போலி லாம்போர்கினி மூலம் ரூ 500 கோடி மக்கள் பணத்தை ஏமாற்றி வெளிநாடு தப்பிய அடுத்த மல்லையா
போலி லாம்போர்கினி காரை வைத்துகொண்டு மக்களிடம் ரூ500 கோடியை ஏமாற்றியவரை பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்த போது தான் அவர் வைத்திருந்தது போலி
போலி லாம்போர்கினி காரை வைத்துகொண்டு மக்களிடம் ரூ500 கோடியை ஏமாற்றியவரை பிடிக்க போலீசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். அவரது சொத்துக்களை பறிமுதல் செய்த போது தான் அவர் வைத்திருந்தது போலி லாம்போர்கினி கார் என்பது தெரியவந்தது.

சமீபகாலமாக கிரிப்டோகரென்ஸியில் இந்தியர்கள் பலர் முதலீடு செய்து வருகின்றனர். குறிப்பாக கிரிப்டோகரென்ஸியில் பிட்காயினில் தான் அதிகம் பேர் முதலீடு செய்கின்றனர். அதற்கு முக்கிய காரணம் அதன் வளர்ச்சி தான்.

ஆனால் கிரிப்டோ கரென்ஸி இன்னும் சட்டப்பூர்வ மார்க்கப்படவில்லை. இதனால் பலர் இதன் பெயரில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகிறது. அப்படியாக பணம் பறிந்ததாக பணம் மஹாராஷ்டிரா மாநிலம் அரோலி பகுதியை சேர்ந்த அமித் லஹல்பால் என்பவர் மீது புகார் வந்தது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. ஆனால் தற்போது அமித் துபாய்க்கு தப்பி சென்றுவிட்டார். அதனால் அவரை போலீசாரல் கைது செய்ய முடியவில்லை. ஆனால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய போலீசார் முடிவு செய்தனர்.

இதையடுத்து அவரிடம் இருந்த டிசி அவன்டி மற்றும் பென்ஸ் கார்களை பறிமுதல் செய்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் அவர்கள் பறிமுதல் செய்த மஞ்சள் நில டிசி அவன்டி காரில் பின்புறம் லாம்போர்கினி காரின் பேட்ஜூம், லாம்போர்கினி என்ற எழுத்தும் பதிவு பதியப்பட்டிருந்தது.

இதை கண்ட போலீசார் இதை உண்மையான லாம்போர்கினி கார் என்ற கருதினர். ஆனால் இந்த கார் டிசி அவன்டி காரை லாம்போர்கினி போல பல லட்சம் ரூபாய் செலவு செய்து மாடிஃபிகேஷன் செய்துள்ளார்.

ஒரிஜினல் லாம்போர்கினி காரை வாங்க இந்தியாவில் பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டியது வரும். லாம்போர்கினி காரை செகண்ட் ஹேண்டாக வாங்கினால் கூட ரூ 1 கோடி ரூபாய் ஆகும். ஆனால் இவர் வாங்கியுள்ள டிசி அவன்டி கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்போர்ட்ஸ் கார். இதன் விலை வெறும் 36 லட்சம் தான்.

இந்த காரை செகண்ட் ஹோண்டில் வாங்கினால் இதை விட மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும். இந்த டிசி அவன்டி கார் ஃபோர்டு நிறுவனம் தயாரித்த 2.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இன்ஜினுடன் விற்பனைக்கு வந்துள்ளது. இது 240 பிஎச்பி பவரையும், 366 என்எம் டார்க் திறனையுள் வழங்ககூடியது. ஒரிஜினல் லாம்போர்கினி கார் இதை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது.

தற்போது அமித்தின் சொத்துக்களை பறிமுதல் செய்துள்ள போலீசார் அவரை துபாயில் இருந்து வரவழைக்க முயற்சிகைள மேற்கொண்டு வருகின்றனர். அவர் இதுவரை சுமார் ரூ 500 கோடி வரை அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை வைத்து பார்க்கும் போது அமித் போலி லாம்போர்கினியை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றி ரூ 500 கோடியை சுருட்டு கொண்டு மல்லையா போல இவரும் வெளிநாட்டில் போய் தலை மறைவாகவுள்ளார். எது எப்படியோ தற்போது சமூக வலைதளங்களில் இவரது போலி லாம்போர்கினி தான்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications