Just In
- 1 hr ago அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- 6 hrs ago உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- 6 hrs ago மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!! மொத்தமும் எலக்ட்ரிக் தான்!
- 7 hrs ago பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
Don't Miss!
- News நீதித்துறைக்கு பெரும் அச்சுறுத்தல்- 600 வழக்கறிஞர்கள் திடீர் கடிதம்! காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
மயிரிழையில் உயிர் தப்பிய பைக் ஓட்டுனர்- லாரி வந்த வேகத்திற்கு மோதி இருந்தால்... நினைத்து கூட பார்க்க முடியல...
பைக் ஓட்டுனரின் கவனக்குறைவால் இரு லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட கோர சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. நெஞ்சை பதப்பதைக்க வைக்கும் இந்த விபத்தினை பற்றி இனி செய்தியில் பார்ப்போம்.
லாரி, பேருந்து விபத்துகள் பெரும்பாலும் அவற்றின் பாதையில் வேறு எதாவது வாகனமோ அல்லது ஆட்களோ அல்லது விலங்கோ குறுக்கிடும்போது தான் நிகழ்கின்றன என்று புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.
அதாவது ஓட்டுனர் போதையில் இல்லாமல், சாலையில் மட்டும் கவனம் செலுத்தி இருந்தால் வாகனம் அதி வேகத்தில் சென்றால் கூட விபத்துகள் ஏற்படுவதில்லையாம். சாலையில் திடீரென குறுக்கிடும் பொருட்களே கனரகம் மட்டுமின்றி எந்தவொரு வாகனத்தின் ஓட்டுனரையும் கட்டுப்பாட்டை இழக்க செய்கின்றன.
இருசக்கர வாகனங்கள் மற்றும் சிறிய அளவிலான வாகனங்கள் என்றால் மீண்டும் வாகனத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட முடியும். ஆனால் லாரி, பேருந்துகளில் மீண்டும் கட்டுப்பாட்டை கொண்டுவருவது என்பது நீண்ட கால அனுபவம் கொண்ட ஓட்டுனர்களுக்கே சற்று சிரமம் தான்.
இப்படிப்பட்ட ஒரு விபத்து தான் கடந்த திங்கட்கிழமை தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது. விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ இரு கோணங்களில் விபத்தை காட்டும் விதத்தில் கிடைத்துள்ளது.
இந்த வீடியோவை வைத்து பார்க்கும்போது, விபத்திற்கு பைக் மற்றும் லாரி ஓட்டுனர் இருவர்களின் மீதும் தவறு உள்ளது. குடியிருப்புகள் மிகுந்த பகுதியில் இவ்வளவு வேகமாக வந்தது லாரி ஓட்டுனரின் தவறு.
என்றாலும், அவர் சாலையின் ஓரத்தை ஒட்டியவாறு வேகமாக வரவில்லை. சாலையின் வலதுபுறத்தில் வேகமாக செல்வதற்கு ஏற்ற பாதையில் தான் வந்துள்ளார். இதனால் இந்த விபத்திற்கு முழு காரணமும் அந்த பைக் ஓட்டுனரின் மீது தான் உள்ளது.
மறுபக்க சாலைக்கு செல்ல முயன்றவர் இந்த சாலையை கவனிக்க மறந்துவிட்டார். அவரது இந்த கவன குறைவே இந்த விபத்திற்கு முழு காரணம். பைக் மீதான மோதலை தவிர்ப்பதற்காக எதிர் சாலைக்கு லாரியை திருப்பிய லாரி ஓட்டுனருக்கு பேரதிர்ச்சியாக எதிர்புறத்தில் மற்றொரு லாரி வர, இரு லாரிகளும் மோதி கொண்டுள்ளன.
பைக் ஓட்டுனர் அப்போதுதான் பைக் ஸ்டார்ட் செய்ததால் மெதுவாக வந்தார். சற்று வேகமாக வந்திருந்தால் ஒன்று இந்த விபத்தே நடந்திருக்காது, அல்லது லாரி பைக்கின் மீது அதிவேகத்தில் மோதி இருக்கும். அதேபோல் இந்த விபத்து நடந்தது அதிகாலை போல் தெரிவதால், இந்த இரு லாரிகளை தவிர்த்து வேறெந்த வாகன ஓட்டிக்கும் சேதம் ஏற்படவில்லை.
இதில் இரு லாரி ஓட்டுனர்களும் மிகவும் தீவிர சிகிச்சையில் மருத்துவமனையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பைக் ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் எனவும், அவரது ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட வேண்டும் எனவும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
சிசிடிவி வீடியோ இல்லை என்றால் நிச்சயம் விபத்திற்கான பழி முழுவதும் ஒரு லாரி ஓட்டுனரின் மீது விழுந்திருக்கும். பைக் ஓட்டுனர் தப்பித்திருப்பார். இதனால் தான் சிசிடிவி கேமிராக்களின் பயன்பாடு அவசியம் என்கிறோம்.
-
மெழுகு சிலை மாதிரி இருக்காங்க... இவங்க அந்த படத்துல நடிச்சவங்களா... வீடியோவை கண் இமைக்காமல் பார்க்கும் இளசுகள்
-
காருக்குள் பறக்கும் வாகனம்.. சாலையில் ஓட்டிக்கலாம்.. தேவைப்பட்டால் வானிலும் பறந்துக்கலாம்!
-
ரூ.5 லட்சத்தை கையில் வைத்துக்கொண்டு அல்லாடுறீங்களா? பவர்ஃபுல் பைக்ஸுக்கு நம் நாட்டில் எப்போதுமே குறை இல்லை!!