கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

பெங்களூரு மாநகரை கலக்கி கொண்டுள்ள தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சினிமாவையே விஞ்சி விடக்கூடிய வகையிலான 'அன்டர் கவர் ஆபரேஷன்' ஒன்றை நடத்தி, பிரபல கொள்ளையர்களை பிடித்துள்ளார்.

பெங்களூரு மாநகரை கலக்கி கொண்டுள்ள தமிழக ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சினிமாவையே விஞ்சி விடக்கூடிய வகையிலான மற்றும் உயிருக்கே ஆபத்தான 'அன்டர் கவர் ஆபரேஷன்' ஒன்றை நடத்தி, நீண்ட நாட்களாக போலீசாரின் கண்களில் மண்ணை தூவி வந்த கொள்ளை கும்பலை பிடித்துள்ளார்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

பெங்களூரு புறநகர் பகுதிகளில், லாரி டிரைவர்களை வழிமறித்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள், கடந்த சில மாதங்களாக வரிசையாக நடைபெற்று வந்தன. இதன் உச்சகட்டமாக ஒரு லாரி டிரைவர் கொலையே செய்யப்பட்டார். அவர் பெயர் பாஸ்கர் (44).

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

கடந்த நவம்பர் மாதம் 3ம் தேதியன்று, சந்தாபுரா பகுதியில் இருந்து ஓசூர் ரோடு நோக்கி, பாஸ்கர் லாரியில் வந்து கொண்டிருந்தார். அப்போது தலகட்டாபுரா 80 அடி ரோடு அருகே மர்ம கும்பல் ஒன்று அவரை வழிமறித்து தாக்கி கொலை செய்தது.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

சரியாக அதற்கு 2 நாட்களுக்கு பிறகு மற்றொரு விபரீத சம்பவம் அரங்கேறியது. கேஎஸ் லே அவுட் பகுதியில், மற்றொரு லாரி டிரைவரிடம் கொள்ளையடிக்கப்பட்டது. பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த சம்பவங்களின் காரணமாக, உடனடியாக போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

முதற்கட்டமாக மேற்கண்ட 2 சம்பவங்களும் நடைபெற்ற பகுதிகளுக்கு சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், மர்ம நபர்களின் உருவம் பதிவாகியிருந்தது. ஆனால் அவர்களின் முகம் தெளிவாக தெரியவில்லை.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

இதனால் என்ன செய்வது என்று போலீசார் யோசித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில்தான், 'அன்டர் கவர் ஆபரேஷன்' ஒன்றை நடத்தி, கொள்ளையர்களை பிடிப்பது என்ற அதிரடியான முடிவை போலீசார் எடுத்தனர். இந்த 'அன்டர் கவர் ஆபரேஷன்' சினிமாக்களையே விஞ்சி விட்டது. இது வேற லெவல் ரகம்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்ற பகுதிகளில், 2 லாரிகளை போலீசார் நிறுத்தி விட்டனர். அத்துடன் டிரைவர்கள் போல் மாறுவேடமிட்டு கொண்டு, லாரியில் அமர்ந்து கொண்டனர். அப்போது கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வரும் கும்பலை பிடிக்க வேண்டும் என்பதே போலீசாரின் திட்டம்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

போலீசார் கணித்தது பொய்யாகவில்லை. எதிர்பார்த்தது போலவே கொள்ளை கும்பலை சேர்ந்த மூன்று பேர் ஒரு லாரிக்கு வந்தனர். சற்றும் தாமதிக்காத போலீசார், அவர்களை சுற்றிவளைத்து பிடித்து, அதிரடியாக கைது செய்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

சையத் சல்மான் (21), முகமது முடாசீர் (எ) முட்டு (24) மற்றும் சையது தோஹித் (28) ஆகிய மூன்று பேர்தான், தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள். இவர்கள் மூவரும் பெங்களூருவை சேர்ந்தவர்கள்தான்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

இந்த அன்டர் கவர் ஆபரேஷன் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''எஸ்ஐ சுப்ரமணி, போலீஸ் கான்ஸ்டபிள்கள் பிரதீப் மற்றும் மகேஷ் ஆகியோர்தான் லாரி டிரைவர்கள் போல் மாறு வேடமிட்டு சென்று கொள்ளையர்களை கையும், களவுமாக பிடித்தவர்கள்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

இந்த அன்டர் கவர் ஆபரேஷன் ஒரே நாளில் வெற்றியடைந்து விடவில்லை. தினந்தோறும் இரவு நேரங்களில் நாங்கள் வேண்டுமென்றே லாரிகளை அங்கு கொண்டு சென்று நிறுத்துவோம். இதில், ஒரு நாளில்தான் கொள்ளையர்கள் சிக்கினர்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடக்கூடிய அபாயம் கூட இந்த அன்டர் கவர் ஆபரேஷனில் நிலவி வந்தது. ஆனால் போலீசார் மூவரும், அதனை எல்லாம் பொருட்படுத்தாமல், கொள்ளையர்களை பிடித்துள்ளனர். எனினும் தங்களை தற்காத்து கொள்ள பெப்பர் ஸ்பிரே, ஆயுதங்களை போலீசார் பயன்படுத்தினர்'' என்றார்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

இந்த அன்டர் கவர் ஆபரேஷனுக்கு மூளையாக செயல்பட்டவர் அண்ணாமலை ஐபிஎஸ். இவர் பெங்களூரு மாநகர போலீசின் (தெற்கு) துணை கமிஷனர். ஏனுங்க... இவரு நம்ம கோயமுத்தூரு காரருங்கோ... ஆம், பெங்களூருவை ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் அண்ணாமலை ஐபிஎஸ் கோவையை சேர்ந்தவர்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

பெங்களூரு நகரை மட்டுமல்ல... ஒட்டுமொத்த கர்நாடக மாநிலத்தையே அண்ணாமலை ஐபிஎஸ் கலக்கி கொண்டிருக்கிறார் என்பதே உண்மை. இதற்கு முன்னதாக கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தின் எஸ்பியாக அண்ணாமலை ஐபிஎஸ் பணியாற்றி வந்தார்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

இந்த சூழலில் சமீபத்தில்தான், பெங்களூரு மாநகர போலீசின் (தெற்கு) துணை கமிஷனராக அண்ணாமலை ஐபிஎஸ் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் பெரும்பாலும் ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர்களுக்குதான் ஃபேன்ஸ் கிளப் இருக்கும்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

ஆனால் தமிழரான அண்ணாமலை ஐபிஎஸ்-க்கு, ஃபேன்ஸ் கிளப் வைத்து கொண்டாடி கொண்டிருக்கின்றனர் கன்னடிகாஸ். ஆம், உண்மைதான். பெங்களூரு மாநகரில் அண்ணாமலை ஐபிஎஸ்-க்கு ஃபேன்ஸ் கிளப் உள்ளது. அண்ணாமலை ஐபிஎஸ் ஃபேன்ஸ் கிளப் என்ற பெயரில் பேஸ்புக் பக்கமும் செயல்பட்டு வருகிறது.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

மக்கள் அனைவரிடத்திலும் நட்புடன் பழக கூடியவர் என்பதால்தான், ஒரு சினிமா நடிகரை காட்டிலும், அதிகப்படியான ரசிகர் கூட்டம் அண்ணாமலை ஐபிஎஸ்-ஐ பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கன்னட மக்கள் இவரை 'கர்நாடகா சிங்கம்' என அன்போடு அழைக்கின்றனர்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

பத்திரிக்கைகளும் கூட அப்படித்தான் எழுதுகின்றன. கோயமுத்தூரை சேர்ந்தவரான நடிகர் சூர்யா, சிங்கம் படத்தில் நேர்மையான, அன்பான போலீஸ் அதிகாரியாக நடித்தார். அதே கோயமுத்தூரை சேர்ந்த அண்ணாமலை ஐபிஎஸ், நிஜத்தில் அவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

இவர் கோவையில் மிக பிரபலமாக உள்ள பிஎஸ்ஜி கல்லூரியில், பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் (2007 பேட்ஜ்) படித்தவர் என்பது கூடுதல் தகவல். இப்படி கன்னட மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி கொண்டிருக்கும் அண்ணாமலை ஐபிஎஸ்தான் அன்டர் கவர் ஆபரேஷனுக்கு மூளையாக செயல்பட்டவர்.

கொள்ளையர்களை பிடிக்க சினிமாவை விஞ்சும் 'அன்டர் கவர் ஆபரேஷன்'.. பெங்களூருவை கலக்கும் தமிழக ஐபிஎஸ்

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு சமீபத்தில் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது (அவரது பதவிக்காலத்தை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்திருப்பது தனிக்கதை). அப்போது ''என் பணியை இளைஞர்களை நம்பி விட்டு செல்கிறேன்'' என அவர் உருக்கமான பேசினார். அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர்தான் அண்ணாமலை ஐபிஎஸ்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட்
English summary
Bengaluru Cops Turn Lorry Drivers To Catch Highway Robbers. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X