Just In
- 2 hrs ago அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- 3 hrs ago இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- 4 hrs ago புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- 4 hrs ago ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
Don't Miss!
- News திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையையில் என்ன "ஓடிச்சி" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- Movies Actor Karthi: ஜூன் மாதத்தில் துவங்கும் சர்தார் 2 படத்தின் சூட்டிங்.. கதை என்ன தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!
டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் தவறான வழியில் சென்று சாலை விபத்தில் உயிரை விட்ட பாஜக எம்.எல்.ஏ..!!
உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரமான சாலை விபத்து ஒன்றில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான பாஜக-வின் சட்டமன்ற உறுப்பினர் லோகேந்திர சிங் பலியானார்.
உ.பி மாநிலத்தில் உள்ள பிஜ்னூர் மாவட்டம் நூர்பூர் தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் லோகேந்திரா சிங். தனிப்பட்ட பணிக்காக அவருக்கு சொந்தமான டொயோட்டா ஃபார்ச்சூனர் காரில் நெடுஞ்சாலை ஒன்றில் பயணம் மேற்கொண்டு இருந்தார்.
அப்போது அதே வழியில் வந்த டிரக்குடன் நேருக்கு நேர் மோதி, ஃபார்ச்சூனர் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் சம்பவ இடத்தில்யே எம்.எல்.ஏ லோகேந்திரா சிங் உயிரழந்தார்.
விபத்திற்கான காரணங்கள் பற்றி தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் சம்பவ இடத்தை பார்க்கும் போது விபத்து நடந்ததற்கான காரணங்கள் ஓரளவிற்கு புலப்படுகின்றன.
விபத்தில் சிக்கிய இரண்டு வாகனங்களும் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் சென்றிருப்பது தெரிகிறது. ஆனால் விபத்தை யார் ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதில் தெளிவில்லை.
இருந்தாலும் இதுக்குறித்து வெளியான புகைப்படங்களை ஆராயும் போது, நெடுஞ்சாலையில் லாரி வந்த பாதையில், தவறான வழியில் டொயோட்டா ஃபார்ச்சூனர் செலுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் விற்பனையாகும் எஸ்யூவி ரக மாடல்களில் டொயோட்டா ஃபார்சூன்னர் அதிக வலிமையான, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்புகளை கொண்ட காராக உள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இந்த விபத்தில், இந்த கார் பெரியளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும் காரின் முன்பகுதி அதிகளவில் சேதமாகி இருப்பதையும் பார்க்க முடிகிறது.
டொயோட்டா ஃபார்சூனர் காரில் பயணம் செய்த சட்டமன்ற உறுப்பினர் லோகந்திரா சிங்குடன், அவரது பாதுகாவலர் மற்றும் காரை ஓட்டி வந்தவரும் உயிரழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை, அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தில் மரணமடைந்த எம்.எல்.ஏ லோகந்திரா சிங்கிற்கு பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சாலையில் ஏற்படும் விபத்துக்களை நம்மில் யாரும் தடுக்க முடியாது என்பது நிதர்சனம் தான். ஆனால் அந்த விபத்து எப்படி நிகழ்கிறது என்பதில் தான் புரிதல் உள்ளது.
போக்குவரத்து விதிகளை மதிக்காமல், பாதுகாப்பு உபகரணங்களை அணியாமல், அதிவேகத்தில் செல்வது போன்ற காரணிகளே பெரும்பாலான விபத்திற்கு காரணங்களாக உள்ளன.
உத்திர பிரதேசத்தில் நடந்த இந்த சாலை விபத்தில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி செயல்பட்டு விபத்தில் உயிரிழந்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து விதி மீறல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும், அதை மீறுவோர் மீதான குற்ற நடவடிக்கைகளும் இந்தியாவில் கடுமையாக்கப்பட வேண்டும் என்பதை பல சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அதை அரசு இனியாவது கவனத்தில் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
சின்ன சேலம் அருகே தடம் மாறி நேருக்கு நேர் வந்த லோடு வேன்... மயிரிழையில் தப்பிய கார்!
நம் நாட்டு சாலைகளில் நடைபெறும் பெரும்பான்மையான விபத்துக்களுக்கு ஓட்டுனர்களின் கவனக்குறைவுதான் மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இதற்கு சான்றான ஒரு சம்பவம் குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி இருக்கிறது.
சின்ன சேலம்- வேப்பூர் இடையிலான மாநில நெடுஞ்சாலையில் ஃபியட் புன்ட்டோ கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது எதிரில் வந்த அசோக் லேலண்ட் தோஸ்ட் லோடு வேன் ஓட்டுனர் கவனக்குறைவு காரணமாக, திடீரென எதிர்புற தடத்தில் பாய்ந்து வருகிறது.
இதனை நொடிப்பொழுதில் கவனித்துவிட்ட, ஃபியட் புன்ட்டோ ஓட்டுனர் சாதுர்யமாக காரை எதிர்தடத்தில் செலுத்தி விபத்தை தவிர்த்துவிட்டார்.
ஒருவேளை, லோடு வேனுக்கு பின்னால் வேறு வாகனங்கள் வந்திருந்தால் நிச்சயம் ஃபியட் புன்ட்டோ கார் விபத்தில் சிக்குவதை தவிர்த்திருக்க முடியாது.
அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் வேறு வாகனங்கள் வராததால், ஃபியட் புன்ட்டோ கார் தப்பியது. ஃபியட் புன்ட்டோ காரில் இருந்த டேஷ்போர்டு கேமரா மூலமாக இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
நம் நாட்டு சாலைகளில் இதுபோன்று கவனக்குறைவால் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. ஃபியட் புன்ட்டோ கார் ஓட்டுனர் சரியான சமயத்தில் முடிவு எடுத்திருக்காவிட்டால், நிச்சயம் இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்தும், உயிர்ச்சேதமும் ஏற்பட்டு இருக்கும்.
சாலை காலியாக உள்ளதே என்று நம் நாட்டு சாலைகளை நம்பி போக முடியாததற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும். நாம் சரியாக போனாலும், எதிரில் வரும் வாகன ஓட்டிகளும் ஜாக்கிரதை உணர்வுடன் வந்தால் மட்டுமே விபத்துக்களிலிருந்து தப்ப முடியும்.
ஒவ்வொரு நொடியும் மிக கவனமாக கார் ஓட்டினால் மட்டுமே இதுபோன்ற ஓட்டுனர்களிடமிருந்து தப்பிக்க முடியும். மேலும், எதிரில் வரும் வாகனங்களின் நகர்வுகளையும் கணித்து ஓட்டுவதுடன், போதுமான இடைவெளி விட்டு மாறி செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்
பொதுவாக இதுபோன்ற இருவழித் தட சாலைகளில்தான் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. எனவே, இதுபோன்ற இருவழித்தடங்களில் செல்லும்போது மிகுந்த எச்சரிக்கை உணர்வுடனும், நிதானத்துடன் கார் ஓட்டுவது அவசியம்.
சூரிய உதயத்திற்கு முன்பாகவும், அந்திசந்தி வேளைகளிலும் இதுபோன்ற சாலைகளில் மிக மிக கவனமாக செல்லவும். அயர்ந்து விடும் வாகன ஓட்டிகளும் இந்த சாலைகளில் பேராபத்தை விளைவித்து விடுவார்கள்.
கண் இமைக்கும் நேரத்தில் இரு வாகனங்களும் கடந்து செல்லும் பதை பதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சிகளை இங்கே பார்க்கலாம்.
Video: Sai Aditya
-
உலக அரங்கில் இந்திய தயாரிப்புகளுக்கு ஓர் தலைக்குனிவு!! மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!
-
குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
-
பிரம்மாண்டத்துக்கு மறுபெயர் இதுதான்!! ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!