Just In
- 46 min ago சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- 1 hr ago பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- 2 hrs ago எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா இல்ல உல்லாச கப்பலா! இந்தியாவே காத்து கிடக்கும் வண்டிக்கு புக்கிங் தொடங்கியது!
- 3 hrs ago இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Movies Actress Nayanthara: படத்திற்கு படம் சம்பளத்தை ஏற்றும் நயன்தாரா?.. த்ரிஷாவை தொடர்ந்து அதிரடி?
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
காற்று மாசை தடுக்க பெய்ஜிங்கில் 180,000 வாகனங்களுக்கு சீன அரசாங்கம் திடீர் தடை..!
உலகின் முக்கிய நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்கில் காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதற்கு சீனா எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன? பார்க்கலாம்.
அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசால், சீனாவின் தலைநகரமான பெய்ஜிங்கில் இந்தாண்டு ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரையில் 180,000 பழைய வாகனங்களுக்கு தடை விதித்துள்ளது சீன அரசு.
பெய்ஜிங் நகரத்தை பாதுகாக்க சீன அரசால் 2015ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட குழுவினரால் இந்த ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெய்ஜிங் நகரத்தை காக்க சீன அரசு 2015ம் ஆண்டில் ஒரு தனிக்குழுவை அமைத்திருந்தாலும், வாகனங்களால் ஏற்படும் மாசு குறைப்பாட்டை தடுக்க சீன அரசு 2013ம் ஆண்டிலேயே வேலையை தொடங்கிவிட்டது.
2013ம் ஆண்டிலிருந்து 2017 ஏப்ரல் மாதம் வரை பெய்ஜிங்கில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக கூறி 3 லட்சம் எண்ணிக்கையிலான அனைத்து ரக வாகனங்களை சீன அரசு தடை செய்தது.
சமீபத்திய காலங்களில் அபாயகரமான அளவையும் தாண்டி, பெய்ஜிங்கின் சுற்றுச்சூழல் மாசு அடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதத்தில் பெய்ஜிங் முழுவதும் ‘ரெட் அலர்ட்' கொடுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு விடுமுறையை அறிவித்தது சீன அரசு.
5 நாட்களுக்கு சாலை மற்றும் மாற்று வழிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்க தடை, பெய்ஜிங் வாசிகள் வீட்டை விட்டு வெளிவரக்கூடாது என கெடுபிடியான உத்தரவுகளை பிறப்பிக்கும் அளிவிற்கு பெய்ஜிங்கின் சுற்றுச்சூழல் அதல பாதளத்திற்கு சென்று விட்டது.
உலகின் மிக பரபரப்பான நகரங்களில் ஒன்றான பெய்ஜிங்கில் சுற்றுச்சூழலில் மாசு ஏற்பட காரணமாகயிருப்பது வாகனங்களால் உருவாகும் மாசு தான் என சீனாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை அமைச்சர் சென் ஜின்னிங் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங் நகரில் உருவாகும் சுற்றுசூழல் குறைபாட்டில் 31 சதவீத அளவிலான பங்கை வாகனங்களினால் உருவாகும் புகை ஏற்படுத்துவதாக சென் ஜின்னிங் தெரிவித்துள்ளார்.
பெய்ஜிங் நகரத்தில் நைட்ரஜன் ஆக்சைடு நச்சு காற்றின் வெளியேற்றம் அதிகமாக இருப்பதாகவும், அதனாலேயே தூசுப் புகை பெய்ஜிங் முழுக்க பரவி வருவதாகவும் அந்நகரத்தின் நகராட்சி சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் பெய்ஜிங்கில் தூசுக்களை சுவாசிக்கும் அளவு ஒரு கன மீட்டருக்கு 95 மைக்ரோகிராம்கள் அதிகரித்துள்ளது. இதன்மூலம் 69.6 சதவீதத்திலான காற்று மாசடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
காற்று மாசுகுறைப்பாட்டை குறைக்கும் அளவில் சீனா சுகாதாரம் சார்ந்த செயல்பாடுகளை முறைப்படுத்தவேண்டும் என்பது உலக சுகாதார மையத்தில் அறிவுரையாக உள்ளது.
இதை ஏற்றுக்கொண்டு பெய்ஜிங்கில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு 2013-2017 வான் மாசுபாடுகள் களையப்படும் என சீனா உறுதியளித்துள்ளது.
இதன்மூலம் இந்தாண்டின் இறுதிக்குள் பெய்ஜிங் நகரத்தை சுற்றியுள்ள காற்று மாசுவில் 69.6 மைக்ரோ கிராம் அளவிலிருந்து 60 மைக்ரோ கிராமாக குறைக்கப்பதற்கான நடவடிக்கைகளை சீன அரசாங்கம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
-
ரோட்ல இந்த நிறுவனத்தோட வண்டி நின்னா எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பாப்பாங்க! ஜேசிபி செய்த புதிய சாதனை!
-
6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!