விமானங்களில் ஏற விஐபிகளுக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 கார்... டில்லி ஏர்போட்டில் புதிய ஏற்பாடு...
டில்லி ஏர்போர்ட்டில் விஐபிகளை அழைத்து செல்ல பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களை முழுமையாக காணலாம் வாருங்கள்.

நாம் எல்லோரும் வாழ்வில் ஒரு முறையாவது விமானத்தில் பயணிக்க வேண்டும் என ஆசைப்படுவோம். பலருக்கு அது சாத்தியமாகியிருக்கும். சிலருக்கு இன்னும் அந்த பாக்கியம் கிடைக்காமல் இருக்கும். விமானத்தில் பயணிப்பது என்பது ஒரு தனி அனுபவம். விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு விமான பயணத்திற்கு முன்பு உள்ள நடைமுறைகள் தெரியும்.

விமான நிலையங்களில் விமானங்களை நிறத்துவதற்கான இடம் இருக்கும். அங்கு விமானம் வந்து நின்றவுடன் விமானத்தின் கதவு அருகே பயணிகள் உள்ளே செல்ல வசதியாக நடைமேடை இணைக்கப்படும். இதன் பின்னர் விமானத்தின் கதவு திறக்கப்பட்டு அதன் வழியாக பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சில நேரங்களில் விமான நிலைய டெர்மனில்களில் கேட்கள் எல்லாம் முழுமையாக நிறந்துவிட்டால் விமான நிலையத்திலேயே ஆங்காங்கே விமானங்களை நிறுத்தி அங்கு வைத்து பயணிகளை விமானங்களில் ஏற்றுவார்கள். இதற்காக டெர்மனில்களிலிருந்து கார், பஸ், வேன் போன்ற வாகனங்களை பயன்படுத்தி பயணிகளை அழைத்து செல்வார்கள்.

இப்படியாக வாகனங்களை பயன்படுத்தி விமானங்களுக்கு அழைத்து செல்லும் போது அங்கு பயணிகள் தனது சொந்த வாகனங்களில் எல்லாம் செல்ல முடியாது. இதற்காக விமான நிலையம் சார்பில் நியமிக்கப்படும் வாகனங்களில் தான் கட்டாயம் பயணிக்க வேண்டும். இந்தியாவில் பெரும்பாலும் பஸ்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன.

வெளிநாடுகளில் ஒருவர் பயணிக்கும் வகுப்பை பொருத்து அவர் அழைத்து செல்லும் காரும் மாறுபடும். இப்படியாக இந்தியாவில் பொது வாகனங்களுக்கு இப்படி வசதியில்லை. ஆனால் தற்போது டில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் 4வது டெர்மினிலை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 4வது ரன்வே தயாராகி வருகிறது. அத்துடன் சேர்ந்து இந்த 4வது டெர்மனிலும் திறக்கப்படும்.

இந்த டெர்மினலில் விமானங்களில் ஏறுவதற்காக பயணிகளை ஏற்றி செல்லும் வாகனத்திற்கு பஸ் உடன் சேர்ந்து பிஎம்டபிள்யூ காரையும் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்காக பிஎம்டபிள்யூ X7 வாங்கப்பட்டுள்ளது. இந்த கார்கள் பிஸ்னஸ் மேன்கள், சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள மனிதர்கள் விமானத்தில் செல்லும் போது அவர்களை விமானத்தின் அருகே அழைத்து செல்ல இந்த பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல 4வது டெர்மினலில் உள்ள விஐபி லாஞ்ச்சில் பிஎம்டபிள்யூ லைஃப்ஸ்டைல் கலெக்ஷன்கள் ஷோக்கேஷ் செய்யப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மிக முக்கியமாக பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் அதன் ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இனி படிப்படியாக இந்தசேவை மற்ற விமான நிலையங்களுக்கும் கொண்டு வரப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








