இந்தியாவின் முதல் மெக்லேரன் காரை துரத்தி.. துரத்தி... சென்று பார்த்த கார் ஆர்வலர்கள்... அடடே..!!
இந்தியாவின் முதல் மெக்லேரன் காரை துரத்தி.. துரத்தி... சென்று பார்த்த கார் ஆர்வலர்கள்... அடடே..!!
இந்தியாவின் முதன் மெக்லேரன் 720 எஸ் மாடல் கார் பெங்களூரில் விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, முதன்முறையாக அதன் உரிமையாளர் இந்திய சாலைகளில் ஓட்டிப்பார்த்தார்.

மெக்லேரனின் சமீபத்திய வரவான 720 எஸ் காரை பெங்களூரை சேர்ந்த ரஞ்சித் சுந்தரமூர்த்தி என்ற தொழிலதிபர் இந்தியாவில் முதன்முறையாக வாங்கினார்.
Recommended Video


மெம்பிஸ் சிவப்பு நிறத்திலான இந்த கார் இந்தியாவிற்கு வந்த உடன் அது தேசியளவில் ஆட்டோமொபைல் ஆர்வலர்களிடம் டிரென்டிங் செய்தியானது.

எப்போ இந்த கார் வெளியே வரும்? நேரடியாக எப்போது பார்ப்போம் என பல ஆர்வலர்கள் காத்திருக்க, சமீபத்தில்,
ரஞ்சித் சுந்தரமூர்த்தியின் மெக்லேரன் 720 எஸ் கார் பெங்களூர் வாசிகளுக்கு தனது திவ்ய தரிசனத்தை வழங்கியுள்ளது.

இதனை நேரடியாக பார்த்து பரவசமடைந்த பலர், சாலைகளின் நின்றவாறே தங்களது கைப்பேசிகளில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கத்தொடங்கினர்.

ஒரு சிலர் தொடர்ந்து காரை தொடர்ந்து சென்று, வீடியோ எடுக்கவும் தொட்டுப்பார்க்கவும் ஆசைப்பட்டனர்.

இந்தியாவில் கிடைத்த வரவேற்பை பார்த்துவிட்டு இங்கிலாந்தின் மெக்லேரன் நிறுவனமே வாயடைத்து போயுள்ளது.

நமது நாட்டிற்கு முதன்முறையாக வந்துள்ல மெக்லேரன் 720 எஸ் கார் தொடக்க நிலையில் இருந்து 100கி.மீ வேகத்தை வெறும் 2.9 விநாடிகளில் எட்டக்கூடியது.
செயல்திறனுக்கு பெயர்பெற்ற இந்த கார் அதிகப்பட்சமாக 710 பிஎச்பி பவர் மற்றும் 770 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

மெக்லேரன் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் இப்படியொரு வரவேற்பு இருக்கிறதா என்பதே, 720எஸ் மாடல் பெங்களூரில் வலம் வரும்போது தான் தெரிந்துக்கொள்ள முடிந்தது.

இந்திய சாலைகள் மெக்லேரனின் 720 எஸ் மாடலுக்கு கொஞ்சம் கடினமான சவால்களை வழங்கக்கூடியது தான் என்றாலும்,

உரிமையாளர் ரஞ்சித் சுந்தரமூர்த்தி அதை பத்திரமாக சாலைகளில் ஓட்டிப்பார்த்து, நல்லமுறையில் வீடு போய் சேர்ந்திருப்பார் என்று நினைக்கிறோம்.


Click it and Unblock the Notifications








