Just In
- 2 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 3 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 3 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- 5 hrs ago கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மும்பை சாலைகளை கலக்க போகிறது... டபுள்-டெக்கர் பஸ்களின் எண்ணிக்கையை மீண்டும் உயர்த்தும் பெஸ்ட்
மும்பை நகரில் டபுள்-டெக்கர் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தும் நடவடிக்கைகளை பெஸ்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
மஹாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில், பெஸ்ட் (BEST - Brihanmumbai Electricity Supply and Transport) நிறுவனம் பேருந்துகளை இயக்கி வருகிறது. பெஸ்ட் நிறுவனம் வெகு விரைவில் 100 புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளை வாங்கவுள்ளது. பெஸ்ட் நிறுவனத்திடம் தற்போது ஒட்டுமொத்தமாக 75 டபுள்-டெக்கர் பேருந்துகள் உள்ளன.
இந்த 75 பழைய டபுள்-டெக்கர் பேருந்துகளும் வரும் 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்கிராப் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அதற்கு பதிலாக 100 புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களை போல் அல்லாமல், புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளில், முன் பகுதியிலும், பின் பகுதியிலும் உள்ளே ஏறுவதற்கான வழி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!
இதுகுறித்து பெஸ்ட் அதிகாரிகள் கூறுகையில், ''இந்த புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள், நடத்துனர்களுக்கான தகவல் தொடர்பு தொகுப்பு உள்பட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது'' என்றனர். ஆனால் இந்த டபுள் டெக்கர் பேருந்துகளில் குளிர்சாதன வசதி இருக்காது.
இதற்கான டெண்டர் கடந்த நவம்பர் 11ம் தேதி கோரப்பட்டது. இதுகுறித்து பெஸ்ட் அதிகாரிகள் கூறுகையில், ''புதிய டபுள்-டெக்கர் பேருந்துகள் வருவதற்கு கொஞ்ச காலம் ஆகும். ஆனால் தனித்துவமான டபுள்-டெக்கர் பேருந்துகளை நாங்கள் தொடர்ந்து இயக்குவோம்'' என்றனர். அதே நேரத்தில் டபுள்-டெக்கர் பேருந்துகளின் டிசைனில் மாற்றங்கள் செய்வது குறித்து நிர்வாகம் பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சுமார் 15 ஆண்டு இடைவெளிக்கு பிறகு, புதிய டபுள்-டெக்கர் பேருந்துகள் வாங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் 120 டபுள்-டெக்கர் பேருந்துகளை கைவசம் வைத்திருக்க பெஸ்ட் நிறுவனம் விரும்புவதாகவும் தெரிகிறது. இதில், 100 டபுள்-டெக்கர் பேருந்துகள் விரைவில் வாங்கப்படவுள்ளன. எஞ்சிய 20 டபுள்-டெக்கர் பேருந்துகள் அதன்பின் வாங்கப்படலாம் என கூறப்படுகிறது.
ஒட்டுமொத்தமாக 896 பேருந்துகளை ஸ்கிராப் செய்வதற்கான நடவடிக்கைகளை பெஸ்ட் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருகிறது. இதில் நாம் ஏற்கனவே கூறியபடி 75 டபுள்-டெக்கர் பேருந்துகளும் அடக்கம். இந்த பேருந்துகளின் வயது 15 ஆண்டுகளை கடந்து விட்டது. மிகவும் பழையதாகி விட்டதால், அவற்றை ஸ்கிராப் செய்து விடுவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
பெஸ்ட் நிறுவனம் முதலில் 120 டபுள்-டெக்கர் பேருந்துகளை இயக்கி வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை வெறும் 75 ஆக சுருங்கி விட்டது. எனவே அதனை மீண்டும் 120 ஆக உயர்த்துவதற்கான முயற்சிகளை பெஸ்ட் நிறுவனம் தற்போது மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கெல்லாம் முன்னதாக கடந்த 1947ம் ஆண்டு, 242 டபுள்-டெக்கர் பேருந்துகள் இருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2010ம் ஆண்டு வெறும் 122 ஆக குறைந்தது. அதன்பின் வந்த ஆண்டுகளில், டபுள்-டெக்கர் பேருந்துகளின் எண்ணிக்கை மேலும் குறைந்து விட்டது. இது தொடர்பாக மும்பை மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலையில் பொது மக்கள் மத்தியில் பொது போக்குவரத்து மீதான ஆர்வம் குறைந்து வருகிறது. கொரோனா தொற்று ஏற்படலாம் என்பதால், பேருந்துகளை தவிர்த்து விட்டு, சொந்த கார்களில் பயணிப்பதையே மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சூழலில், பெஸ்ட் நிறுவனம் புதிய டபுள்-டெக்கர் பேருந்துகளை வாங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீன நிறுவனம் காரையே புளிப்பு மிட்டாய் கணக்கா உற்பத்தி பண்ணிட்டு இருக்கா.. நம்பவே முடியல 7 மில்லியனை தொட்ருச்சு
-
பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
-
இது ஏப்ரல் ஃபூல் கிடையாது.. டாடா அல்ட்ராஸ் ரேஸர் கார் ஏப்ரல்ல அறிமுகமாக போகுது! இறங்கி அடிக்க தயாராகும் டாடா!