இப்படியா நடந்து கொள்வது? இளம் நடிகரும், நடிகையும் காரில் செய்த காரியம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...
இளம் நடிகர், நடிகை மீது காவல் துறையினர் தற்போது அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கோவிட்-19 ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மற்றும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஆகியோர் மீது மும்பை காவல் துறையினர் தற்போது அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். மதியம் 2 மணிக்கு பிறகு, மும்பையின் பந்த்ரா பகுதியில், உரிய காரணங்கள் எதுவுமில்லாமல் அவர்கள் இருவரும் காரில் சுற்றியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவர்கள் இருவர் மீதும் காவல் துறையினர் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அது என்ன 2 மணிக்கு பிறகு என இங்கே உங்களுக்கு சந்தேகம் வரலாம். மஹாராஷ்டிரா மாநிலத்தில் வரும் ஜூன் 15ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அங்கு ஓரளவிற்கு குறைந்துள்ளதால், அங்கு சில தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

எனினும் மதியம் 2 மணிக்கு மேல் யாரும் தேவையில்லாமல் வெளியே வர கூடாது. அத்தியாவசியமான பணி இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும். ஆனால் டைகர் ஷெராப் மற்றும் திஷா பாட்னி ஆகியோர் உரிய காரணம் இல்லாமல், மதியம் 2 மணிக்கு பிறகு வெளியே வந்துள்ளனர். இதனால் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டைகர் ஷெராப்பும், திஷா பாட்னியும் ஒரே காரில் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல் துறையினர் சிலர் அவர்கள் வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது டைகர் ஷெராப் காரின் பின் இருக்கையிலும், திஷா பாட்னி பாசஞ்சர் இருக்கையிலும் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. இதன்பின் அவர்களுடைய ஆதார் அட்டையை காவல் துறையினர் பரிசோதித்துள்ளனர்.

இதன்பின் அவர்கள் இருவரும் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. டைகர் ஷெராப்பும், திஷா பாட்னியும் ஜிம்முக்கு சென்று விட்டு காரில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, காவல் துறையினரிடம் சிக்கி கொண்டதாக கூறப்படுகிறது. எனினும் மதியம் 2 மணிக்கு பிறகு, வெளியே வந்தது ஏன்? என்பதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட முதல் அலை போல் தற்போது நாடு தழுவிய அளவில் மத்திய அரசு ஊரடங்கை பிறப்பிக்கவில்லை. அதற்கு பதிலாக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளே ஊரடங்கை பிறப்பித்து கொண்டன.

எனினும் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி தொடர்ந்து பலர் வாகனங்களில் வெளியே சுற்றி கொண்டுள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் கடும் நடவடிக்கைகளை எடுத்து கொண்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறி, தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல் துறை அதிகாரிகள் அதிரடியாக வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக வரும் வாரங்களில், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








