Just In
- 20 min ago இந்தியாவை தாண்டினால் டாடா கார்களுக்கு மவுசு கிடையாது!! 5-ஸ்டார் ரேட்டிங் கார்களுக்கு இப்படியொரு நிலைமையா!
- 46 min ago எத்தன பேரு வாங்கி குவிக்க போறாங்களோ! இன்னும் 7நாள்ல டெலிவரி தொடங்க போகுது! வேட்டியை வரிஞ்சுக்கட்டிய ஓலா!
- 1 hr ago ரூ6.13 லட்சம் விலை, 19 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரை வாங்க லைன் நின்னாலும் உடனே கிடைக்காது! ஏன் தெரியுமா?
- 2 hrs ago தலைக்கு மேல ஊட்டியையே தூக்கி வச்ச மாதிரி இருக்கும்! டிராஃபிக் போலீசாருக்கு ஏசி ஹெல்மெட் வந்தாச்சு!
Don't Miss!
- News பள்ளிக்கரணை ஆணவக் கொலையால் இறந்த கணவன்.. துக்கம் தாளாமல் விஷம் குடித்து தற்கொலை செய்த மனைவி
- Movies பழனிக்கே பஞ்சாமிர்தமா?.. கூலி படத்தோட கதையில பல வருஷத்துக்கு முன்னாடியே ரஜினி நடிச்சிட்டாரே பாஸ்!
- Technology பிளிப்கார்ட் பிச்சிக்குது.. வெறும் ரூ.13,999 போதும்.. OIS கேமரா.. 6000mAh பேட்டரி.. 1TB மெமரி.. எந்த மாடல்?
- Finance 15-15-15 ரூல் பயன்படுத்தி ரூ. 1 கோடி பெறுவது எப்படி? இதை நோட் பண்ணுங்க!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Lifestyle நீங்க ஏ.சி. போட போறீங்களா? இந்த 3 விஷயங்களை செய்ய மறந்துடாதீங்க...!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பெட்ரோல் பங்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் ரூ.20 லட்சம் வரை கொள்ளையடித்த ஊழியர்கள்; அதிர்ச்சி ரிப்போர்ட்
பெட்ரோல் பங்கில் ஸ்கிம்மர் கருவி மூலம் ரூ.20 லட்சம் வரை கொள்ளையடித்த ஊழியர்கள்; ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்..!!
பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களின் ஏ.டி.எம் கார்டு விவரங்களை நூதன முறையில் திருடி ரூ.20 லட்சம் வரை கொள்ளையடித்த பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை ராஜவீதியை சேர்ந்த மகாலிங்கம் கணக்கிலிருந்து திடீரென ரூ.59 ஆயிரம் ரூபாய் மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரை விசாரித்த வந்த போலீசார், மகாலிங்கத்தின் ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை தெரிந்துக்கொண்டு பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டுபித்தனர்.
ஏடிஎம் கார்டை எங்கெல்லாம் மகாலிங்கம் பயன்படுத்தினார் என்பதை அவரிடன் கேட்டனர். அப்போது அவர் கோவை அவிநாசி சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி வழக்கமாக பெட்ரோல் போடுவதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அந்த பெட்ரோல் பங்கையும், அங்கு வேலை செய்யும் ஊழியர்களையும் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர்.
பெட்ரோல் பெற்றுக்கொண்டு ஏடிஎம் கார்டில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம், கார்டை கொடுக்கும் முன், மற்றொரு கருவியில் கார்டை ஸ்வைப் செய்து தரும் இரண்டு ஊழியர்களை போலீசார் கவனித்தனர்.
அதற்கு பிறகு அதே பகுதியில் ஒருவாரமாக பல்வேறு வேடங்களில் அந்த இரு ஊழியர்களையும் போலீசார் தொடர்ந்து கவனிக்க தொடங்கினர்.
ஏடிஎம் காரட்டை பயன்படுத்தி செல்லும் வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து இதே போல அந்த இரு ஊழியர்களும் செய்து வந்தனர்.
இதனையடுத்து அவர்களை இருவரையும் கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது அவர்களின் பெயர் ஆனந்த் மற்றும் மகேந்திரன் என்பது தெரியவந்தது. பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்களின் ஏடிஎம் கார்டுகளை ஸிம்மர் கருவிகளை தேய்த்து,
அதன் மூலம் கார்டின் எண் மற்றும் கடவு எண்களை பெற்று பிறகு புதிய கார்டு தயாரித்து பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது.
பெட்ரோல் பங்கிற்கு வரும் வாடிக்கையாளர்கள் சிலர், உரிய விழிப்புணர்வு இல்லாமல், ஏடிஎம் கடவு எண்களை ஊழியர்களிடம் கொடுத்து விடுகின்றனர்.
கடவு எண்ணை பெறும் ஊழியர்கள், கார்டின் எண்ணை ஸ்கிம்மரின் மூலமாக பெற்று கடவு எண்ணை பயன்படுத்தி பணத்தை வேறு கணக்கிற்கு மாற்றிவிடுகின்றனர்.
மேலும் பணமாக மட்டுமில்லாமல், ஆன்-லைனில் பொருட்கள் வாங்குவது, அதற்கான பணத்தை கார்டில் இருந்து பெறுவது என இதுவரை ரூ. 20 லட்சம் வரை ஆனந்த் மற்றும் மகேந்திரன் மோசடி செய்து சம்பாதித்துள்ளனர்.
இருவர்களை கைது செய்த போலீசார் மேலும் பல விசாரணைகளை அவர்களிடம் மேற்கொண்டு வருகின்றனர். கூடவே இதுபோன்ற 40 புகார்கள் வரை போலீசாருக்கு கூடுதலாக கிடைத்துள்ளது.
இதனிடையே வாடிக்கையாளர்கள் எங்கு சென்றாலும் ஏடிஎம் கடவு எண்ணை யாருக்கும் தர வேண்டாம் எனவும், கார்டை ஸ்வைப் பண்ணும் போது, மெஷினில் வேறு எதாவது கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதில் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் எனவும் பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
-
டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
-
மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
-
இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!