்பதற்காக, பெங்களூர் போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள், கடந்த திங்கள் கிழமை அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளனர். இதற்கு 'ஆபரேஷன் சர்ப்ரைஸ் செக்' என அவர்கள் பெயர் சூட்டியிருந்தனர். இந்த அதிரடி நடவடிக்கை மூலம் வெறும் இரண்டே மணி நேரத்தில் 29.50 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தலைகவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களை ஓட்டுவது, ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார்களில் பயணம் செய்வது, செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது மற்றும் நடைபாதைகளில் வாகனம் ஓட்டுவது போன்ற குற்றங்களைதான் வாகன ஓட்டிகள் அதிகம் செய்வதாக போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் இந்த சிறப்பு வாகன தணிக்கை நடைபெற்றது. பெங்களூர் நகர் முழுவதும் மொத்தம் 178 இடங்களில் காவல் துறை அதிகாரிகள் வாகன தணிக்கை மேற்கொண்டனர். இந்த சோதனையின் முடிவில் மொத்தம் 6,247 வழக்குகளை போக்குவரத்து காவல் துறை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
அத்துடன் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதமாக 29.50 லட்ச ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் சர்ப்ரைஸ் செக்' எப்படி நடத்தப்பட்டது? என்பது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகள் கூறுகையில், இதற்கு முன்பு எப்போதும் வாகன தணிக்கை நடத்தப்படாத இடங்களை நாங்கள் முதலில் கண்டறிந்து கொண்டோம்.
அந்த புதிய இடங்களில் காவல் துறை அதிகாரிகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்பட்டன'' என்றனர். உண்மையில் பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் நன்றாக யோசித்துதான் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். பொதுவாக மாநகர பகுதிகளில் காவல் துறையினர் வழக்கமாக எங்கு வாகன தணிக்கை நடத்துவார்கள்? என்பது வாகன ஓட்டிகளுக்கு நன்றாக தெரியும்.
எனவே அந்த இடங்களின் வழியாக பயணம் செய்வதை வாகன ஓட்டிகள் தவிர்த்து விடுவார்கள். அல்லது அந்த இடங்களை கடக்கும்போது மட்டும் தலை கவசம் அணிந்து பயணிப்பது, செல்போனில் பேசாமல் வாகனம் ஓட்டுவது என நல்ல பிள்ளையாக நடந்து கொள்வார்கள். அந்த பகுதியை கடந்து விட்டால் மீண்டும் விதிமுறைகளை மீற தொடங்கி விடுவார்கள்.
எனவேதான் இதற்கு முன்பு வாகன தணிக்கை நடத்தப்படாத புதிய இடங்களை கண்டறிந்து பெங்களூர் போக்குவரத்து காவல் துறையினர் அதிரடி காட்டியுள்ளனர். 'ஆபரேஷன் சர்ப்ரைஸ் செக்' என பெயரிடப்பட்டது ஏன்? என்பது தற்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என நாங்கள் நம்புகிறோம். வருங்காலங்களிலும் இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படும் என காவல் துறையினர் கூறியுள்ளனர்.
இதன் மூலம் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவது கட்டுக்குள் வரும் எனவும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகிலேயே சாலை விபத்துக்களால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமாராக 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர்.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் அலட்சியம் காட்டுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் அனைவரையும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்ற வைப்பதற்காக இதுபோன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை போக்குவரத்து காவல் துறையினர் எடுத்து வருகின்றனர்.
Note: Images used are for representational purpose only.
-
இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!